மத்தேயு Chapter 1அத்தியாயம்– 1 1 | x-strong="" x-lemma="" x-morph="" x-occurrence="1" x-occurrences="1" x-content="Ἀβραάμ"ஆபிரகாமின் மகனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவின் வம்சவரலாறு 2 ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான் ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான் யாக்கோபு யூதாவையும் அவனுடைய சகோதரர்களையும் பெற்றான் 3 யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான் பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான் எஸ்ரோம் ஆராமைப் பெற்றான் 4 ஆராம் அம்மினதாபைப் பெற்றான் அம்மினதாப் நகசோனைப் பெற்றான் நகசோன் சல்மோனைப் பெற்றான் 5 சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான் போவாஸ் ஓபேத்தை ரூத்தினிடத்தில் பெற்றான் ஓபேத் ஈசாயைப் பெற்றான் 6 ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான் தாவீது ராஜா உரியாவின் மனைவியாக இருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான் 7 சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான் ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான் அபியா ஆசாவைப் பெற்றான் 8 ஆசா யோசபாத்தைப் பெற்றான் யோசபாத் யோராமைப் பெற்றான் யோராம் உசியாவைப் பெற்றான் 9 உசியா யோதாமைப் பெற்றான் யோதாம் ஆகாசைப் பெற்றான் ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான் 10 எசேக்கியா மனாசேயைப் பெற்றான் மனாசே ஆமோனைப் பெற்றான் ஆமோன் யோசியாவைப் பெற்றான் 11 பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகும்காலத்தில் யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரர்களையும் பெற்றான் 12 பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு எகொனியா சலாத்தியேலைப் பெற்றான் சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான் 13 சொரொபாபேல் அபியூதைப் பெற்றான் அபியூத் எலியாக்கீமைப் பெற்றான் எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான் 14 ஆசோர் சாதோக்கைப் பெற்றான் சாதோக்கு ஆகீமைப் பெற்றான் ஆகீம் எலியூதைப் பெற்றான் 15 எலியூத் எலெயாசாரைப் பெற்றான் எலெயாசார் மாத்தானைப் பெற்றான் மாத்தான் யாக்கோபைப் பெற்றான் 16 யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான் மரியாளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார் 17 இவ்விதமாக உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீதுவரைக்கும் பதினாலு தலைமுறைகளும் தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலு தலைமுறைகளும் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்முதல் கிறிஸ்துவரைக்கும் பதினான்கு தலைமுறைகளாகும் 18 இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பின் விபரமாவது அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கும்போது அவர்கள் இணைவதற்குமுன்பே அவள் பரிசுத்த ஆவியானவராலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது 19 அவள் கணவனாகிய யோசேப்பு நீதிமானாக இருந்து அவளை அவமானப்படுத்த விருப்பமில்லாமல் இரகசியமாக அவளை விவாகரத்துசெய்ய யோசனையாக இருந்தான் 20 அவன் இப்படி நினைத்துக்கொண்டு இருக்கும்போது கர்த்தருடைய தூதன் கனவில் அவனுக்குக் காணப்பட்டு தாவீதின் குமாரனாகிய யோசேப்பே உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள பயப்படாதே அவளிடத்தில் கருவுற்றிருக்கிறது பரிசுத்த ஆவியானவரால் உண்டானது 21 அவள் ஒரு மகனைப் பெறுவாள் அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக ஏனென்றால் அவர் தமது மக்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான் 22 தீர்க்கதரிசியின் மூலமாகக் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது 23 அவன் இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெறுவாள் அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள் என்று சொன்னான் இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தம் 24 யோசேப்பு தூக்கம் தெளிந்து எழுந்து கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு 25 அவள் தன் முதற்பேறான மகனைப் பெற்றெடுக்கும் வரை அவளோடு இணையாமலிருந்து அவருக்கு இயேசு என்று பெயரிட்டான் Chapter 2அத்தியாயம்– 2 1 ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து 2 யூதர்களுக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு அவரைத் தொழுதுகொள்ள வந்தோம் என்றார்கள் 3 ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள் 4 அவன் பிரதான ஆசாரியர்கள் மக்களின் வேதபண்டிதர்கள் எல்லோரையும் கூடிவரச்செய்து கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று அவர்களிடத்தில் விசாரித்தான் 5 அதற்கு அவர்கள் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார் அது ஏனென்றால் 6 யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேமே யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல என் மக்களாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள் 7 அப்பொழுது ஏரோது சாஸ்திரிகளை இரகசியமாக அழைத்து நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாக விசாரித்து 8 நீங்கள் போய் பிள்ளையைக்குறித்துத் திட்டமாக விசாரியுங்கள் நீங்கள் பிள்ளையைக் கண்டபின்பு நானும் வந்து பிள்ளையைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி அவர்களை பெத்லகேமுக்கு அனுப்பினான் 9 ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகும்போது அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த இடத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது 10 அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள் 11 அவர்கள் அந்த வீட்டிற்குள் பிரவேசித்து பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு சாஷ்டாங்கமாக விழுந்து பிள்ளையைப் பணிந்துகொண்டு தங்களுடைய பொக்கிஷங்களைத் திறந்து பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் காணிக்கையாக வைத்தார்கள் 12 பின்பு அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாம் என்று கனவில் தேவனால் எச்சரிக்கப்பட்டு வேறுவழியாகத் தங்களுடைய நாட்டிற்குத் திரும்பிப்போனார்கள் 13 அவர்கள் போனபின்பு கர்த்தருடைய தூதன் கனவில் யோசேப்புக்குத் தோன்றி ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான் ஆதலால் நீ எழுந்து பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய் நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான் 14 அவன் எழுந்து இரவிலே பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்குப் புறப்பட்டுப்போய் 15 ஏரோது மரிக்கும்வரைக்கும் அங்கே இருந்தான் எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று தீர்க்கதரிசியின் மூலமாகக் கர்த்தரால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது 16 அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் ஏமாற்றப்பட்டதைக் கண்டு மிகுந்த கோபமடைந்து ஆட்களை அனுப்பி தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாக விசாரித்த காலத்தின்படியே பெத்லகேமிலும் அதின் எல்லா எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண் பிள்ளைகளையும் கொலைசெய்தான் 17 புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதலடையாமல் இருக்கிறாள் என்று, 18 எரேமியா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது அப்பொழுது நிறைவேறியது. 19 ஏரோது மரித்தபின்பு கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குக் கனவில் தோன்றி 20 நீ எழுந்து பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்திற்குப் போ பிள்ளையின் உயிரையெடுக்கத் தேடினவர்கள் மரித்துப்போனார்கள் என்றான் 21 அவன் எழுந்து பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்திற்கு வந்தான் 22 ஆனாலும் அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்திற்கு வந்து யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு அங்கே போகப் பயந்தான் அப்பொழுது அவன் கனவில் தேவனால் எச்சரிக்கப்பட்டு கலிலேயா நாட்டின் வெளிப்புறங்களிலே விலகிப்போய் 23 நாசரேத்து என்னும் ஊரிலே வந்து குடியிருந்தான் நசரேயன் எனப்படுவார் என்று தீர்க்கதரிசிகளால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது Chapter 3அத்தியாயம்– 3 1 அந்த நாட்களிலே யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்திரத்தில் வந்து 2 மனந்திரும்புங்கள் பரலோகராஜ்யம் சமீபமாக இருக்கிறது என்று பிரசங்கம் செய்தான் 3 கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள் அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே 4 இந்த யோவான் ஒட்டகமயிர் ஆடையை அணிந்து தன் இடுப்பிலே வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான் வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் அவனுக்கு ஆகாரமாக இருந்தது 5 அப்பொழுது எருசலேம் நகரத்தாரும் யூதேயாவில் உள்ள அனைவரும் யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் அனைவரும் அவனிடத்திற்குப்போய் 6 தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள் 7 பரிசேயர்களிலும் சதுசேயர்களிலும் அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை அவன் கண்டு விரியன்பாம்புக் குட்டிகளே வருங்கோபத்திற்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வழிகாட்டினவன் யார் 8 மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள் 9 ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினைக்காதிருங்கள் தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராக இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் 10 இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது எனவே நல்ல கனிகொடுக்காத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படும் 11 மனந்திரும்புதலுக்கென்று நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன் எனக்குப்பின்பு வருகிறவரோ என்னைவிட வல்லவராக இருக்கிறார் அவருடைய காலணிகளைச் சுமக்கிறதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் 12 தூற்றுக்கூடை அவருடைய கையில் இருக்கிறது அவர் தமது களத்தை நன்றாக சுத்தம்செய்து தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார் பதரையோ அணையாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான் 13 அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார் 14 யோவான் அவருக்குத் தடைசெய்து நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க நீர் என்னிடத்தில் வரலாமா என்றான் 15 இயேசு அவனுக்கு மறுமொழியாக இப்பொழுது இதற்கு சம்மதி இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாக இருக்கிறது என்றார் அப்பொழுது அவருக்கு சம்மதித்தான் 16 இயேசு ஞானஸ்நானம் பெற்று தண்ணீரிலிருந்து கரையேறின உடனே இதோ வானம் அவருக்குத் திறக்கப்பட்டது தேவ ஆவியானவர் புறாவைப்போல இறங்கி தம்மேல் வருகிறதைக் கண்டார் 17 அன்றியும் வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி இவர் என்னுடைய நேசகுமாரன் இவரில் பிரியமாக இருக்கிறேன் என்று உரைத்தது Chapter 4அத்தியாயம்– 4 1 அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்திரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார் 2 அவர் இரவும் பகலும் நாற்பதுநாட்கள் உபவாசமாக இருந்தபின்பு அவருக்குப் பசியுண்டானது 3 அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து நீர் தேவனுடைய குமாரனென்றால் இந்தக் கற்கள் அப்பங்களாக மாறும்படிச் சொல்லும் என்றான் 4 அவர் மறுமொழியாக மனிதன் அப்பத்தினால்மட்டுமில்லை தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார் 5 அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய் தேவாலயத்தின் உச்சியில் அவரை நிறுத்தி 6 நீர் தேவனுடைய குமாரனென்றால் கீழே குதியும் ஏனென்றால் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் உமது பாதம் கல்லில் மோதாதபடி அவர்கள் உம்மைத் தங்களுடைய கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்று எழுதியிருக்கிறதே என்றான் 7 அதற்கு இயேசு உன் தேவனாகிய கர்த்தரைச் சோதித்துப்பார்க்காமல் இருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார் 8 மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய் உலகத்தின் எல்லா ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து 9 நீர் சாஷ்டாங்கமாக விழுந்து என்னைப் பணிந்துகொண்டால் இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான் 10 அப்பொழுது இயேசு அப்பாலே போ சாத்தானே உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார் 11 அப்பொழுது பிசாசு அவரைவிட்டு விலகிப்போனான் உடனே தேவதூதர்கள் வந்து அவருக்கு பணிவிடை செய்தார்கள் 12 யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு கலிலேயாவிற்குத் திரும்பிப்போனார் 13 பின்பு அவர் நாசரேத்தைவிட்டு செபுலோன் நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகில் உள்ள கப்பர்நகூமிற்கு வந்து தங்கியிருந்தார் 14 கடற்கரை அருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலும் உள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடுமாகிய யூதரல்லாதவர்களுடைய கலிலேயாவிலே, 15 இருளில் இருக்கும் மக்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள் மரண இருளின் திசையில் இருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தோன்றினது என்று 16 ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. 17 அதுமுதல் இயேசு மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்யம் அருகில் இருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார் 18 இயேசு கலிலேயாக் கடலோரமாக நடந்துபோகும்போது மீனவர்களாக இருந்த இரண்டு சகோதரர்களாகிய பேதுரு என்ற சீமோனும் அவனுடைய சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலையைப் போட்டுக்கொண்டிருக்கின்றபோது அவர்களைக் கண்டு 19 என் பின்னே வாருங்கள் உங்களை மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக ஆக்குவேன் என்றார் 20 உடனே அவர்கள் வலைகளைவிட்டு அவருக்குப் பின்னே சென்றார்கள் 21 அவர் அந்த இடத்தைவிட்டுப் போகும்போது வேறு இரண்டு சகோதரர்களாகிய செபெதேயுவின் குமாரர்களான யாக்கோபும் யோவானும் தங்களுடைய தகப்பன் செபெதேயுவோடு படகிலிருந்து தங்களுடைய வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது அவர்களைக் கண்டு அவர்களையும் அழைத்தார் 22 உடனே அவர்கள் படகையும் தங்களுடைய தகப்பனையும்விட்டு அவருக்குப் பின்னே சென்றார்கள் 23 பின்பு இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்து மக்களுக்கு உண்டாயிருந்த எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கி குணமாக்கினார் 24 அவருடைய புகழ் சீரியா தேசமெங்கும் பரவியது அப்பொழுது பலவிதமான வியாதிகளிலும் வேதனைகளிலும் இருந்த எல்லா நோயாளிகளையும் பிசாசு பிடித்தவர்களையும் வலிப்பு நோயாளிகளையும் பக்கவாதக்காரர்களையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள் அவர்களைக் குணமாக்கினார் 25 கலிலேயாவிலும் தெக்கப்போலியிலும் எருசலேமிலும் யூதேயாவிலும் யோர்தானுக்கு அப்புறத்திலுமிருந்து அநேக மக்கள் வந்து அவருக்குப் பின்னே சென்றார்கள் Chapter 5அத்தியாயம்– 5 1 இயேசு திரளான மக்களைக் கண்டு மலையின்மேல் ஏறினார் அவர் உட்கார்ந்தபொழுது அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்தார்கள் 2 அப்பொழுது அவர் அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால் 3 ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள் பரலோகராஜ்யம் அவர்களுடையது 4 துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் ஆறுதலடைவார்கள் 5 சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் 6 நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் திருப்தியடைவார்கள் 7 இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் இரக்கம்பெறுவார்கள் 8 இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள் 9 சமாதானம் செய்கிறவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் தேவனுடைய பிள்ளைகள் எனப்படுவார்கள் 10 நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் பரலோகராஜ்யம் அவர்களுடையது 11 என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி பலவிதமான தீமையான சொற்களையும் உங்கள்மேல் பொய்யாகச் சொல்வார்களானால் பாக்கியவான்களாக இருப்பீர்கள் 12 சந்தோஷப்பட்டு மகிழ்ந்திருங்கள் பரலோகத்தில் உங்களுடைய பலன் அதிகமாக இருக்கும் உங்களுக்குமுன்பே வாழ்ந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே 13 நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள் உப்பானது சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும் வெளியே கொட்டப்படுவதற்கும் மனிதர்களால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது 14 நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாக இருக்கிறீர்கள் மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது 15 விளக்கைக் கொளுத்தி பாத்திரத்தினாலே மூடிவைக்காமல் விளக்குத்தண்டின்மேல் வைப்பார்கள் அப்பொழுது அது வீட்டிலுள்ள அனைவருக்கும் வெளிச்சம் கொடுக்கும் 16 இவ்விதமாக மனிதர்கள் உங்களுடைய நற்செயல்களைக் கண்டு பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவை மகிமைப்படுத்தும்படி உங்களுடைய வெளிச்சம் அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது 17 நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று நினைத்துக்கொள்ளாதேயுங்கள் அழிக்கிறதற்கு இல்லை நிறைவேற்றுவதற்கே வந்தேன் 18 வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும் நியாயப்பிரமாணத்தில் உள்ளதெல்லாம் நிறைவேறும்வரை அதில் ஒரு சிறு எழுத்தாவது ஒரு எழுத்தின் உறுப்பாவது ஒழிந்துபோகாது என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் 19 ஆகவே இந்தக் கட்டளைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாவது மீறி அவ்விதமாக மனிதர்களுக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லோரையும்விட சிறியவன் எனப்படுவான் இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ பரலோகராஜ்யத்தில் பெரியவன் எனப்படுவான் 20 வேதபண்டிதர்கள் பரிசேயர்கள் என்பவர்களுடைய நீதியைவிட உங்களுடைய நீதி அதிகமாக இல்லாவிட்டால் பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் 21 கொலை செய்யாதிருப்பாயாக என்பதும் கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான் என்பதும் முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள் 22 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான் தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான் மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு உரியவனாக இருப்பான் 23 ஆகவே நீ பலிபீடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயானால் 24 அங்கே பலிபீடத்தின்முன்பு உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய் முதலில் உன் சகோதரனோடு ஒப்புரவாகி பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து 25 எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடுக்காமலும் நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடுக்காமலும் நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாக அவனோடு சமாதானமாகு 26 இல்லாவிட்டால் நீ ஒரு காசும் குறைவில்லாமல் செலுத்தித்தீர்க்கும்வரைக்கும் சிறைச்சாலையிலிருந்து வெளியே வரமாட்டாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் 27 விபசாரம் செய்யாதிருப்பாயாக என்பது முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள் 28 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு பெண்ணை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடு விபசாரம் செய்துவிட்டான் 29 உன் வலது கண் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதைப் பிடுங்கி எறிந்துபோடு உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும் 30 உன் வலது கை உனக்கு இடறல் உண்டாக்கினால் அதை வெட்டி எறிந்துபோடு உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும் 31 தன் மனைவியை விவாகரத்து செய்கிற எவனும் அவளுக்கு விடுதலைப்பத்திரம் கொடுக்கவேண்டும் என்று சொல்லப்பட்டது 32 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் வேசித்தனக் காரணத்தினாலொழிய தன் மனைவியை விவாகரத்து செய்கிறவன் அவளை விபசாரம்செய்யத் தூண்டுகிறவனாக இருப்பான் அப்படி விவாகரத்து செய்யப்பட்டவளைத் திருமணம் செய்கிறவனும் விபசாரம் செய்கிறவனாக இருப்பான் 33 அன்றியும் பொய்யாணையிடாமல் உன் ஆணைகளைக் கர்த்தரின் முன்னிலையில் செலுத்துவாயாக என்று முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள் 34 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் எதையும் செய்வேன் என்று சத்தியம் செய்யவேண்டாம் பரலோகத்தின்பேரில் சத்தியம் செய்யவேண்டாம் அது தேவனுடைய சிங்காசனம் 35 பூமியின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம் அது அவருடைய பாதபடி எருசலேமின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம் அது மகாராஜாவினுடைய நகரம் 36 உன் தலையின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம் அதின் ஒரு முடியையாவது வெண்மையாக்கவும் கருமையாக்கவும் உன்னால் முடியாதே 37 உள்ளதை உள்ளதென்றும் இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள் இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும் 38 கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் 39 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம் ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு 40 உன்னோடு வழக்காடி உன் ஆடையை எடுத்துக்கொள்ளவேண்டுமென்று விரும்புகிறவனுக்கு உன் மேலாடையையும் கொடுத்துவிடு 41 ஒருவன் உன்னை ஒரு மைல்தூரம் வரக் கட்டாயப்படுத்தினால் அவனோடுகூட இரண்டு மைல்தூரம் போ 42 உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே 43 உனக்கடுத்தவனைச் நேசித்து உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் 44 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் உங்களுடைய சத்துருக்களை நேசியுங்கள் உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள் உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள் உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள் 45 இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவிற்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள் அவர் தீயவர்கள்மேலும் நல்லவர்கள்மேலும் தமது சூரியனை உதிக்கச்செய்து நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார் 46 உங்களை நேசிக்கிறவர்களையே நீங்கள் நேசிப்பீர்களானால் உங்களுக்குப் பலன் என்ன வரி வசூலிப்பவர்களும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா 47 உங்களுடைய சகோதரர்களைமட்டும் வாழ்த்துவீர்களானால் நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன வரி வசூலிப்பவர்களும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா 48 ஆகவே பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதா பூரண சற்குணராக இருக்கிறதுபோல நீங்களும் பூரண சற்குணராக இருக்கக்கடவீர்கள் Chapter 6அத்தியாயம்– 6 1 மனிதர்கள் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்களுடைய நல்ல செயல்களைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள் அப்படிச் செய்தால் பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை 2 ஆகவே நீ தர்மம் செய்யும்போது மனிதர்களால் புகழப்படுவதற்கு மாயக்காரர்கள் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல உனக்கு முன்பாகத் தாரை ஊதாதே அவர்கள் தங்களுடைய பலனை அடைந்து தீர்ந்தார்களென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் 3 நீயோ தர்மம் செய்யும்போது உன் தர்மம் மறைமுகமாக இருப்பதற்கு உன் வலது கை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது 4 அப்பொழுது மறைவிடத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாகப் பலனளிப்பார் 5 அன்றியும் நீ ஜெபம்செய்யும்போது மாயக்காரர்களைப்போல இருக்கவேண்டாம் மனிதர்கள் பார்க்கும்படியாக அவர்கள் ஜெபஆலயங்களிலும் வீதிகளின் முற்சந்திகளிலும் நின்று ஜெபம்செய்ய விரும்புகிறார்கள் அவர்கள் தங்களுடைய பலனை அடைந்து தீர்ந்ததென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் 6 நீயோ ஜெபம்செய்யும்போது உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து உன் கதவைப்பூட்டி மறைவிடத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் செய் அப்பொழுது மறைவிடத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாக உனக்குப் பலனளிப்பார் 7 அன்றியும் நீங்கள் ஜெபம்செய்யும்போது தேவனை அறியாதவர்களைப்போல வீண்வார்த்தைகளைத் திரும்பத்திரும்ப பேசாதிருங்கள் அவர்கள் அதிக வார்த்தைகளினால் தங்களுடைய ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள் 8 அவர்களைப்போல நீங்கள் செய்யாமலிருங்கள் நீங்கள் உங்களுடைய பிதாவை நோக்கி வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு என்ன தேவை என்று அவர் அறிந்திருக்கிறார் 9 நீங்கள் ஜெபம் செய்யவேண்டிய விதமாவது பரலோகத்திலிருக்கிற எங்களுடைய பிதாவே உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக 10 உம்முடைய ராஜ்யம் வருவதாக உம்முடைய விருப்பம் பரலோகத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக 11 எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும் 12 எங்களுடைய எதிராளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்களுடைய பாவங்களை எங்களுக்கு மன்னியும் 13 எங்களைச் சோதனைக்குட்படச் செய்யாமல் தீமையிலிருந்து எங்களை இரட்சித்துக்கொள்ளும் ராஜ்யமும் வல்லமையும் மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே ஆமென் என்பதே 14 மனிதர்களுடைய குற்றங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால் உங்களுடைய பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார் 15 மனிதர்களுடைய குற்றங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னிக்காதிருந்தால் உங்களுடைய பிதா உங்களுடைய குற்றங்களையும் மன்னிக்காதிருப்பார் 16 நீங்கள் உபவாசிக்கும்போது மாயக்காரர்களைப்போல முகவாடலாக இராதேயுங்கள் அவர்கள் உபவாசிக்கிறதை மனிதர்கள் பார்க்கும்படிக்கு தங்களுடைய முகங்களை வாடச்செய்கிறார்கள் அவர்கள் தங்களுடைய பலனை அடைந்து தீர்ந்ததென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் 17 நீயோ உபவாசிக்கும்போது உன் உபவாசம் மனிதர்களுக்குக் காணப்படாமல் மறைவிடத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக உன் தலைக்கு எண்ணெய் பூசி உன் முகத்தைக் கழுவு 18 அப்பொழுது மறைவிடத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாகப் பலனளிப்பார் 19 பூமியிலே உங்களுக்கு சொத்துக்களைச் சேர்த்துவைக்கவேண்டாம் இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும் இங்கே திருடர்களும் கன்னமிட்டுத் திருடுவார்கள் 20 பரலோகத்திலே உங்களுக்கு சொத்துக்களைச் சேர்த்துவையுங்கள் அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை அங்கே திருடர்கள் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை 21 உங்களுடைய சொத்து எங்கேயிருக்கிறதோ அங்கே உங்களுடைய இருதயமும் இருக்கும் 22 கண்ணானது சரீரத்தின் விளக்காக இருக்கிறது உன் கண் தெளிவாக இருந்தால் உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாக இருக்கும் 23 உன் கண் கெட்டதாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாக இருக்கும் இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாக இருந்தால் அந்த இருள் எவ்வளவு அதிகமாக இருக்கும் 24 இரண்டு முதலாளிகளுக்கு வேலைசெய்ய ஒருவனாலும் முடியாது ஒருவனைப் பகைத்து மற்றவனை நேசிப்பான் அல்லது ஒருவனைப்பற்றிக்கொண்டு மற்றவனைப் புறக்கணிப்பான் தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் வேலைசெய்ய உங்களால் முடியாது 25 ஆகவே என்னத்தை உண்போம் என்னத்தைக் குடிப்போம் என்று உங்களுடைய வாழ்க்கைக்காகவும் என்னத்தை உடுப்போம் என்று உங்களுடைய சரீரத்திற்காகவும் கவலைப்படாமலிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் உணவைவிட வாழ்க்கையும் உடையைவிட சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா 26 வானத்துப் பறவைகளைக் கவனித்துப்பாருங்கள் அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை அவைகளையும் உங்களுடைய பரமபிதா பிழைப்பூட்டுகிறார் அவைகளைவிட நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா 27 கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான் 28 உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறது ஏன் காட்டுப்பூக்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள் அவைகள் உழைக்கிறதுமில்லை நூற்கிறதுமில்லை 29 என்றாலும் சாலொமோன்கூட தன் சர்வமகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாவது உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் 30 விசுவாசக்குறைவுள்ளவர்களே இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப்புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால் உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா 31 ஆகவே என்னத்தை உண்போம் என்னத்தைக் குடிப்போம் என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாமல் இருங்கள் 32 இவைகளையெல்லாம் தேவனை அறியாதவர் நாடித்தேடுகிறார்கள் இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்களுடைய பரமபிதா அறிந்திருக்கிறார் 33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு சேர்த்துக்கொடுக்கப்படும் 34 ஆகவே நாளைக்காகக் கவலைப்படாமல் இருங்கள் நாளையதினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும் அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் Chapter 7அத்தியாயம்– 7 1 நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காமலிருங்கள் 2 ஏனென்றால் நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள் நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும் 3 நீ உன் கண்ணிலிருக்கிற பெரிய மரத்துண்டை உணராமல் உன் சகோதரன் கண்ணிலிருக்கிற சிறிய துரும்பைப் பார்க்கிறதென்ன 4 இதோ உன் கண்ணில் பெரிய மரத்துண்டு இருக்கும்போது உன் சகோதரனைப் பார்த்து நான் உன் கண்ணிலிருக்கும் சிறிய துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி 5 மாயக்காரனே முன்பு உன் கண்ணிலிருக்கிற பெரிய மரத்துண்டை எடுத்துப்போடு பின்பு உன் சகோதரனுடைய கண்ணிலிருக்கிற சிறிய துரும்பை எடுத்துப்போடுவதற்கு உனக்கு தெளிவாகத் தெரியும் 6 பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடுக்காதீர்கள் உங்களுடைய முத்துக்களைப் பன்றிகள்முன் போடாதீர்கள் போட்டால் தங்களுடைய கால்களால் அவைகளை மிதித்து திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும் 7 கேளுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும் தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள் தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும் 8 ஏனென்றால் கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான் தேடுகிறவன் கண்டடைகிறான் தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும் 9 உங்களில் எந்த மனிதனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா 10 மீனைக்கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா 11 ஆகவே பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா 12 ஆதலால் மனிதர்கள் உங்களுக்கு எவைகளைச் செய்யவிரும்புகிறீர்களோ அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம் 13 குறுகின வாசல்வழியாக உள்ளே பிரவேசியுங்கள் அழிவிற்குப்போகிற வாசல் அகலமும் வழி விசாலமுமாக இருக்கிறது அதின்வழியாக பிரவேசிக்கிறவர்கள் அநேகர் 14 ஜீவனுக்குப்போகிற வாசல் குறுகினதும் வழி நெருக்கமுமாக இருக்கிறது அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர் 15 கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாக இருங்கள் அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடம் வருவார்கள் உள்ளத்திலோ அவர்கள் பேராசையுள்ள ஓநாய்கள் 16 அவர்களுடைய செயல்களினாலே அவர்களை அறிவீர்கள் முட்செடிகளில் திராட்சைப் பழங்களையும் முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா 17 அப்படியே நல்லமரமெல்லாம் நல்லகனிகளைக் கொடுக்கும் கெட்டமரமோ கெட்டகனிகளைக் கொடுக்கும் 18 நல்லமரம் கெட்டகனிகளைக் கொடுக்கமாட்டாது கெட்டமரம் நல்லகனிகளைக் கொடுக்கமாட்டாது 19 நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு நெருப்பிலே போடப்படும் 20 ஆதலால் அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள் 21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் விருப்பத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னைப் பார்த்து கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை 22 அந்த நாளில் அநேகர் என்னைப் பார்த்து கர்த்தாவே கர்த்தாவே உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் சொன்னோம் அல்லவா உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா என்பார்கள் 23 அப்பொழுது நான் ஒருபோதும் உங்களை அறியவில்லை அக்கிரமச்செய்கைக்காரர்களே என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன் 24 ஆகவே நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு இவைகளின்படி செய்கிறவன் எவனோ அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனிதனுக்கு ஒப்பிடுவேன் 25 பெருமழை பெய்து பெருவெள்ளம் வந்து காற்று அடித்து அந்த வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது 26 நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனிதனுக்கு ஒப்பிடப்படுவான் 27 பெருமழை பெய்து பெருவெள்ளம் வந்து காற்று அடித்து அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது விழுந்து முழுவதும் அழிந்தது என்றார் 28 இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லிமுடித்தபோது அவர் வேதபண்டிதர்களைப்போல போதிக்காமல் அதிகாரமுடையவராக அவர்களுக்குப் போதித்ததினால் 29 மக்கள் அவருடைய போதனையைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள் Chapter 8அத்தியாயம்– 8 1 இயேசு மலையிலிருந்து இறங்கினபோது திரளான மக்கள் அவருக்குப் பின்னே சென்றார்கள் 2 அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து ஆண்டவரே உமக்கு விருப்பமானால் என்னை சுகப்படுத்த உம்மால் முடியும் என்றான் 3 இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு எனக்கு விருப்பமுண்டு சுத்தமாகு என்றார் உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான் 4 இயேசு அவனைப் பார்த்து இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாக இரு ஆனாலும் அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்றார் 5 இயேசு கப்பர்நகூமில் நுழைந்தபோது நூறு படைவீரர்களுக்குத் தலைவனாகிய ஒருவன் அவரிடத்தில் வந்து 6 ஆண்டவரே என் வேலைக்காரன் வீட்டிலே பக்கவாதமாகக் கிடந்து மிகவும் வேதனைப்படுகிறான் என்று அவரை வேண்டிக்கொண்டான் 7 அதற்கு இயேசு நான் வந்து அவனைச் சுகமாக்குவேன் என்றார் 8 அந்தத் தலைவன் மறுமொழியாக ஆண்டவரே நீர் என் வீட்டிற்குள் பிரவேசிக்க நான் தகுதியானவன் இல்லை ஒரு வார்த்தைமட்டும் சொல்லும் அப்பொழுது என் வேலைக்காரன் சுகமாவான் 9 நான் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவனாக இருந்தும் எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற போர்வீரர்களும் உண்டு நான் ஒருவனைப் போ என்றால் போகிறான் மற்றொருவனை வா என்றால் வருகிறான் என் வேலைக்காரனை இதைச் செய் என்றால் செய்கிறான் என்றான் 10 இயேசு இதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு தமக்குப்பின்னே வருகிறவர்களைப் பார்த்து இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் 11 அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடு பந்தியிருப்பார்கள் 12 ராஜ்யத்தின் பிள்ளைகளோ வெளியில் உள்ள இருளிலே தள்ளப்படுவார்கள் அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் 13 பின்பு இயேசு அந்தத் தலைவனைப் பார்த்து நீ போகலாம் நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார் அதே மணிநேரத்திலே அவனுடைய வேலைக்காரன் சுகமானான் 14 இயேசு பேதுருவின் வீட்டிற்கு வந்து அவனுடைய மாமியார் ஜூரமாகப் படுத்திருந்ததைக் கண்டார் 15 அவர் அவளுடைய கையைத் தொட்டவுடனே ஜூரம் அவளைவிட்டு நீங்கியது அவள் எழுந்திருந்து அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள் 16 மாலைநேரமானபோது பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள் அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி வியாதியஸ்தர்கள் எல்லோரையும் சுகமாக்கினார் 17 அவர்தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது 18 பின்பு திரளான மக்கள் தம்மைச் சுற்றியிருக்கிறதை இயேசு கண்டு அக்கரைக்குப் போகக் கட்டளையிட்டார் 19 அப்பொழுது வேதபண்டிதன் ஒருவன் வந்து போதகரே நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான் 20 அதற்கு இயேசு நரிகளுக்குக் குழிகளும் வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு மனிதகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார் 21 அவருடைய சீடர்களில் வேறொருவன் அவரைப் பார்த்து ஆண்டவரே முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்செய்ய எனக்கு அனுமதி கொடுக்கவேண்டும் என்றான் 22 அதற்கு இயேசு மரித்தோர் தங்களுடைய மரித்தோரை அடக்கம் செய்யட்டும் நீ என்னைப் பின்பற்றிவா என்றார் 23 அவர் படகில் ஏறினபோது அவருடைய சீடர்கள் அவருக்குப் பின்னேசென்று ஏறினார்கள் 24 அப்பொழுது படகு அலைகளினால் மூடப்படத்தக்கதாகக் கடலில் பெருங்காற்று உண்டானது அவரோ தூங்கிக்கொண்டிருந்தார் 25 அப்பொழுது அவருடைய சீடர்கள் வந்து அவரை எழுப்பி ஆண்டவரே எங்களைக் காப்பாற்றும் மரித்துப்போகிறோம் என்றார்கள் 26 அதற்கு அவர் விசுவாசக்குறைவுள்ளவர்களே ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி எழுந்து காற்றையும் கடலையும் அதட்டினார் உடனே மிகுந்த அமைதல் உண்டானது 27 அந்த மனிதர்கள் ஆச்சரியப்பட்டு இவர் எப்படிப்பட்டவரோ காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்றார்கள் 28 அவர் அக்கரையிலே கெர்கெசேனர் நாட்டிற்கு வந்தபோது பிசாசுகள் பிடித்திருந்த இரண்டுபேர் கல்லறைகளிலிருந்து புறப்பட்டு அவருக்கு எதிராக வந்தார்கள் அவர்கள் மிகவும் கொடியவர்களாக இருந்தபடியால் அந்தவழியாக ஒருவனும் நடக்கக்கூடாமலிருந்தது 29 அவர்கள் அவரைப் பார்த்து இயேசுவே தேவனுடைய குமாரனே எங்களுக்கும் உமக்கும் என்ன காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று சத்தமிட்டார்கள் 30 அவர்களுக்கு சிறிது தூரத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன 31 அப்பொழுது பிசாசுகள் நீர் எங்களைத் துரத்துவீரானால் நாங்கள் அந்தப் பன்றிகளுக்குள் போகும்படி அனுமதிகொடும் என்று அவரை வேண்டிக்கொண்டன 32 அதற்கு அவர் போங்கள் என்றார் அவைகள் புறப்பட்டு பன்றிகளுக்குள் சென்றன அப்பொழுது பன்றிக்கூட்டமெல்லாம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து தண்ணீரில் இறந்துபோயின 33 அவைகளை மேய்த்தவர்கள் ஓடி பட்டணத்தில் சென்று இந்தச் செய்திகள் எல்லாவற்றையும் பிசாசு பிடித்திருந்தவர்களுக்கு நடந்தவைகளையும் அறிவித்தார்கள் 34 அப்பொழுது அந்தப் பட்டணத்தார் அனைவரும் இயேசுவிற்கு எதிர்கொண்டுவந்து அவரைக்கண்டு தங்களுடைய எல்லைகளைவிட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள் Chapter 9அத்தியாயம்– 9 1 அப்பொழுது அவர் படகில் ஏறி இக்கரையில் உள்ள தம்முடைய பட்டணத்திற்கு வந்தார் 2 அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு பக்கவாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள் இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு பக்கவாதக்காரனைப் பார்த்து மகனே திடன்கொள் உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார் 3 அப்பொழுது வேதபண்டிதர்களில் சிலர் இவன் தேவனை அவமதித்துப் பேசுகிறான் என்று தங்களுடைய உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள் 4 இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து நீங்கள் உங்களுடைய இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன 5 உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ எழுந்து நட என்று சொல்வதோ எது எளிது 6 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி பக்கவாதக்காரனைப் பார்த்து நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு உன் வீட்டிற்குப் போ என்றார் 7 உடனே அவன் எழுந்து தன் வீட்டிற்குப்போனான் 8 மக்கள் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு மனிதர்களுக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள் 9 இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்போது வரிவசூல் மையத்தில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனிதனைக் கண்டு எனக்குப் பின்னே வா என்றார் அவன் எழுந்து அவருக்குப் பின்னேசென்றான் 10 பின்பு அவர் வீட்டிலே உணவுப் பந்தியிருக்கும்போது அநேக வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் வந்து இயேசுவோடும் அவருடைய சீடர்களோடும் பந்தியில் இருந்தார்கள் 11 பரிசேயர்கள் அதைக் கண்டு அவருடைய சீடர்களைப் பார்த்து உங்களுடைய போதகர் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் உணவு சாப்பிடுகிறது ஏன் என்று கேட்டார்கள் 12 இயேசு அதைக்கேட்டு நோயாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவையேதவிர சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை 13 பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள் நீதிமான்களையல்ல பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார் 14 அப்பொழுது யோவானுடைய சீடர்கள் அவரிடம் வந்து நாங்களும் பரிசேயர்களும் அநேகமுறை உபவாசிக்கிறோமே உம்முடைய சீடர்கள் உபவாசிக்காமல் இருக்கிறது ஏன் என்று கேட்டார்கள் 15 அதற்கு இயேசு மணவாளன் தங்களோடு இருக்கும்போது மணவாளனுடைய தோழர்கள் துயரப்படுவார்களா மணவாளன் அவர்களைவிட்டுப் போகும் நாட்கள் வரும் அப்பொழுது உபவாசிப்பார்கள் 16 ஒருவனும் புதிய துணியை பழைய ஆடையோடு இணைக்கமாட்டான் இணைத்தால் அதினோடு இணைத்த பழைய ஆடையை அது அதிகமாகக் கிழிக்கும் கீறலும் அதிகமாகும் 17 புதிய திராட்சைரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றிவைக்கிறதும் இல்லை ஊற்றிவைத்தால் தோல் பைகள் கிழிந்துபோகும் இரசமும் சிந்திப்போகும் தோல் பைகளும் கெட்டுப்போகும் புதிய இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றிவைப்பார்கள் அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார் 18 அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கும்போது தலைவன் ஒருவன் வந்து அவரை வணங்கி என் மகள் இப்பொழுதுதான் இறந்துபோனாள் ஆனாலும் நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும் அப்பொழுது பிழைப்பாள் என்றான் 19 இயேசு எழுந்து தம்முடைய சீடர்களோடுகூட அவன் பின்னே போனார் 20 அப்பொழுது பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினாலே கஷ்டப்படும் ஒரு பெண் 21 நான் அவருடைய ஆடையையாவது தொட்டால் சுகமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு அவர் பின்னாலே வந்து அவருடைய ஆடையின் ஓரத்தைத் தொட்டாள் 22 இயேசு திரும்பி அவளைப் பார்த்து மகளே திடன்கொள் உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார் அந்தநேரத்திலேயே அந்தப் பெண் சுகமானாள் 23 இயேசுவானவர் அந்தத் தலைவனுடைய வீட்டிற்கு வந்து சங்கு ஊதுகிறவர்களையும் ஒப்பாரி வைக்கிற மக்களையும் கண்டு 24 விலகுங்கள் இந்த சிறுபெண் இறக்கவில்லை தூங்கிக்கொண்டிருக்கிறாள் என்றார் அதற்காக அவரைப் பார்த்து ஏளனம் செய்தார்கள் 25 மக்கள் வெளியே அனுப்பப்பட்டப்பின்பு அவர் உள்ளே பிரவேசித்து அந்தச் சிறுபெண்ணின் கையைப் பிடித்தார் உடனே அவள் எழுந்திருந்தாள் 26 இந்தச் செய்தி அந்த நாடெங்கும் பிரசித்தமானது 27 இயேசு அந்த இடத்தைவிட்டுப் போகும்போது இரண்டு குருடர்கள் அவருக்குப் பின்னேசென்று தாவீதின் குமாரனே எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள் 28 அவர் வீட்டிற்கு வந்தபின்பு அந்தக் குருடர்கள் அவரிடத்தில் வந்தார்கள் இயேசு அவர்களைப் பார்த்து இதைச்செய்ய எனக்கு வல்லமை உண்டு என்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார் அதற்கு அவர்கள் ஆம் விசுவாசிக்கிறோம் ஆண்டவரே என்றார்கள் 29 அப்பொழுது அவர்களுடைய கண்களை அவர் தொட்டு உங்களுடைய விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார் 30 உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது இதை ஒருவரும் அறியாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள் என்று இயேசு அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார் 31 அவர்களோ புறப்பட்டு அந்த நாடெங்கும் அவருடைய புகழைப் பிரசித்தப்படுத்தினார்கள் 32 அவர்கள் புறப்பட்டுப்போகும்போது பிசாசு பிடித்த ஊமையான ஒரு மனிதனை அவரிடம் கொண்டுவந்தார்கள் 33 பிசாசு துரத்தப்பட்டப்பின்பு ஊமையன் பேசினான் மக்கள் ஆச்சரியப்பட்டு இஸ்ரவேலில் இப்படி ஒருபோதும் காணப்படவில்லை என்றார்கள் 34 பரிசேயர்களோ இவன் பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள் 35 பின்பு இயேசு எல்லாப் பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து ஜெப ஆலயங்களில் உபதேசித்து ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்து மக்களுக்கு உண்டாயிருந்த எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கி அவர்களைச் சுகமாக்கினார் 36 அவர் திரளான மக்களைக் கண்டபொழுது அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல சோர்ந்துபோனவர்களும் திக்கற்றவர்களுமாக இருந்தபடியால் அவர்கள்மேல் மனதுருகி 37 தம்முடைய சீடர்களைப் பார்த்து அறுப்பு மிகுதி வேலையாட்களோ கொஞ்சம் 38 ஆதலால் அறுப்புக்கு எஜமான் தமது வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார் Chapter 10அத்தியாயம்– 10 1 அப்பொழுது இயேசு தம்முடைய பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து அசுத்தஆவிகளைத் துரத்தவும் எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார் 2 அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களுடைய பெயர்களாவன முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன் அவன் சகோதரன் அந்திரேயா செபெதேயுவின் குமாரன் யாக்கோபு அவன் சகோதரன் யோவான் 3 பிலிப்பு பர்தொலொமேயு தோமா வரி வசூலிப்பவனாகிய மத்தேயு அல்பேயுவின் குமாரன் யாக்கோபு ததேயு என்னும் மறுபெயருள்ள லெபேயு 4 கானானியனாகிய சீமோன் அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே 5 இந்தப் பன்னிரண்டுபேரையும் இயேசு அனுப்பும்போது அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால் நீங்கள் யூதரல்லாதவர்களுடைய நாடுகளுக்குப் போகாமலும் சமாரியருடைய பட்டணங்களில் பிரவேசிக்காமலும் 6 காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் குடும்பத்தாரிடத்திற்குப் போங்கள் 7 போகும்போது பரலோகராஜ்யம் சமீபமாக இருக்கிறது என்று பிரசங்கியுங்கள் 8 வியாதியுள்ளவர்களைச் சுகமாக்குங்கள் குஷ்டரோகிகளைச் சுகப்படுத்துங்கள் மரித்தோரை உயிரோடு எழுப்புங்கள் பிசாசுகளைத் துரத்துங்கள் இலவசமாகப் பெற்றீர்கள் இலவசமாகக் கொடுங்கள் 9 உங்களுடைய பைகளில் பொன்னையாவது வெள்ளியையாவது செம்பையாவது 10 வழிக்காகப் பையையாவது இரண்டு அங்கிகளையாவது பாதணிகளையாவது தடியையாவது எடுத்துவைக்கவேண்டாம் வேலையாள் தன் ஆகாரத்திற்குத் தகுதியுள்ளவனாக இருக்கிறான் 11 எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது அதிலே தகுதியானவன் யாரென்று விசாரித்து நீங்கள் புறப்படும்வரைக்கும் அவனிடத்தில் தங்கியிருங்கள் 12 ஒரு வீட்டிற்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள் 13 அந்த வீடு தகுதியாக இருந்தால் நீங்கள் சொன்ன சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது தகுதியற்றவர்களாக இருந்தால் நீங்கள் சொன்ன சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது 14 எவனாவது உங்களை ஏற்றுக்கொள்ளாமலும் உங்களுடைய வார்த்தைகளைக் கேளாமலும்போனால் அந்த வீட்டையாவது பட்டணத்தையாவதுவிட்டுப் புறப்படும்போது உங்களுடைய கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள் 15 நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு சம்பவிப்பதைவிட சோதோம் கொமோரா பட்டணங்களுக்கு சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் 16 ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல இதோ நான் உங்களை அனுப்புகிறேன் ஆகவே பாம்புகளைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போல வஞ்சகமற்றவர்களுமாக இருங்கள் 17 மனிதர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள் அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து தங்களுடைய ஜெப ஆலயங்களில் உங்களைச் சாட்டையினால் அடிப்பார்கள் 18 அவர்களுக்கும் யூதரல்லாதவர்களுக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும் ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள் 19 அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது எப்படிப் பேசுவோம் என்றும் என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாமலிருங்கள் நீங்கள் பேசவேண்டியது அந்தநேரத்தில் உங்களுக்குக் கொடுக்கப்படும் 20 பேசுகிறவர்கள் நீங்கள் இல்லை உங்களுடைய பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர் 21 சகோதரன் தன் சகோதரனையும் தகப்பன் தன் பிள்ளையையும் மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள் பெற்றோருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்ய ஒப்புக்கொடுப்பார்கள் 22 என் நாமத்தினாலே நீங்கள் எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள் இறுதிவரைக்கும் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான் 23 ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் வேறொரு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள் மனிதகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றிவரமுடியாதென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் 24 சீடன் தன் போதகனைவிடவும் வேலைக்காரன் தன் எஜமானைவிடவும் மேலானவன் இல்லை 25 சீடன் தன் போதகனைப்போலவும் வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பதுபோதும் வீட்டு எஜமானையே பெயெல்செபூல் என்று சொன்னார்களென்றால் அவன் குடும்பத்தினரை இன்னும் அதிகமாகச் சொல்வது அதிக நிச்சயமல்லவா 26 அவர்களுக்குப் பயப்படாமலிருங்கள் வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை அறியப்படாத இரகசியமும் இல்லை 27 நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள் காதிலே கேட்கிறதை நீங்கள் வீடுகளின்மேல் பிரசித்தம்பண்ணுங்கள் 28 ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாக இல்லாமல் சரீரத்தைமட்டும் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம் ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள் 29 ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா ஆனாலும் உங்களுடைய பிதாவின் விருப்பமில்லாமல் அவைகளில் ஒன்றாவது தரையிலே விழாது 30 உங்களுடைய தலையிலுள்ள முடிகளெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது 31 ஆதலால் பயப்படாமலிருங்கள் அநேகம் அடைக்கலான் குருவிகளைவிட நீங்கள் விசேஷித்தவர்களாக இருக்கிறீர்கள் 32 மனிதர்கள் முன்பாக என்னை அறிக்கைசெய்கிறவன் எவனோ அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைசெய்வேன் 33 மனிதர்கள் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன் 34 பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள் சமாதானத்தையல்ல பிரிவினையையே அனுப்பவந்தேன் 35 எப்படியென்றால் மகனுக்கும் தகப்பனுக்கும் மகளுக்கும் தாய்க்கும் மருமகளுக்கும் மாமியாருக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன் 36 ஒரு மனிதனுக்கு விரோதிகள் அவன் குடும்பத்தாரே 37 தகப்பனையாவது தாயையாவது என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை மகனையாவது மகளையாவது என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை 38 தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்கு தகுதியானவன் இல்லை 39 தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான் என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான் 40 உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான் என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் 41 தீர்க்கதரிசி என்னும் பெயரினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்குரிய பலனை அடைவான் நீதிமான் என்னும் பெயரினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்குரிய பலனை அடைவான் 42 சீடன் என்னும் பெயரினிமித்தம் இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர்மட்டும் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனைப் பெறாமல் போகமாட்டான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் Chapter 11அத்தியாயம்– 11 1 இயேசு தம்முடைய பன்னிரண்டு சீடர்களுக்கும் கட்டளைக் கொடுத்துமுடித்தபின்பு அவர்களுடைய பட்டணங்களில் உபதேசிக்கவும் பிரசங்கிக்கவும் அந்த இடத்தைவிட்டுப் போனார் 2 அந்தநேரத்தில் காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் செயல்களைக்குறித்துக் கேள்விப்பட்டு தன் சீடர்களில் இரண்டுபேரை அழைத்து 3 வருகிறவர் நீர்தானா அல்லது வேறொருவர் வருவதற்காக நாங்கள் காத்திருக்கவேண்டுமா என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான் 4 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடம்போய் அறிவியுங்கள் 5 குருடர்கள் பார்வையடைகிறார்கள் முடவர்கள் நடக்கிறார்கள் குஷ்டரோகிகள் சுகமாகிறார்கள் செவிடர்கள் கேட்கிறார்கள் மரித்தோர் உயிரோடு எழுந்திருக்கிறார்கள் தரித்திரர்களுக்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது 6 என்னிடத்தில் இடறலடையாமலிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார் 7 அவர்கள் போனபின்பு இயேசு யோவானைக்குறித்து மக்களுக்குச் சொன்னது என்னவென்றால் எதைப்பார்க்க வனாந்திரத்திற்குப் போனீர்கள் காற்றினால் அசையும் நாணலையோ 8 இல்லையென்றால் எதைப்பார்க்கப் போனீர்கள் மெல்லிய உடை அணிந்திருந்த மனிதனையோ மெல்லிய உடை அணிந்திருக்கிறவர்கள் அரசர் மாளிகைகளில் இருக்கிறார்கள் 9 இல்லையென்றால் எதைப்பார்க்கப் போனீர்கள் தீர்க்கதரிசியையோ ஆம் தீர்க்கதரிசியைவிட மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் 10 அதெப்படியெனில் இதோ நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன் அவன் உமக்குமுன்னேபோய் உமது வழியை ஆயத்தம் செய்வான் என்று வேதத்தில் எழுதப்பட்டவன் இவன்தான் 11 பெண்களிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைவிட பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை ஆனாலும் பரலோகராஜ்யத்தில் சிறியவனாக இருக்கிறவன் அவனைவிட பெரியவனாக இருக்கிறானென்று உங்களுக்கு உண்மையாகவே சொல்லுகிறேன் 12 யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் செய்யப்படுகிறது பலவந்தம் செய்கிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள் 13 நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் அனைவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் சொன்னதுண்டு 14 நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால் வருகிறவனாகிய எலியா இவன்தான் 15 கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும் 16 இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன் சந்தைவெளிகளில் உட்கார்ந்து தங்களுடைய தோழரைப் பார்த்து 17 உங்களுக்காகக் குழல் ஊதினோம் நீங்கள் நடனமாடவில்லை உங்களுக்காகப் புலம்பினோம் நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாக இருக்கிறது 18 எப்படியென்றால் யோவான் உபவாசிக்கிறவனாகவும் திராட்சைரசம் குடிக்காதவனாகவும் வந்தான் அதற்கு அவர்கள் அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்றார்கள் 19 மனிதகுமாரன் உண்கிறவராகவும் குடிக்கிறவராகவும் வந்தார் அதற்கு அவர்கள் இதோ உணவுப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனிதன் வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன் என்கிறார்கள் ஆனாலும் ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார் 20 அப்பொழுது தமது பலத்த செய்கைகளில் அதிகமானவைகளைச் செய்யக்கண்ட பட்டணங்கள் மனந்திரும்பாமற்போனபடியினால் அவைகளை அவர் கடிந்துகொள்ளத் தொடங்கினார் 21 கோராசினே உனக்கு ஐயோ பெத்சாயிதாவே உனக்கு ஐயோ உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால் அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள் 22 நியாயத்தீர்ப்புநாளிலே உங்களுக்குச் சம்பவிப்பதைவிட தீருவிற்கும் சீதோனுக்கும் சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் 23 வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய் உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால் அது இந்தநாள்வரை நிலைத்திருக்கும் 24 நியாயத்தீர்ப்புநாளிலே உனக்குச் சம்பவிப்பதைவிட சோதோம் நாட்டிற்குச் சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் 25 அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது பிதாவே பரலோகத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து சிறுவர்களுக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன் 26 ஆம் பிதாவே இப்படிச்செய்வது உம்முடைய உயர்ந்த உள்ளத்திற்குப் பிரியமாக இருந்தது 27 எல்லாம் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது பிதாவைத்தவிர வேறொருவனும் குமாரனை அறியான் குமாரனும் குமாரன் எவனுக்குப் பிதாவை வெளிப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைத்தவிர வேறொருவனும் பிதாவை அறியமாட்டான் 28 வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் 29 நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கிறேன் என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள் அப்பொழுது உங்களுடைய ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் 30 என் நுகம் எளிதாகவும் என் சுமை இலகுவாகவும் இருக்கிறது என்றார் Chapter 12அத்தியாயம்– 12 1 அக்காலத்திலே இயேசு ஓய்வுநாளில் வயல்வழியே போனார் அவருடைய சீடர்கள் பசியாக இருந்து கதிர்களைப் பறித்து சாப்பிடத் தொடங்கினார்கள் 2 பரிசேயர்கள் அதைக் கண்டு அவரைப் பார்த்து இதோ ஓய்வுநாளில் செய்யக்கூடாததை உம்முடைய சீடர்கள் செய்கிறார்களே என்றார்கள் 3 அதற்கு அவர் தாவீதும் அவனோடு இருந்தவர்களும் பசியாக இருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா 4 அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து ஆசாரியர்கள்தவிர வேறு ஒருவரும் புசிக்கக்கூடாத தேவ சமுகத்து அப்பங்களைத் தானும் தன்னோடு இருந்தவர்களும் புசித்தார்களே 5 அன்றியும் ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல் ஓய்வுநாளை வேலைநாளாக்கினாலும் குற்றமில்லாமல் இருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்தில் வாசிக்கவில்லையா 6 தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் 7 பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால் குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள் 8 மனிதகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார் என்றார் 9 அவர் அந்த இடத்தைவிட்டுப்போய் அவர்களுடைய ஜெப ஆலயத்திற்கு வந்தார் 10 அங்கே சூம்பின கையையுடைய மனிதன் ஒருவன் இருந்தான் அப்பொழுது அவர்மேல் குற்றஞ்சாட்டும்படிக்கு ஓய்வுநாளில் சுகமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்கள் 11 அதற்கு அவர் உங்களில் எந்த மனிதனுக்காவது ஒரு ஆடு இருந்து அது ஓய்வுநாளில் குழியிலே விழுந்தால் அதைப் பிடித்துத் தூக்கிவிடமாட்டானோ 12 ஆட்டைவிட மனிதனானவன் எவ்வளவோ விசேஷித்திருக்கிறான் ஆதலால் ஓய்வுநாளிலே நன்மை செய்வது நியாயம்தான் என்று சொன்னார் 13 பின்பு அந்த மனிதனைப் பார்த்து உன் கையை நீட்டு என்றார் அவன் நீட்டினான் அது மறுகையைப்போல சுகமானது 14 அப்பொழுது பரிசேயர்கள் வெளியேபோய் அவரைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாக ஆலோசனை செய்தார்கள் 15 இயேசு அதை அறிந்து அந்த இடத்தைவிட்டு விலகிப்போனார் திரளான மக்கள் அவருக்குப் பின்னே சென்றார்கள் அவர்களெல்லோரையும் அவர் சுகமாக்கி 16 தம்மைப் பிரசித்தப்படுத்தாதபடி அவர்களுக்குக் கண்டிப்பாகக் கட்டளையிட்டார் 17 ஏசாயா தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது அவன் சொன்னதாவது 18 இதோ நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன் என் ஆத்துமாவிற்குப் பிரியமாக இருக்கிற என்னுடைய நேசன் என் ஆவியை அவர்மேல் அமரச் செய்வேன் அவர் யூதரல்லாதவர்களுக்கு நியாயத்தை அறிவிப்பார் 19 வாக்குவாதம் செய்யவும் மாட்டார் சத்தமிடவும் மாட்டார் அவருடைய சத்தத்தை ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை 20 அவர் நியாயத்திற்கு ஜெயம் கிடைக்கச்செய்கிறவரைக்கும் நெரிந்த நாணலை முறிக்காமலும் மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார் 21 அவருடைய நாமத்தின்மேல் உலகிலுள்ளோர் நம்பிக்கையாக இருப்பார்கள் என்பதே 22 அப்பொழுது பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் அவரிடத்தில் கொண்டுவரப்பட்டான் குருடும் ஊமையுமானவன் பேசவும் பார்க்கவுந்தக்கதாக அவனைச் சுகமாக்கினார் 23 மக்களெல்லோரும் ஆச்சரியப்பட்டு தாவீதின் குமாரன் இவர்தானோ என்றார்கள் 24 பரிசேயர்கள் அதைக்கேட்டு இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றபடியல்ல என்றார்கள் 25 இயேசு அவர்கள் யோசனைகளை அறிந்து அவர்களைப் பார்த்து தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாகப்போகும் தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருக்கிற எந்தப் பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது 26 சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும் 27 நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால் உங்களுடைய பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள் ஆகவே அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாக இருப்பார்கள் 28 நான் தேவனுடைய ஆவியானவராலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால் தேவனுடைய ராஜ்யம் உங்களிடம் வந்திருக்கிறதே 29 அன்றியும் பலவானை முந்திக் கட்டினாலொழிய பலவானுடைய வீட்டிற்குள் ஒருவன் புகுந்து அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடமுடியும் கட்டினானேயாகில் அவன் வீட்டைக் கொள்ளையிடலாம் 30 என்னோடு இராதவன் எனக்கு விரோதியாக இருக்கிறான் என்னோடு சேர்க்காதவன் சிதறடிக்கிறான் 31 ஆதலால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் எந்தப் பாவமும் எந்த நிந்தனையும் மனிதர்களுக்கு மன்னிக்கப்படும் ஆவியானவருக்கு விரோதமான நிந்தனையோ மனிதர்களுக்கு மன்னிக்கப்படுவதில்லை 32 எவனாவது மனிதகுமாரனுக்கு விரோதமாக வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும் எவனாவது பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை 33 மரம் நல்லதென்றால் அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள் மரம் கெட்டதென்றால் அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள் மரமானது அதின் கனியினால் அறியப்படும் 34 விரியன்பாம்புக் குட்டிகளே நீங்கள் பொல்லாதவர்களாக இருக்க நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள் இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் 35 நல்ல மனிதன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான் பொல்லாத மனிதன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான் 36 மனிதர்கள் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும்குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கு ஒப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் 37 ஏனென்றால் உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய் அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார் 38 அப்பொழுது வேதபண்டிதர்களிலும் பரிசேயர்களிலும் சிலர் அவரைப் பார்த்து போதகரே உம்மால் ஒரு அடையாளத்தைக் காணவிரும்புகிறோம் என்றார்கள் 39 அவர்களுக்கு அவர் மறுமொழியாக இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள் ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளத்தைத்தவிர வேறு அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை 40 யோனா இரவும் பகலும் மூன்று நாட்கள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல மனிதகுமாரனும் இரவும் பகலும் மூன்று நாட்கள் பூமியின் இருதயத்தில் இருப்பார் 41 யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள் இதோ யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார் ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடு எழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள் 42 தென்தேசத்து ராணி பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள் இதோ சாலொமோனைவிட பெரியவர் இங்கே இருக்கிறார் ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராணி இந்தச் சந்ததியாரோடு எழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள் 43 அசுத்தஆவி ஒரு மனிதனைவிட்டுப் புறப்படும்போது வறண்ட இடங்களில் அலைந்து இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல் 44 நான் விட்டுவந்த என் வீட்டிற்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி அங்கே வந்து அந்த வீடு வெறுமையாகவும் பெருக்கி அலங்கரிக்கப்பட்டதாகவும் இருப்பதைப் பார்த்து 45 திரும்பிப்போய் தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடு அழைத்துக்கொண்டுவந்து உள்ளே நுழைந்து அங்கே குடியிருக்கும் அப்பொழுது அந்த மனிதனுடைய முன்னிலைமையைவிட அவனுடைய பின்னிலைமை மிகவும் மோசமானதாக இருக்கும் அப்படியே இந்தப் பொல்லாத சந்ததியார்களுக்கும் நடக்கும் என்றார் 46 இப்படி அவர் மக்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது அவருடைய தாயாரும் சகோதரர்களும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள் 47 அப்பொழுது ஒருவன் அவரைப் பார்த்து உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரர்களும் உம்மோடு பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான் 48 தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் மறுமொழியாக என் தாயார் யார் என் சகோதரர்கள் யார் என்று சொல்லி 49 தம்முடைய கையைத் தமது சீடர்களுக்கு நேராக நீட்டி இதோ என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே 50 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் விருப்பத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்கு சகோதரனும் சகோதரியும் தாயுமாகவும் இருக்கிறான் என்றார் Chapter 13அத்தியாயம்– 13 1 இயேசு அன்றைய தினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய் கடலோரத்திலே உட்கார்ந்தார் 2 திரளான மக்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால் அவர் படகில் ஏறி உட்கார்ந்தார் மக்களெல்லோரும் கரையிலே நின்றார்கள் 3 அவர் அநேக காரியங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார் கேளுங்கள் விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான் 4 அவன் விதைக்கும்போது சில விதைகள் வழியருகே விழுந்தன பறவைகள் வந்து அவைகளைச் சாப்பிட்டன 5 சில விதைகள் அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தன மண் ஆழமாக இல்லாததினாலே அவைகள் சீக்கிரமாக முளைத்தன 6 வெயில் ஏறினபோதோ கருகிப்போய் வேரில்லாமையால் உலர்ந்துபோயின 7 சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தன முள் வளர்ந்து அவைகளை நெருக்கிப்போட்டது 8 சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன சில விதைகள் நூறாகவும் சில விதைகள் அறுபதாகவும் சில விதைகள் முப்பதாகவும் பலன் தந்தன 9 கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்றார் 10 அப்பொழுது சீடர்கள் அவரிடத்தில் வந்து ஏன் அவர்களோடு உவமைகளாக பேசுகிறீர் என்று கேட்டார்கள் 11 அவர்களுக்கு அவர் மறுமொழியாக பரலோகராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது அவர்களுக்கோ அருளப்படவில்லை 12 உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும் பரிபூரணமும் அடைவான் இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் 13 அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும் கேட்டும் கேளாதவர்களாகவும் உணர்ந்துகொள்ளாதவர்களாகவும் இருக்கிறபடியினால் நான் உவமைகளாக அவர்களோடு பேசுகிறேன் 14 ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது அதாவது காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள் கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள் 15 இந்த மக்கள் கண்களினால் காணாமலும் காதுகளினால் கேளாமலும் இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும் நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது காதால் மந்தமாகக் கேட்டு தங்களுடைய கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே 16 உங்களுடைய கண்கள் காண்கிறதினாலும் உங்களுடைய காதுகள் கேட்கிறதினாலும் அவைகள் பாக்கியமுள்ளவைகள் 17 அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும் நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும் காணாமலும் கேளாமலும் போனார்களென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் 18 ஆகவே விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள் 19 ஒருவன் ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது சாத்தான் வந்து அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான் அவனே வழியருகே விதைக்கப்பட்டவன் 20 கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன் வசனத்தைக்கேட்டு உடனே அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளுகிறவன் 21 ஆனாலும் தனக்குள்ளே வேரில்லாதவனாக கொஞ்சக்காலம்மட்டும் நிலைத்திருப்பான் வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான் 22 முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன் வசனத்தைக் கேட்கிறவனாக இருந்து உலகத்தின் கவலையும் செல்வத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால் அவனும் பலனற்றுப்போவான் 23 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாக இருந்து நூறுமடங்காகவும் அறுபதுமடங்காகவும் முப்பதுமடங்காகவும் பலன் தருவான் என்றார் 24 வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார் பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறது 25 மனிதர்கள் தூங்கும்போது அவனுடைய சத்துரு வந்து கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப்போனான் 26 பயிரானது வளர்ந்து கதிர்விட்டபோது களைகளும் காணப்பட்டது 27 வீட்டெஜமானுடைய வேலைக்காரர்கள் அவனிடத்தில் வந்து ஆண்டவனே நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா பின்னே அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள் 28 அதற்கு அவன் சத்துரு அதைச் செய்தான் என்றான் அப்பொழுது வேலைக்காரர்கள் நாங்கள்போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்கு விருப்பமா என்று கேட்டார்கள் 29 அதற்கு அவன் வேண்டாம் களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையும்சேர்த்து வேரோடு பிடுங்காதபடிக்கு இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள் 30 அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களைப் பார்த்து முதலாவது களைகளைப் பிடுங்கி அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள் கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார் 31 வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார் பரலோகராஜ்யம் கடுகுவிதைக்கு ஒப்பாக இருக்கிறது அதை ஒரு மனிதன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான் 32 அது எல்லாவிதைகளிலும் சிறியதாயிருந்தும் வளரும்போது எல்லாச் செடிகளிலும் பெரியதாகி ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் என்றார் 33 வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார் பரலோகராஜ்யம் புளித்த மாவிற்கு ஒப்பாக இருக்கிறது அதை ஒரு பெண் எடுத்து முழுவதும் புளிக்கும்வரைக்கும் மூன்றுபடி மாவிலே பிசைந்துவைத்தாள் என்றார் 34 இவைகளையெல்லாம் இயேசு மக்களோடு உவமைகளாகப் பேசினார் உவமைகளில்லாமல் அவர்களோடு பேசவில்லை 35 என் வாயை உவமைகளினால் திறப்பேன் உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது 36 அப்பொழுது இயேசு மக்களை அனுப்பிவிட்டு வீட்டிற்குப் போனார் அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிச்சொல்லவேண்டுமென்று கேட்டார்கள் 37 அவர் மறுமொழியாக நல்ல விதையை விதைக்கிறவன் மனிதகுமாரன் 38 நிலம் உலகம் நல்ல விதை ராஜ்யத்தின் பிள்ளைகள் களைகள் சாத்தானுடைய பிள்ளைகள் 39 அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு அறுவடை உலகத்தின் முடிவு அறுக்கிறவர்கள் தேவதூதர்கள் 40 ஆதலால் களைகளைச்சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல இந்த உலகத்தின் முடிவிலே நடக்கும் 41 மனிதகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார் அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற எல்லா இடறல்களையும் அக்கிரமம் செய்கிறவர்களையும் சேர்த்து 42 அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள் அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் 43 அப்பொழுது நீதிமான்கள் தங்களுடைய பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள் கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும் 44 அன்றியும் பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற புதையலுக்கு ஒப்பாக இருக்கிறது அதை ஒரு மனிதன் பார்த்து மறைத்து அதைப்பற்றிய மகிழ்ச்சியினாலேபோய் தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்குகிறான் 45 மேலும் பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத்தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாக இருக்கிறது 46 அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைப் பார்த்து போய் தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று அதை வாங்குகிறான் 47 அன்றியும் பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு எல்லாவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாக இருக்கிறது 48 அது நிறைந்தபோது மீனவர்கள் அதைக் கரைக்கு இழுத்து உட்கார்ந்து நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து ஆகாதவைகளை எறிந்துவிடுவார்கள் 49 இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும் தேவதூதர்கள் புறப்பட்டு நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து 50 அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள் அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார் 51 பின்பு இயேசு அவர்களைப் பார்த்து இவைகளையெல்லாம் அறிந்துகொண்டீர்களா என்று கேட்டார் அதற்கு அவர்கள் ஆம் அறிந்துகொண்டோம் ஆண்டவரே என்றார்கள் 52 அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து இப்படி இருக்கிறபடியால் பரலோகராஜ்யத்திற்கு அடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின வேதபண்டிதன் எவனும் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக்கொடுக்கிற வீட்டெஜமானாகிய மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறான் என்றார் 53 இயேசு இந்த உவமைகளைச் சொல்லிமுடித்தபின்பு அந்த இடத்தைவிட்டு 54 தாம் வளர்ந்த ஊருக்கு வந்து அவர்களுடைய ஜெப ஆலயத்திலே அவர்களுக்கு உபதேசம் செய்தார் அவர்கள் ஆச்சரியப்பட்டு இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது 55 இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா யாக்கோபு யோசே சீமோன் யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர்கள் அல்லவா 56 இவன் சகோதரிகளெல்லோரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா இப்படியிருக்க இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது என்று சொல்லி 57 அவரைக்குறித்து இடறலடைந்தார்கள் இயேசு அவர்களைப் பார்த்து தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் அவமதிக்கப்படமாட்டான் என்றார் 58 அவர்களுக்கு விசுவாசம் இல்லாததினால் அவர் அங்கே அதிக அற்புதங்களைச் செய்யவில்லை Chapter 14அத்தியாயம்– 14 1 அக்காலத்தில் காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது இயேசுவின் புகழைக் கேள்விப்பட்டு 2 தன் வேலைக்காரர்களைப் பார்த்து இவன் யோவான்ஸ்நானன் இவன் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தான் ஆகவே இவனிடத்தில் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான் 3 ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தம் யோவானைப் பிடித்துக் கட்டி சிறைச்சாலையில் வைத்திருந்தான் 4 ஏனென்றால் நீர் அவளை உன் மனைவியாக வைத்துக்கொள்வது நியாயமில்லை என்று யோவான் அவனுக்குச் சொல்லியிருந்தான் 5 ஏரோது அவனைக் கொலைசெய்ய மனதாயிருந்தும் மக்கள் அவனைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தான் 6 அப்படியிருக்க ஏரோதின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறபோது ஏரோதியாளின் மகள் அவர்கள் நடுவே நடனம்பண்ணி ஏரோதைச் சந்தோஷப்படுத்தினாள் 7 அதினிமித்தம் ஏரோது நீ எதைக்கேட்டாலும் தருவேன் என்று அவளுக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான் 8 அவள் தன் தாயினால் சொல்லப்பட்டபடியே யோவான்ஸ்நானனுடைய தலையை இங்கே ஒரு தட்டிலே வைத்து எனக்குத் தரவேண்டும் என்று கேட்டாள் 9 ராஜா துக்கமடைந்தான் ஆனாலும் ஆணையினிமித்தமும் பந்தியில் கூட இருந்தவர்களினிமித்தமும் அதைக் கொடுக்கக்கட்டளையிட்டு 10 ஆள் அனுப்பி சிறைச்சாலையிலே யோவானின் தலையை வெட்டச்செய்தான் 11 அவனுடைய தலையை ஒரு தட்டிலே கொண்டுவந்து சிறு பெண்ணுக்குக் கொடுத்தார்கள் அவள் அதைத் தன் தாயினிடத்தில் கொண்டுபோனாள் 12 அவனுடைய சீடர்கள் வந்து சரீரத்தை எடுத்து அடக்கம்செய்து பின்புபோய் அந்தச் செய்தியை இயேசுவிற்கு அறிவித்தார்கள் 13 இயேசு அதைக்கேட்டு அந்த இடத்தைவிட்டு படகில் ஏறி வனாந்திரமான ஒரு இடத்திற்குத் தனியே போனார் மக்கள் அதைக் கேள்விப்பட்டு பட்டணங்களிலிருந்து கால்நடையாக அவரிடத்திற்குப் போனார்கள் 14 இயேசு வந்து திரளான மக்களைக் கண்டு அவர்கள்மேல் மனதுருகி அவர்களில் வியாதியுள்ளவர்களைச் சுகமாக்கினார் 15 மாலைநேரமானபோது அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து இது வனாந்திரமான இடம் நேரமுமானது மக்கள் கிராமங்களுக்குப்போய்த் தங்களுக்கு உணவு பதார்த்தங்களை வாங்கும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள் 16 இயேசு அவர்களைப் பார்த்து அவர்கள் போகவேண்டியதில்லை நீங்களே அவர்களுக்கு உணவுகொடுங்கள் என்றார் 17 அதற்கு அவர்கள் இங்கே எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமேயல்லாமல் வேறொன்றும் இல்லை என்றார்கள் 18 அவைகளை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார் 19 அப்பொழுது அவர் மக்களைப் புல்லின்மேல் பந்தியிருக்கக் கட்டளையிட்டு அந்த ஐந்து அப்பங்களையும் அந்த இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்துபார்த்து ஆசீர்வதித்து அப்பங்களைப் பிட்டு சீடர்களிடத்தில் கொடுத்தார் சீடர்கள் மக்களுக்குக் கொடுத்தார்கள் 20 எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள் மீதியான அப்பத்துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடைகள்நிறைய எடுத்தார்கள் 21 பெண்களும் பிள்ளைகளும்தவிர சாப்பிட்ட ஆண்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராக இருந்தார்கள் 22 இயேசு மக்களை அனுப்பிவிடும்போது தம்முடைய சீடர்கள் படகில் ஏறி தமக்கு முன்னே அக்கரைக்குப் போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார் 23 அவர் மக்களை அனுப்பிவிட்டப்பின்பு தனித்து ஜெபம்செய்ய ஒரு மலையின்மேல் ஏறி மாலைநேரமானபோது அங்கே தனிமையாக இருந்தார் 24 அதற்குள்ளாகப் படகு நடுக்கடலிலே சேர்ந்து எதிர்க்காற்றாயிருந்தபடியால் அலைகளினால் தள்ளாடியது 25 அதிகாலையிலே இயேசு கடலின்மேல் நடந்து அவர்களிடத்திற்கு வந்தார் 26 அவர் கடலின்மேல் நடக்கிறதை சீடர்கள் கண்டு கலக்கமடைந்து பிசாசு என்று சொல்லி பயத்தினால் அலறினார்கள் 27 உடனே இயேசு அவர்களோடு பேசி திடன்கொள்ளுங்கள் நான்தான் பயப்படாமலிருங்கள் என்றார் 28 பேதுரு அவரைப் பார்த்து ஆண்டவரே நீரேயானால் நான் தண்ணீரின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான் 29 அதற்கு அவர் வா என்றார் அப்பொழுது பேதுரு படகைவிட்டு இறங்கி இயேசுவினிடத்தில் போகத் தண்ணீரின்மேல் நடந்தான் 30 காற்று பலமாக இருக்கிறதைக் கண்டு பயந்து மூழ்கும்போது ஆண்டவரே என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான் 31 உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து விசுவாசக் குறைவுள்ளவனே ஏன் சந்தேகப்பட்டாய் என்றார் 32 அவர்கள் படகில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது 33 அப்பொழுது படகில் உள்ளவர்கள் வந்து உண்மையாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி அவரைப் பணிந்துகொண்டார்கள் 34 பின்பு அவர்கள் கடலைக்கடந்து கெனேசரேத்து நாட்டிற்கு வந்தார்கள் 35 அந்த இடத்து மனிதர்கள் அவரை யார் என்று அறிந்து சுற்றுப்புறமெங்கும் செய்தி அனுப்பி வியாதியுள்ளவர்கள் எல்லோரையும் அவரிடத்தில் கொண்டுவந்து 36 அவருடைய ஆடையின் ஓரத்தையாவது அவர்கள் தொடுவதற்கு அனுமதிக்கவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள் தொட்ட எல்லோரும் குணமானார்கள் Chapter 15அத்தியாயம்– 15 1 அப்பொழுது எருசலேமிலிருந்து வந்த வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் இயேசுவினிடத்தில் வந்து 2 உம்முடைய சீடர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள் கைகழுவாமல் சாப்பிடுகிறார்களே என்றார்கள் 3 அவர்களுக்கு அவர் மறுமொழியாக நீங்கள் உங்களுடைய பாரம்பரியத்தினாலே தேவனுடைய கட்டளையை ஏன் மீறி நடக்கிறீர்கள் 4 உன் தகப்பனையும் உன் தாயையும் மதித்து நடப்பாயாக என்றும் தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும் தேவன் கட்டளை கொடுத்திருக்கிறாரே 5 நீங்களோ எவனாவது தகப்பனையாவது தாயையாவது பார்த்து உனக்கு நான் செய்யவேண்டிய உதவி எதுவோ அதை தேவனுக்குக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி தன் தகப்பனையாவது தன் தாயையாவது மதிக்காமற்போனாலும் அவனுடைய கடமை முடிந்ததென்று போதித்து 6 உங்களுடைய பாரம்பரியத்தினாலே தேவனுடைய கட்டளையை அவமாக்கிவருகிறீர்கள் 7 மாயக்காரர்களே உங்களைக்குறித்து 8 இந்த மக்கள் தங்களுடைய உதட்டளவில் என்னிடத்தில் சேர்ந்து தங்களுடைய உதடுகளினால் என்னை மதிக்கிறார்கள் அவர்கள் இருதயமோ என்னைவிட்டு தூரமாக விலகியிருக்கிறது 9 மனிதர்களுடைய கட்டளைகளை உபதேசங்களாகப் போதித்து வீணாக எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி நன்றாகச் சொல்லியிருக்கிறான் என்றார் 10 பின்பு அவர் மக்களை வரவழைத்து அவர்களைப் பார்த்து நீங்கள் கேட்டு உணருங்கள் 11 வாய்க்குள்ளே போகிறது மனிதனைத் தீட்டுப்படுத்தாது வாயிலிருந்து புறப்படுகிறதே மனிதனைத் தீட்டுப்படுத்தும் என்றார் 12 அப்பொழுது அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து பரிசேயர்கள் இந்த வசனத்தைக்கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரா என்றார்கள் 13 அவர் மறுமொழியாக என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடு பிடுங்கப்படும் 14 அவர்களை விட்டுவிடுங்கள் அவர்கள் குருடர்களுக்கு வழிகாட்டுகிற குருடர்களாக இருக்கிறார்கள் குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார் 15 அப்பொழுது பேதுரு அவரைப் பார்த்து இந்த உவமையை எங்களுக்கு விளக்கிச்சொல்லவேண்டும் என்றான் 16 அதற்கு இயேசு நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாக இருக்கிறீர்களா 17 வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றுக்குள் சென்று ஆசனவழியாகக் கழிந்துபோகும் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா 18 வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும் அவைகளே மனிதனைத் தீட்டுப்படுத்தும் 19 எப்படியென்றால் இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும் கொலைபாதகங்களும் விபசாரங்களும் வேசித்தனங்களும் களவுகளும் பொய்ச்சாட்சிகளும் அவதூறுகளும் புறப்பட்டுவரும் 20 இவைகளே மனிதனைத் தீட்டுப்படுத்தும் கைகளைக் கழுவாமல் சாப்பிடுகிறது மனிதனைத் தீட்டுப்படுத்தாது என்றார் 21 பின்பு இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார் 22 அப்பொழுது அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானியப் பெண் ஒருத்தி அவரிடத்தில் வந்து ஆண்டவரே தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள் 23 அவளுக்கு மறுமொழியாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை அப்பொழுது அவருடைய சீடர்கள் வந்து இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள் 24 அதற்கு அவர் காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் குடும்பத்தாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேதவிர மற்றவர்களுக்கல்ல என்றார் 25 அவள் வந்து ஆண்டவரே எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்துகொண்டாள் 26 அவர் அவளைப் பார்த்து பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார் 27 அதற்கு அவள் உண்மைதான் ஆண்டவரே ஆனாலும் நாய்க்குட்டிகள் தங்களுடைய எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் அப்பத்துணிக்கைகளைச் சாப்பிடுமே என்றாள் 28 இயேசு அவளுக்கு மறுமொழியாக பெண்ணே உன் விசுவாசம் பெரியது நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார் அந்த நேரமே அவளுடைய மகள் ஆரோக்கியமானாள் 29 இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு கலிலேயாக் கடலருகே வந்து ஒரு மலையின்மேல் ஏறி அங்கே உட்கார்ந்தார் 30 அப்பொழுது முடவர்கள் குருடர்கள் ஊமையர்கள் ஊனர்கள் முதலிய அநேகரை திரளான மக்கள் இயேசுவினிடத்தில் அழைத்துவந்து அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள் அவர்களை அவர் குணப்படுத்தினார் 31 ஊமையர் பேசுகிறதையும் ஊனர்கள் குணமடைகிறதையும் கைகால்கள் முடங்கியவர்கள் நடக்கிறதையும் குருடர்கள் பார்க்கிறதையும் மக்கள் கண்டு ஆச்சரியப்பட்டு இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள் 32 பின்பு இயேசு தம்முடைய சீடர்களை அழைத்து மக்களுக்காக மனதுருகுகிறேன் இவர்கள் என்னிடத்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள் இவர்களைப் பட்டினியாக அனுப்பிவிட எனக்கு மனதில்லை வழியிலே சோர்ந்துபோவார்களே என்றார் 33 அதற்கு அவருடைய சீடர்கள் இவ்வளவு திரளான மக்களுக்குத் திருப்தியுண்டாகும்படி தேவையான அப்பங்கள் இந்த வனாந்திரத்திலே நமக்கு எப்படி கிடைக்கும் என்றார்கள் 34 அதற்கு இயேசு உங்களிடம் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார் அவர்கள் ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள் 35 அப்பொழுது அவர் மக்களைத் தரையில் பந்தியிருக்கக் கட்டளையிட்டு 36 அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து நன்றிசெலுத்தி பிட்டுத் தம்முடைய சீடர்களிடத்தில் கொடுத்தார் சீடர்கள் மக்களுக்குப் பரிமாறினார்கள் 37 எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள் மீதியான அப்பத்துணிக்கைகளை ஏழு கூடைகள்நிறைய எடுத்தார்கள் 38 பெண்களும் பிள்ளைகளும்தவிர சாப்பிட்ட ஆண்கள் நான்காயிரம்பேராக இருந்தார்கள் 39 அவர் மக்களை அனுப்பிவிட்டு படகில் ஏறி மக்தலாவின் எல்லைகளுக்கு வந்தார் Chapter 16அத்தியாயம்– 16 1 பரிசேயர்களும் சதுசேயர்களும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள் 2 அவர்களுக்கு அவர் மறுமொழியாக மாலைநேரமாகிறபோது செவ்வானமிட்டிருக்கிறது அதினால் அமைதியாக இருக்கும் என்று சொல்லுகிறீர்கள் 3 உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாக இருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரர்களே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா? 4 இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேதவிர வேறு அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி அவர்களைவிட்டுப் புறப்பட்டுப்போனார் 5 அவருடைய சீடர்கள் அக்கரையைச் சேர்ந்தபோது அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள் 6 இயேசு அவர்களைப் பார்த்து பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்றார் 7 நாம் அப்பங்களைக் கொண்டுவராததினால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள் 8 இயேசு அதை அறிந்து விசுவாசக்குறைவுள்ளவர்களே அப்பங்களைக் கொண்டுவராததைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனைபண்ணுகிறதென்ன 9 இன்னும் நீங்கள் உணரவில்லையா ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும் மீதியானதை எத்தனைக் கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்பதையும் 10 ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பகிர்ந்ததையும் மீதியானதை எத்தனை கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்பதையும் நீங்கள் நினைவுகூராமலிருக்கிறீர்களா 11 பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் புளித்த மாவிற்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார் 12 அப்பொழுது அவர் அப்பத்தின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்று சொல்லாமல் பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள் 13 பின்பு இயேசு பிலிப்பு செசரியாவின் பட்டணத்திற்கு வந்தபோது தம்முடைய சீடர்களைப் பார்த்து மனிதகுமாரனாகிய என்னை மக்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார் 14 அதற்கு அவர்கள் சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும் சிலர் எலியா என்றும் வேறுசிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள் 15 அப்பொழுது அவர் நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார் 16 சீமோன்பேதுரு மறுமொழியாக நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான் 17 இயேசு அவனைப் பார்த்து யோனாவின் குமாரனாகிய சீமோனே நீ பாக்கியவான் மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார் 18 மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன் நீ பேதுருவாய் இருக்கிறாய் இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன் பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை 19 பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன் பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும் பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார் 20 அப்பொழுது தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீடர்களுக்குக் கட்டளையிட்டார் 21 அதுமுதல் இயேசு தாம் எருசலேமுக்குப்போய் மூப்பர்களாலும் பிரதான ஆசாரியர்களாலும் வேதபண்டிதர்களாலும் பல பாடுகள்பட்டு கொலையுண்டு மூன்றாம்நாளில் உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீடர்களுக்குச் சொல்லத்தொடங்கினார் 22 அப்பொழுது பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய் ஆண்டவரே இது உமக்கு சம்பவிக்கக்கூடாதே இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத்தொடங்கினான் 23 அவரோ திரும்பி பேதுருவைப் பார்த்து எனக்குப் பின்னாகப்போ சாத்தானே நீ எனக்கு இடறலாக இருக்கிறாய் தேவனுக்குரியவைகளைச் சிந்திக்காமல் மனிதர்களுக்குரியவைகளைச் சிந்திக்கிறாய் என்றார் 24 அப்பொழுது இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றவேண்டும் 25 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான் என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான் 26 மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன மனிதன் தன் ஜீவனுக்கு இணையாக என்னத்தைக் கொடுப்பான் 27 மனிதகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமை பொருந்தினவராகத் தம்முடைய தூதர்களோடு வருவார் அப்பொழுது அவனவன் செயல்களுக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார் 28 இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனிதகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காண்பதற்குமுன் மரணத்தைக் காண்பதில்லை என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் Chapter 17அத்தியாயம்– 17 1 ஆறு நாட்களுக்குப்பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல்போய் 2 அவர்களுக்கு முன்பாக மறுரூபமடைந்தார் அவருடைய முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது அவருடைய உடை ஒளியைப்போல வெண்மையானது 3 அப்பொழுது மோசேயும் எலியாவும் அவரோடு பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள் 4 அப்பொழுது பேதுரு இயேசுவைப் பார்த்து ஆண்டவரே நாம் இங்கே இருக்கிறது நல்லது உமக்கு விருப்பமானால் இங்கே உமக்கு ஒரு கூடாரமும் மோசேக்கு ஒரு கூடாரமும் எலியாவிற்கு ஒரு கூடாரமுமாக மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான் 5 அவன் பேசும்போது இதோ ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது இவர் என்னுடைய நேசகுமாரன் இவரில் பிரியமாக இருக்கிறேன் இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது 6 சீடர்கள் அதைக்கேட்டு முகங்குப்புற விழுந்து மிகவும் பயந்தார்கள் 7 அப்பொழுது இயேசு வந்து அவர்களைத் தொட்டு எழுந்திருங்கள் பயப்படாமலிருங்கள் என்றார் 8 அவர்கள் தங்களுடைய கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது இயேசுவைத்தவிர வேறொருவரையும் காணவில்லை 9 அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது இயேசு அவர்களைப் பார்த்து மனிதகுமாரன் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கும்வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார் 10 அப்பொழுது அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்களே அது எப்படியென்று கேட்டார்கள் 11 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக எலியா முந்திவந்து எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்துவது உண்மைதான் 12 ஆனாலும் எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் அவனை அறியாமல் தங்களுடைய விருப்பப்படி அவனுக்குச் செய்தார்கள் இவ்விதமாக மனிதகுமாரனும் அவர்களால் பாடுகள்படுவார் என்றார் 13 அவர் யோவான்ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீடர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள் 14 அவர்கள் மக்களிடத்தில் வந்தபோது ஒரு மனிதன் அவரிடத்தில் வந்து அவர் முன்பாக முழங்கால்படியிட்டு 15 ஆண்டவரே என் மகனுக்கு இரங்கும் அவன் வலிப்பு வியாதியினால் கொடிய வேதனைப்படுகிறான் அடிக்கடி தீயிலும் அடிக்கடி தண்ணீரிலும் விழுகிறான் 16 அவனை உம்முடைய சீடர்களிடம் கொண்டுவந்தேன் அவனை குணமாக்க அவர்களால் முடியாமற்போனது என்றான் 17 இயேசு மறுமொழியாக விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன் எதுவரைக்கும் உங்களிடம் பொறுமையாக இருப்பேன் அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார் 18 இயேசு பிசாசை அதட்டினார் உடனே அது அவனைவிட்டுப் வெளியேபோனது அந்த நேரமே அந்த இளைஞன் குணமானான் 19 அப்பொழுது சீடர்கள் இயேசுவினிடத்தில் தனிமையில் வந்து அதைத் துரத்திவிட எங்களால் ஏன் முடியாமற்போனது என்று கேட்டார்கள் 20 அதற்கு இயேசு உங்களுடைய விசுவாசக்குறைவினாலேதான் கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து இந்த இடத்தைவிட்டு அப்புறம் போ என்று சொல்ல அது அப்புறம் போகும் உங்களால் செய்யமுடியாத காரியம் ஒன்றுமிராது என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் 21 இந்த வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேதவிர மற்ற எவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார். 22 அவர்கள் கலிலேயாவிலே வாழ்ந்தபோது இயேசு அவர்களைப் பார்த்து மனிதகுமாரன் மனிதர்களுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார் 23 அவர்கள் அவரைக் கொலைசெய்வார்கள் ஆனாலும் மூன்றாம்நாளிலே உயிரோடு எழுந்திருப்பார் என்றார் அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள் 24 அவர்கள் கப்பர்நகூமில் வந்தபோது வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில் வந்து உங்களுடைய போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள் செலுத்துகிறார் என்றான் 25 அவன் வீட்டிற்குள் வந்தபோது அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனைப் பார்த்து சீமோனே உனக்கு எப்படித் தோன்றுகிறது பூமியின் ராஜாக்கள் வருமானவரியையும் மற்ற வரியையும் தங்களுடைய பிள்ளைகளிடத்திலோ அந்நியர்களிடத்திலோ யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார் 26 அதற்குப் பேதுரு அந்நியர்களிடத்தில் வாங்குகிறார்கள் என்றான் இயேசு அவனைப் பார்த்து அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டியதில்லையே 27 ஆனாலும் நாம் அவர்களுக்கு இடறலாக இல்லாதபடிக்கு நீ கடலுக்குப்போய் தூண்டில்போட்டு முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து அதின் வாயைத் திறந்துபார் ஒரு வெள்ளிக்காசைக் காண்பாய் அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடம் கொடு என்றார் Chapter 18அத்தியாயம்– 18 1 அந்த நேரத்திலே சீடர்கள் இயேசுவினிடத்தில் வந்து பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாக இருப்பான் என்று கேட்டார்கள் 2 இயேசு ஒரு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து அதை அவர்கள் நடுவே நிறுத்தி 3 நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல மாறாவிட்டால் பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் 4 ஆகவே இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாக இருப்பான் 5 இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான் 6 என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிற இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ அவனுடைய கழுத்தில் மாவரைக்கும் கல்லைக் கட்டி கடலின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாக இருக்கும் 7 இடறல்களினிமித்தம் உலகத்திற்கு ஐயோ இடறல்கள் வருவது அவசியம் ஆனாலும் எந்த மனிதனால் இடறல் வருகிறதோ அவனுக்கு ஐயோ 8 உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால் அதை வெட்டி எறிந்துபோடு நீ இரண்டு கையுடையவனாக அல்லது இரண்டு காலுடையவனாக நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைவிட முடவனாக அல்லது ஊனனாக நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாக இருக்கும் 9 உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதைப் பிடுங்கி எறிந்துபோடு இரண்டு கண்ணுடையவனாக எரிநரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணனாக நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாக இருக்கும் 10 இந்தச் சிறியவர்களில் ஒருவனையும் அற்பமாக எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள் அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் 11 மனிதகுமாரன் இழந்துபோனதை இரட்சிக்க வந்தார். 12 உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது ஒரு மனிதனுக்கு நூறு ஆடுகளிருக்க அவைகளில் ஒன்று காணாமற்போனால் அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப்போய் காணாமற்போனதைத் தேடாமலிருப்பானோ 13 அவன் அதைக் கண்டுபிடித்தால் காணாமல்போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக்குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறதைவிட அந்த ஒன்றைக்குறித்து அதிக மகிழ்ச்சியாக இருப்பான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் 14 இவ்விதமாக இந்தச் சிறியவரில் ஒருவன்கூட அழிந்துபோவது பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவின் விருப்பமல்ல 15 உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றம் செய்தால் அவனிடத்தில் போய் நீயும் அவனும் தனிமையாக இருக்கும்போது அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து அவன் உனக்குச் செவிகொடுத்தால் உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய் 16 அவன் செவிகொடுக்காமற்போனால் இரண்டு மூன்று சாட்சிகளுடைய ஒப்புதல்களினாலே காரியங்களெல்லாம் உறுதிப்படும்படி இரண்டொருவரை உன்னுடனே அழைத்துக்கொண்டு போ 17 அவர்களுக்கும் அவன் செவிகொடுக்காமற்போனால் அதை சபைக்குத் தெரியப்படுத்து சபைக்கும் செவிகொடுக்காமற்போனால் அவன் உனக்கு வேறுமார்க்கத்தான்போலவும் வரி வசூலிப்பவனைப்போலவும் இருப்பானாக 18 உலகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும் உலகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் 19 அல்லாமலும் உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக்குறித்தாவது பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால் பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் 20 ஏனென்றால் இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார் 21 அப்பொழுது பேதுரு அவரிடத்தில் வந்து ஆண்டவரே என் சகோதரன் எனக்கு விரோதமாகக் குற்றம் செய்துவந்தால் நான் எத்தனைமுறை மன்னிக்கவேண்டும் ஏழுமுறை மட்டுமோ என்று கேட்டான் 22 அதற்கு இயேசு ஏழுமுறை மாத்திரமல்ல ஏழெழுபதுமுறைமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன் 23 எப்படியென்றால் பரலோகராஜ்யம் தன் வேலைக்காரர்களிடத்தில் கணக்குப்பார்க்கவேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவிற்கு ஒப்பாக இருக்கிறது 24 அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது பத்தாயிரம் வெள்ளிப்பணம் கடன்பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள் 25 கடனைத்தீர்க்க அவனால் முடியாதபடியால் அவனுடைய எஜமான் அவனையும் அவனுடைய மனைவியையும் பிள்ளைகளையும் அவனுக்கு இருந்த எல்லாவற்றையும் விற்று கடனைத்தீர்க்கும்படிக் கட்டளையிட்டான் 26 அப்பொழுது அந்த வேலைக்காரன் காலில் விழுந்து வணங்கி எஜமானனே என்னிடத்தில் பொறுமையாக இரும் எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத்தீர்க்கிறேன் என்றான் 27 அந்த வேலைக்காரனுடைய எஜமான் மனமிரங்கி அவனை விடுதலைசெய்து கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான் 28 அப்படியிருக்க அந்த வேலைக்காரன் புறப்பட்டுப்போகும்போது தன்னிடத்தில் நூறு வெள்ளிக்காசுகள் கடன்பட்டிருந்தவனாகிய தன்னுடைய உடன்வேலைக்காரர்களில் ஒருவனைப் பார்த்து அவனைப் பிடித்து கழுத்தை நெரித்து நீ வாங்கின கடனை எனக்குக் கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான் 29 அப்பொழுது அவனுடைய உடன்வேலைக்காரன் அவன் காலிலே விழுந்து என்னிடத்தில் பொறுமையாக இரும் எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று அவனை வேண்டிக்கொண்டான் 30 அவனோ சம்மதிக்காமல் போய் அவன் வாங்கின கடனைக் கொடுத்துத்தீர்க்கும்வரைக்கும் அவனைச் சிறைச்சாலையில் வைத்தான் 31 நடந்ததை அவனுடைய உடன்வேலைக்காரர்கள் பார்த்து மிகவும் துக்கப்பட்டு எஜமானிடத்தில் வந்து நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள் 32 அப்பொழுது அவனுடைய எஜமான் அவனை அழைப்பித்து பொல்லாத வேலைக்காரனே நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன் 33 நான் உனக்கு இரங்கினதுபோல நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி 34 அவனுடைய எஜமான் கோபமடைந்து அவன் வாங்கின கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத்தீர்க்கும்வரைக்கும் தண்டிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான் 35 நீங்களும் அவனவன் தன்தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாக மன்னிக்காமற்போனால் என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார் Chapter 19அத்தியாயம்– 19 1 இயேசு இந்த வசனங்களைச் சொல்லிமுடித்தபின்பு அவர் கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அக்கரையான யூதேயாவிற்கு வந்தார் 2 திரளான மக்கள் அவருக்குப் பின்னே சென்றார்கள் அந்த இடத்தில் அவர்களை குணமாக்கினார் 3 அப்பொழுது பரிசேயர்கள் அவரைச் சோதிக்கவேண்டுமென்று அவரிடத்தில் வந்து கணவனானவன் தன் மனைவியை எந்தக்காரணத்தினாலாவது விவாகரத்து செய்வது நியாயமா என்று கேட்டார்கள் 4 அவர்களுக்கு அவர் மறுமொழியாக ஆரம்பத்திலே மனிதர்களை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும் 5 இதினிமித்தம் கணவனானவன் தன் தகப்பனையும் தாயையும்விட்டுத் தன் மனைவியோடு இணைந்திருப்பான் அவர்கள் இருவரும் ஒரே சரீரமாக இருப்பார்கள் என்று அவர் சொன்னதையும் நீங்கள் வாசிக்கவில்லையா 6 இப்படி இருக்கிறபடியினால் அவர்கள் இருவர்களாக இல்லாமல் ஒரே சரீரமாக இருக்கிறார்கள் ஆகவே தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கவேண்டும் என்றார் 7 அதற்கு அவர்கள் அப்படியானால் விடுதலைப்பத்திரம் கொடுத்து அவளை விவாகரத்து செய்யலாம் என்று மோசே ஏன் கட்டளையிட்டார் என்றார்கள் 8 அதற்கு அவர் உங்களுடைய மனைவிகளை விவாகரத்து செய்யலாம் என்று உங்களுடைய இருதயக்கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார் ஆரம்பமுதலாய் அப்படியிருக்கவில்லை 9 ஆதலால் எவனாவது தன் மனைவி வேசித்தனம் செய்ததினிமித்தமேயன்றி அவளை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம்செய்தால் அவன் விபசாரம் செய்கிறவனாக இருப்பான் விவாகரத்து செய்யப்பட்டவளைத் திருமணம் செய்கிறவனும் விபசாரம் செய்கிறவனாக இருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் 10 அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து மனைவியைப்பற்றி கணவனுடைய காரியம் இப்படியிருந்தால் திருமணம்செய்கிறது நல்லதல்ல என்றார்கள் 11 அதற்கு அவர் வரம்பெற்றவர்களேதவிர மற்றவர்கள் இந்த வார்த்தையை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் 12 தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாகப் பிறந்தவர்களும் உண்டு மனிதர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு பரலோக ராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார் 13 அப்பொழுது சிறு பிள்ளைகளின்மேல் அவர் கரங்களை வைத்து ஜெபம்செய்யும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள் கொண்டுவந்தவர்களைச் சீடர்கள் அதட்டினார்கள் 14 இயேசுவோ சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள் அவர்களைத் தடைசெய்யாமலிருங்கள் பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி 15 அவர்கள்மேல் கரங்களை வைத்து பின்பு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுப்போனார் 16 அப்பொழுது ஒருவன் வந்து அவரைப் பார்த்து நல்ல போதகரே நித்தியஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான் 17 அதற்கு அவர் நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன் தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கட்டளைகளைக் கைக்கொள் என்றார் 18 அவன் அவரைப் பார்த்து எவைகளை என்று கேட்டான் அதற்கு இயேசு கொலை செய்யாதிருப்பாயாக விபசாரம் செய்யாதிருப்பாயாக களவு செய்யாதிருப்பாயாக பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக 19 உன் தகப்பனையும் உன் தாயையும் மதிப்பாயாக உன்னிடத்தில் நீ அன்புசெலுத்துவதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்பவைகளையே என்றார் 20 அந்த வாலிபன் அவரைப் பார்த்து இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன என்றான் 21 அதற்கு இயேசு நீ தேவனுக்கு பூரண சற்குணனாக இருக்கவிரும்பினால் போய் உனக்கு உண்டானவைகளை விற்று தரித்திரர்களுக்குக் கொடு அப்பொழுது பரலோகத்தில் உனக்குச் செல்வம் உண்டாயிருக்கும் பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார் 22 அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாக இருந்தபடியால் இயேசு சொன்னவைகளைக் கேட்டபொழுது துக்கமடைந்தவனாகப் போய்விட்டான் 23 அப்பொழுது இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து செல்வந்தன் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது சுலபமல்லவென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் 24 மேலும் செல்வந்தன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் 25 அவருடைய சீடர்கள் அதைக்கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டு அப்படியானால் யார் இரட்சிக்கப்படமுடியும் என்றார்கள் 26 இயேசு அவர்களைப் பார்த்து மனிதர்களால் இது முடியாததுதான் தேவனாலே எல்லாம் முடியும் என்றார் 27 அப்பொழுது பேதுரு அவரைப் பார்த்து இதோ நாங்கள் எல்லாவற்றையும்விட்டு உம்மைப் பின்பற்றினோமே எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றான் 28 அதற்கு இயேசு மறுபிறப்பின் காலத்திலே மனிதகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்திருக்கும்போது என்னைப் பின்பற்றின நீங்களும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருப்பீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் 29 என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது சகோதரர்களையாவது சகோதரிகளையாவது தகப்பனையாவது தாயையாவது மனைவியையாவது பிள்ளைகளையாவது நிலங்களையாவது இழந்தவன் எவனோ அவன் நூறுமடங்காகப் பெற்று நித்தியஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான் 30 ஆனாலும் முந்தினோர் அநேகர் பிந்தினோராகவும் பிந்தினோர் அநேகர் முந்தினோராகவும் இருப்பார்கள் என்றார் Chapter 20அத்தியாயம்– 20 1 பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறது அவன் தன் திராட்சைத்தோட்டத்திற்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான் 2 வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு வெள்ளிக்காசு கூலிபேசி அவர்களைத் தன் திராட்சைத்தோட்டத்திற்கு அனுப்பினான் 3 காலை ஒன்பதுமணியளவில் அவன் புறப்பட்டுப்போய் கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைப் பார்த்து 4 நீங்களும் திராட்சைத்தோட்டத்திற்குப் போங்கள் நியாயமானபடி உங்களுக்குக் கூலி கொடுப்பேன் என்றான் அவர்களும் போனார்கள் 5 மறுபடியும் நண்பகல் பன்னிரண்டுமணிக்கும் மூன்றுமணிக்கும் அவன்போய் அப்படியே செய்தான் 6 ஐந்துமணியளவிலும் அவன்போய் சும்மா நிற்கிற வேறு சிலரைப் பார்த்து நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான் 7 அதற்கு அவர்கள் ஒருவரும் எங்களுக்கு வேலை கொடுக்கவில்லை என்றார்கள் அவன் அவர்களைப் பார்த்து நீங்களும் திராட்சைத்தோட்டத்திற்குப் போங்கள் நியாயமானபடி கூலி பெற்றுக்கொள்வீர்கள் என்றான் 8 மாலைநேரத்தில் திராட்சைத்தோட்டத்தின் எஜமான் தன் நிர்வாகியைப் பார்த்து நீ வேலையாட்களை அழைத்து பிந்தி வந்தவர்கள் தொடங்கி முதலில் வந்தவர்கள்வரைக்கும் அவர்களுக்குக் கூலிகொடு என்றான் 9 அப்பொழுது ஐந்துமணியளவில் சேர்க்கப்பட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு வெள்ளிக்காசு வாங்கினார்கள் 10 முந்தி சேர்க்கப்பட்டவர்கள் வந்து தங்களுக்கு அதிக கூலி கிடைக்கும் என்று நினைத்தார்கள் அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு வெள்ளிக்காசு வாங்கினார்கள் 11 வாங்கிக்கொண்டு வீட்டெஜமானைப் பார்த்து 12 பிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒருமணிநேரம்மட்டும் வேலைசெய்தார்கள் பகலின் பாடுகளையும் வெயிலின் வெப்பத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள் 13 அவர்களில் ஒருவனுக்கு அவன் மறுமொழியாக நண்பனே நான் உனக்கு அநியாயம் செய்யவில்லை நீ என்னிடத்தில் ஒரு வெள்ளிக்காசுக்குச் சம்மதிக்கவில்லையா 14 உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ உனக்குக் கொடுத்ததுபோல பிந்திவந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய விருப்பம் 15 என்னுடையதை என் விருப்பப்படிச்செய்ய எனக்கு அதிகாரமில்லையா நான் தாராளமனமுடையனாக இருக்கிறபடியால் நீ பொறாமைகொள்ளலாமா என்றான் 16 இவ்விதமாக பிந்தினோர் முந்தினோராகவும் முந்தினோர் பிந்தினோராகவும் இருப்பார்கள் அழைக்கப்பட்டவர்கள் அநேகர் தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார் 17 இயேசு எருசலேமுக்குப் போகும்போது வழியிலே பன்னிரண்டு சீடர்களையும் தனியே அழைத்து 18 இதோ எருசலேமுக்குப் போகிறோம் மனிதகுமாரன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் வேதபண்டிதரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார் அவர்கள் அவரை மரணதண்டனைக்குள்ளாகத் தீர்த்து 19 அவரைப் பரிகாசம்பண்ணவும் சாட்டையினால் அடிக்கவும் சிலுவையில் அறையவும் யூதரல்லாதவரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள் ஆனாலும் மூன்றாம்நாளிலே அவர் உயிரோடு எழுந்திருப்பார் என்றார் 20 அப்பொழுது செபெதேயுவின் குமாரர்களுடைய தாய் தன் குமாரர்களோடுகூட அவரிடத்தில் வந்து அவரைப் பணிந்துகொண்டு உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் செய்யவேண்டும் என்றாள் 21 அவர் அவளைப் பார்த்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் அதற்கு அவள் உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரர்களாகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலதுபக்கத்திலும் ஒருவன் உமது இடதுபக்கத்திலும் உட்காரும்படி அருள்செய்யவேண்டும் என்றாள் 22 இயேசு மறுமொழியாக நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும் நான் பெறும் இடத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா என்றார் அதற்கு அவர்கள் கூடும் என்றார்கள் 23 அவர் அவர்களைப் பார்த்து என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள் நான் பெறும் இடத்தையும் நீங்கள் பெறுவீர்கள் ஆனாலும் என் வலதுபக்கத்திலும் என் இடதுபக்கத்திலும் உட்காரும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம்செய்யப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல் மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார் 24 மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு அந்த இரண்டு சகோதரர்கள்மேல் கோபமடைந்தார்கள் 25 அப்பொழுது இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து யூதரல்லாதவர்களுடைய தலைவர்கள் அவர்களை இறுமாப்பாக ஆளுகிறார்கள் என்றும் அதிகாரமுடைய மனிதர்கள் அவர்கள்மேல் கடினமாக அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் 26 உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது உங்களில் எவனாவது பெரியவனாக இருக்கவிரும்பினால் அவன் உங்களுக்குப் பணிவிடைசெய்கிறவனாக இருக்கவேண்டும் 27 உங்களில் எவனாவது முதன்மையானவனாக இருக்கவிரும்பினால் அவன் உங்களுக்குப் பணிவிடைசெய்கிறவனாக இருக்கவேண்டும் 28 அப்படியே மனிதகுமாரனும் பணிவிடை பெரும்படி வராமல் பணிவிடைசெய்யவும் அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார் 29 அவர்கள் எரிகோவிலிருந்து புறப்பட்டுப்போகும்போது திரளான மக்கள் அவருக்குப் பின் சென்றார்கள் 30 அப்பொழுது வழியருகே உட்கார்ந்திருந்த இரண்டு குருடர்கள் இயேசு அவ்வழியே வருகிறார் என்று கேள்விப்பட்டு ஆண்டவரே தாவீதின் குமாரனே எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள் 31 அவர்கள் பேசாதிருக்கும்படி மக்கள் அவர்களை அதட்டினார்கள் அவர்களோ ஆண்டவரே தாவீதின் குமாரனே எங்களுக்கு இரங்கும் என்று அதிகமாகக் கூப்பிட்டார்கள் 32 இயேசு நின்று அவர்களைத் தம்மிடத்தில் அழைத்து நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறீர்கள் என்றார் 33 அதற்கு அவர்கள் ஆண்டவரே எங்களுடைய கண்களைத் திறக்கவேண்டும் என்றார்கள் 34 இயேசு மனதுருகி அவர்கள் கண்களைத் தொட்டார் உடனே அவர்கள் பார்வையடைந்து அவருக்குப் பின்னே சென்றார்கள் Chapter 21அத்தியாயம்– 21 1 அவர்கள் எருசலேமுக்கு அருகாமையில் சேர்ந்து ஒலிவமலைக்கு அருகான பெத்பகேயுக்கு வந்தபோது இயேசுவானவர் சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து 2 உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்திற்குப் போங்கள் போனவுடனே அங்கே ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள் அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டுவாருங்கள் 3 ஒருவன் உங்களுக்கு ஏதாவது சொன்னால் இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள் உடனே அவைகளை அனுப்பிவிடுவான் என்று சொல்லி அவர்களை அனுப்பினார் 4 இதோ உன் ராஜா சாந்தகுணமுள்ளவராக கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள் என்று 5 தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது 6 சீடர்கள்போய் இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து 7 கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து அவைகள்மேல் தங்களுடைய ஆடைகளைப் போட்டு அவரை ஏற்றினார்கள் 8 திரளான மக்கள் தங்களுடைய ஆடைகளை வழியிலே விரித்தார்கள் வேறுசிலர் மரக்கிளைகளை வெட்டி வழியிலே பரப்பினார்கள் 9 முன்னே நடப்பவர்களும் பின்னே நடப்பவர்களுமாகிய திரளான மக்கள் தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் போற்றப்படத்தக்கவர் உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள் 10 அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கும்போது நகரத்தார் அனைவரும் ஆச்சரியப்பட்டு இவர் யார் என்று விசாரித்தார்கள் 11 அதற்கு மக்கள் இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள் 12 இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து ஆலயத்திலே விற்கிறவர்களும் வாங்குகிறவர்களுமாகிய அனைவரையும் வெளியே துரத்தி காசுக்காரர்களுடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்து 13 என்னுடைய வீடு ஜெபவீடு எனப்படும் என்று எழுதியிருக்கிறது நீங்களோ அதைக் திருடர்களுடைய குகையாக்கினீர்கள் என்றார் 14 அப்பொழுது குருடர்களும் முடவர்களும் தேவாலயத்திலே அவரிடத்திற்கு வந்தார்கள் அவர்களை குணமாக்கினார் 15 அவர் செய்த அதிசயங்களையும் தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா என்று தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும் பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் பார்த்து கோபமடைந்து 16 அவரைப் பார்த்து இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள் அதற்கு இயேசு ஆம் கேட்கிறேன் குழந்தைகளுடைய வாயினாலும் சிறுவர்களுடைய வாயினாலும் துதி உண்டாகும்படிச் செய்தீர் என்பதை நீங்கள் ஒருபோதும் வாசிக்கவில்லையா என்றார் 17 அவர்களைவிட்டு நகரத்திலிருந்து புறப்பட்டு பெத்தானியாவிற்குப்போய் அங்கே இரவில் தங்கினார் 18 காலையிலே அவர் நகரத்திற்குத் திரும்பிவரும்போது அவருக்குப் பசியுண்டானது 19 அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைப் பார்த்து அதினிடத்திற்குப்போய் அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல் இனி ஒருபோதும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார் உடனே அத்திமரம் பட்டுப்போனது 20 சீடர்கள் அதைப் பார்த்து இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாகப் பட்டுப்போனது என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள் 21 இயேசு அவர்களைப் பார்த்து நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாக இருந்தால் இந்த அத்திமரத்திற்குச் செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல் இந்த மலையைப் பார்த்து நீ பெயர்ந்து கடலிலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் 22 மேலும் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாக ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார் 23 அவர் தேவாலயத்தில் வந்து உபதேசம்பண்ணும்போது பிரதான ஆசாரியர்களும் மக்களின் மூப்பர்களும் அவரிடத்தில் வந்து நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர் இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார் என்று கேட்டார்கள் 24 இயேசு மறுமொழியாக நானும் உங்களிடம் ஒரு காரியத்தைக் கேட்கிறேன் அதை எனக்குச் சொல்லுவீர்களானால் நானும் எந்த அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன் 25 யோவான் கொடுத்த ஞானஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ மனிதர்களால் உண்டாயிற்றோ யாரால் உண்டானது என்று கேட்டார் அதற்கு அவர்கள் தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால் பின்னே ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று நம்மைக் கேட்பார் 26 மனிதர்களால் உண்டாயிற்றென்று சொல்வோமானால் மக்களுக்குப் பயப்படுகிறோம் எல்லோரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறார்களே என்று தங்களுக்குள்ளே ஆலோசனைசெய்து 27 இயேசுவிற்கு மறுமொழியாக எங்களுக்குத் தெரியாது என்றார்கள் அப்பொழுது அவர் நானும் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்வதில்லை என்றார் 28 ஆனாலும் உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள் மூத்தவனிடத்தில் அவன் வந்து மகனே நீ போய் இன்றைக்கு என் திராட்சைத்தோட்டத்தில் வேலைசெய் என்றான் 29 அதற்கு அவன் மாட்டேன் என்றான் ஆனாலும் பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப்போனான் 30 இளையவனிடத்திலும் அவன் வந்து அப்படியே சொன்னான் அதற்கு அவன் போகிறேன் ஐயா என்று சொல்லியும் போகவில்லை 31 இவ்விருவரில் எவன் தகப்பனுடைய விருப்பத்தின்படி செய்தவன் என்று கேட்டார் அதற்கு அவர்கள் மூத்தவன்தான் என்றார்கள் அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து வரி வசூலிப்பவர்களும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் 32 ஏனென்றால் யோவான் நீதிமார்க்கமாக உங்களிடம் வந்திருந்தும் நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை வரி வசூலிப்பவர்களும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள் அதை நீங்கள் கண்டும் அவனை விசுவாசிக்கும்படியாகப் பின்பாவது மனஸ்தாபப்படவில்லை என்றார் 33 வேறொரு உவமையைக் கேளுங்கள் வீட்டெஜமானாகிய ஒரு மனிதன் இருந்தான் அவன் ஒரு திராட்சைத்தோட்டத்தை உண்டாக்கி அதைச் சுற்றிலும் வேலியடைத்து அதில் ஒரு ஆலையை உருவாக்கி கோபுரத்தையும் கட்டி தோட்டக்காரர்களுக்கு அதைக் குத்தகைக்கு விட்டு வெளிதேசத்திற்குச் சென்றிருந்தான் 34 அறுவடைக்காலம் நெருங்கியபோது அதின் கனிகளை வாங்கிக்கொண்டுவரும்படி தன் வேலைக்காரர்களைத் தோட்டக்காரர்களிடத்தில் அனுப்பினான் 35 தோட்டக்காரர்கள் அந்த வேலைக்காரர்களைப்பிடித்து ஒருவனை அடித்து ஒருவனைக் கொலைசெய்து ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள் 36 பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறு வேலைக்காரர்களை அனுப்பினான் அவர்களையும் அப்படியே செய்தார்கள் 37 கடைசியிலே அவன் என் குமாரனுக்கு பயப்படுவார்கள் என்று சொல்லி தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான் 38 தோட்டக்காரர்கள் குமாரனைக் கண்டபோது இவனே வாரிசு இவனைக் கொன்று இவனுடைய சொத்தை எடுத்துக்கொள்ளுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு 39 அவனைப் பிடித்துத் திராட்சைத்தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொலைசெய்தார்கள் 40 அப்படியிருக்க திராட்சைத்தோட்டத்தின் எஜமான் வரும்போது அந்தத் தோட்டக்காரர்களை என்ன செய்வான் என்று கேட்டார் 41 அதற்கு அவர்கள் அந்தக் கொடியவர்களைக் கொடுமையாக அழித்து ஏற்றக் காலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கக்கூடிய வேறு தோட்டக்காரர்களிடத்தில் திராட்சைத்தோட்டத்தைக் குத்தகைக்குக் கொடுப்பான் என்றார்கள் 42 இயேசு அவர்களைப் பார்த்து வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லானது அது கர்த்தராலே ஆனது அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருபோதும் வாசிக்கவில்லையா 43 ஆகவே தேவனுடைய ராஜ்யம் உங்களிடமிருந்து நீக்கப்பட்டு அதற்கேற்ற கனிகளைத் தருகின்ற மக்களுக்குக் கொடுக்கப்படும் 44 இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான் இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் 45 பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் அவருடைய உவமைகளைக் கேட்டு தங்களைக்குறித்துச் சொல்லுகிறார் என்று அறிந்து 46 அவரைப் பிடிக்க வகைதேடினார்கள் ஆனாலும் மக்கள் அவரைத் தீர்க்கதரிசியென்று நினைத்தபடியினால் அவர்களுக்குப் பயந்திருந்தார்கள் Chapter 22அத்தியாயம்– 22 1 இயேசு மறுபடியும் அவர்களோடு உவமைகளாகப் பேசிச் சொன்னது என்னவென்றால் 2 பரலோகராஜ்யம் தன் குமாரனுக்கு திருமணம் செய்த ஒரு ராஜாவிற்கு ஒப்பாக இருக்கிறது 3 அழைக்கப்பட்டவர்களைத் திருமணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் வேலைக்காரர்களை அனுப்பினான் அவர்களோ வர விருப்பமில்லாதிருந்தார்கள் 4 அப்பொழுது அவன் வேறு வேலைக்காரர்களை அழைத்து நீங்கள் போய் இதோ என் விருந்தை ஆயத்தம் செய்தேன் என் எருதுகளும் கொழுத்த கன்றுக்குட்டிகளும் அடிக்கப்பட்டது எல்லாம் ஆயத்தமாக இருக்கிறது திருமணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்களென்று அனுப்பினான் 5 அழைக்கப்பட்டவர்களோ அதை அசட்டைசெய்து ஒருவன் தன் வயலுக்கும் ஒருவன் தன் வியாபாரத்திற்கும் போய்விட்டார்கள் 6 மற்றவர்கள் அவனுடைய வேலைக்காரர்களைப்பிடித்து அவமானப்படுத்தி கொலைசெய்தார்கள் 7 ராஜா அதைக் கேள்விப்பட்டு கோபமடைந்து தன் படைகளை அனுப்பி அந்தக் கொலைபாதகர்களை அழித்து அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான் 8 அப்பொழுது அவன் தன் வேலைக்காரர்களைப் பார்த்து திருமணவிருந்து ஆயத்தமாக இருக்கிறது அழைக்கப்பட்டவர்களோ அதற்கு தகுதியற்றவர்களாக போனார்கள் 9 ஆகவே நீங்கள் வீதிகளிலேபோய் காணப்படுகிற அனைவரையும் திருமணத்திற்கு அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான் 10 அந்த வேலைக்காரர்கள் புறப்பட்டு வழிகளிலேபோய் தாங்கள் கண்ட நல்லவர்கள் பொல்லாதவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டுவந்தார்கள் திருமண மண்டபம் விருந்தாளிகளால் நிறைந்திருந்தது 11 விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே நுழைந்தபோது திருமணஆடை அணிந்திராத ஒரு மனிதனை அங்கே பார்த்து 12 நண்பனே நீ திருமணஆடை இல்லாதவனாக இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான் அதற்கு அவன் பேசாமலிருந்தான் 13 அப்பொழுது ராஜா பணிவிடைக்காரர்களைப் பார்த்து இவனுடைய கையையும் காலையும் கட்டிக் கொண்டுபோய் அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான் 14 அந்தப்படியே அழைக்கப்பட்டவர்கள் அநேகர் தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார் 15 அப்பொழுது பரிசேயர்கள்போய் பேச்சிலே அவரை அகப்படுத்தும்படி யோசனைசெய்து 16 தங்களுடைய சீடர்களையும் ஏரோதியர்களையும் அவரிடத்தில் அனுப்பினார்கள் அவர்கள் வந்து போதகரே நீர் உண்மையுள்ளவரென்றும் தேவனுடைய வழியை உண்மையாக போதிக்கிறவரென்றும் நீர் பட்சபாதமில்லாதவராக இருப்பதால் எவனைக்குறித்தும் உமக்குக் கவலை இல்லையென்றும் அறிந்திருக்கிறோம் 17 ஆதலால் உமக்கு எப்படித் தோன்றுகிறது இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ அல்லவோ அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள் 18 இயேசு அவர்களுடைய தீயகுணத்தை அறிந்து மாயக்காரர்களே நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள் 19 வரிப்பணத்தை எனக்குக் காண்பியுங்கள் என்றார் அவர்கள் ஒரு பணத்தை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள் 20 அப்பொழுது அவர் இந்த உருவமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார் 21 இராயனுடையது என்றார்கள் அதற்கு அவர் அப்படியானால் இராயனுடையதை இராயனுக்கும் தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார் 22 அவர்கள் அதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு அவரைவிட்டுப் போய்விட்டார்கள் 23 உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர்கள் அன்றையதினம் அவரிடம் வந்து 24 போதகரே ஒருவன் வாரிசு இல்லாமல் மரித்துப்போனால் அவனுடைய சகோதரன் அவன் மனைவியை திருமணம்செய்து தன் சகோதரனுக்கு வாரிசு உண்டாக்கவேண்டும் என்று மோசே சொன்னாரே 25 எங்களுக்குள்ளே சகோதரர்கள் ஏழுபேர் இருந்தார்கள் மூத்தவன் திருமணம்செய்து மரித்து வாரிசு இல்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுப்போனான் 26 அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன்முதல் ஏழாம் சகோதரன்வரைக்கும் செய்தார்கள் 27 எல்லோருக்கும்பின்பு அந்த பெண்ணும் மரித்துப்போனாள் 28 ஆகவே உயிர்த்தெழுதலில் அந்த ஏழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாக இருப்பாள் அவர்கள் எல்லோரும் அவளைத் திருமணம் செய்திருந்தார்களே என்று கேட்டார்கள் 29 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக நீங்கள் வேதவாக்கியங்களையும் தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தவறாகப் புரிந்துகொள்ளுகிறீர்கள் 30 உயிர்த்தெழுதலில் பெண் எடுப்பதும் இல்லை கொடுப்பதும் இல்லை அவர்கள் பரலோகத்திலே தேவதூதர்களைப்போல இருப்பார்கள் 31 மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாக இருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா 32 தேவன் மரித்தோருக்கு தேவனாக இல்லாமல் ஜீவனுள்ளோருக்கு தேவனாக இருக்கிறார் என்றார் 33 மக்கள் இதைக்கேட்டு அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள் 34 அவர் சதுசேயர்களைப் பேசவிடாமல் வாயடைத்தார் என்று பரிசேயர்கள் கேள்விப்பட்டு அவரிடத்தில் கூடிவந்தார்கள் 35 அவர்களில் நியாயப்பண்டிதன் ஒருவன் அவரைச் சோதிக்கும்படி 36 போதகரே நியாயப்பிரமாணத்திலே எந்தக் கட்டளை முதன்மையானது என்று கேட்டான் 37 இயேசு அவனைப் பார்த்து உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புசெலுத்துவாயாக 38 இது முதலாம் பெரிய கட்டளை 39 இதற்கு இணையாக இருக்கிற இரண்டாம் கட்டளை என்னவென்றால் உன்னிடத்தில் நீ அன்புசெலுத்துவதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்பதே 40 இவ்விரண்டு கட்டளைகளிலும் நியாயப்பிரமாணம் முழுவதும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார் 41 பரிசேயர்கள் கூடியிருக்கும்போது இயேசு அவர்களைப் பார்த்து 42 கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அவர் யாருடைய குமாரன் என்று கேட்டார் அவர் தாவீதின் குமாரன் என்றார்கள் 43 அதற்கு அவர் அப்படியானால் தாவீது பரிசுத்த ஆவியானவராலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி 44 நான் உம்முடைய விரோதிகளை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரிடம் சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே 45 தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க அவனுக்கு அவர் குமாரனாக இருப்பது எப்படி என்றார் 46 அதற்கு மறுமொழியாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லமுடியாதிருந்தது அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை Chapter 23அத்தியாயம்– 23 1 பின்பு இயேசு மக்களையும் தம்முடைய சீடர்களையும் பார்த்து 2 வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் மோசேயினுடைய இருக்கையில் உட்கார்ந்திருக்கிறார்கள் 3 ஆகவே நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற எல்லாவற்றையும் கைக்கொண்டு செய்யுங்கள் அவர்களுடைய செய்கையின்படி செய்யாமலிருங்கள் ஏனென்றால் அவர்கள் சொல்லுகிறார்கள் சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள் 4 சுமக்கமுடியாத பாரமான சுமைகளைக் கட்டி மனிதர்களுடைய தோள்களின்மேல் சுமத்துகிறார்கள் தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள் 5 தங்களுடைய செயல்களையெல்லாம் மனிதர்கள் காணவேண்டுமென்று செய்கிறார்கள் தங்களுடைய காப்புநாடாக்களை அகலமாக்கி தங்களுடைய ஆடைகளின் தொங்கல்களைப் பெரிதாக்கி 6 விருந்துகளில் முதன்மையான இடங்களையும் ஜெப ஆலயங்களில் முதன்மையான இருக்கைகளையும் 7 சந்தைவெளிகளில் வணக்கங்களையும் மனிதர்களால் ரபீ ரபீ என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள் 8 நீங்களோ ரபீ என்று அழைக்கப்படாமலிருங்கள் கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராக இருக்கிறார் நீங்கள் எல்லோரும் சகோதரர்களாக இருக்கிறீர்கள் 9 பூமியிலே ஒருவனையும் உங்களுடைய பிதா என்று சொல்லாதிருங்கள் பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாக இருக்கிறார் 10 நீங்கள் போதகர் என்றும் அழைக்கப்படாமலிருங்கள் கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராக இருக்கிறார் 11 உங்களில் பெரியவனாக இருக்கிறவன் உங்களுக்கு வேலைக்காரனாக இருக்கவேண்டும் 12 தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான் தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் 13 மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ மனிதர்கள் பிரவேசிக்கமுடியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள் நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை பிரவேசிக்கப்போகிறவர்களை பிரவேசிக்கவிடுகிறதுமில்லை 14 மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்செய்து, விதவைகளின் வீடுகளை அழித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக தண்டனையை அடைவீர்கள். 15 மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ ஒருவனை உங்களுடைய மதத்தானாக்கும்படி கடலையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள் அவன் உங்களுடைய மதத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாக நரகத்தின் மகனாக்குகிறீர்கள் 16 குருடர்களான வழிகாட்டிகளே உங்களுக்கு ஐயோ எவனாவது தேவாலயத்தின்பேரில் சத்தியம்செய்தால் அதினால் ஒன்றுமில்லையென்றும் எவனாவது தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்செய்தால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள் 17 மதிகேடர்களே குருடர்களே எது முக்கியம் பொன்னோ பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ 18 மேலும் எவனாவது பலிபீடத்தின்பேரில் சத்தியம்செய்தால் அதினால் ஒன்றுமில்லையென்றும் எவனாவது அதின்மேல் இருக்கிற காணிக்கையின்பேரில் சத்தியம்செய்தால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள் 19 மதிகேடர்களே குருடர்களே எது முக்கியம் காணிக்கையோ காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ 20 ஆகவே பலிபீடத்தின்பேரில் சத்தியம்செய்கிறவன் அதின்பேரிலும் அதின்மேலுள்ள எல்லாவற்றின்பேரிலும் சத்தியம்செய்கிறான் 21 தேவாலயத்தின்பேரில் சத்தியம்செய்கிறவன் அதின்பேரிலும் அதில் வாசமாயிருக்கிறவர்பேரிலும் சத்தியம்செய்கிறான் 22 பரலோகத்தின்பேரில் சத்தியம்செய்கிறவன் தேவனுடைய சிங்காசனத்தின்பேரிலும் அதில் வீற்றிருக்கிறவர்பேரிலும் சத்தியம்செய்கிறான் 23 மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ நீங்கள் புதினாவிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள் இவைகளையும் செய்யவேண்டும் அவைகளையும் விடாமலிருக்கவேண்டுமே 24 குருடர்களான வழிகாட்டிகளே கொசு இல்லாதபடி வடிகட்டி ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாக இருக்கிறீர்கள் 25 மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ உணவு மற்றும் தண்ணீர் பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள் உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது 26 குருடனான பரிசேயனே உணவு மற்றும் தண்ணீர் பாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு 27 மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாக இருக்கிறீர்கள் அவைகள் வெளியே அலங்காரமாகக் காணப்படும் உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் எல்லா அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும் 28 அப்படியே நீங்களும் வெளியே மனிதர்களுக்கு நீதிமான்களாகக் காணப்படுகிறீர்கள் உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள் 29 மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி நீதிமான்களின் சமாதிகளை அலங்கரித்து 30 எங்களுடைய பிதாக்களின் நாட்களில் இருந்திருந்தோமானால் அவர்களோடு நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள் 31 ஆகவே தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்தவர்களுக்குப் பிள்ளைகளாக இருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாக இருக்கிறீர்கள் 32 நீங்களும் உங்களுடைய பிதாக்களின் அக்கிரமத்தின் அளவை நிறைவாக்குங்கள் 33 சர்ப்பங்களே விரியன்பாம்பு குட்டிகளே நரக ஆக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவீர்கள் 34 ஆகவே இதோ தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபண்டிதர்களையும் உங்களிடம் அனுப்புகிறேன் அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள் சிலரை உங்களுடைய ஜெப ஆலயங்களில் சாட்டையினால் அடித்து ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவீர்கள் 35 நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் முதல் தேவாலயத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும் பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள் 36 இவைகளெல்லாம் இந்தச் சந்ததியின்மேல் வருமென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் 37 எருசலேமே எருசலேமே தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச்சேர்த்துக்கொள்ளுவதுபோல நான் எத்தனைமுறையோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள விருப்பமாக இருந்தேன் உங்களுக்கோ விருப்பமில்லாமல்போனது 38 இதோ உங்களுடைய வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும் 39 கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் போற்றப்பட்டவர் என்று நீங்கள் சொல்லும்வரை இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் Chapter 24அத்தியாயம்– 24 1 இயேசு தேவாலயத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்போது அவருடைய சீடர்கள் தேவாலயத்தின் கட்டிடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள் 2 இயேசு அவர்களைப் பார்த்து இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே இந்த இடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல் இல்லாதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் 3 பின்பு அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது சீடர்கள் அவரிடத்தில் தனிமையில் வந்து இவைகள் எப்பொழுது நடக்கும் உம்முடைய வருகைக்கும் உலகத்தின் முடிவிற்கும் அடையாளம் என்ன எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள் 4 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக ஒருவனும் உங்களை ஏமாற்றாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள் 5 ஏனென்றால் அநேகர் வந்து என் நாமத்தை வைத்துக்கொண்டு நானே கிறிஸ்து என்று சொல்லி அநேகரை ஏமாற்றுவார்கள் 6 யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள் கலங்காதபடி எச்சரிக்கையாக இருங்கள் இவைகளெல்லாம் நடக்கவேண்டியதே ஆனாலும் முடிவு உடனே வராது 7 மக்களுக்கு விரோதமாக மக்களும் ராஜ்யத்திற்கு விரோதமாக ராஜ்யமும் எழும்பும் பஞ்சங்களும் கொள்ளைநோய்களும் பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும் 8 இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம் 9 அப்பொழுது உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து உங்களைக் கொலைசெய்வார்கள் என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லா மக்களாலும் பகைக்கப்படுவீர்கள் 10 அப்பொழுது அநேகர் இடறலடைந்து ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து ஒருவரையொருவர் பகைப்பார்கள் 11 அநேகக் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி அநேகரை ஏமாற்றுவார்கள் 12 அக்கிரமம் பெருகுவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும் 13 இறுதிவரை நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான் 14 ராஜ்யத்தினுடைய இந்த நற்செய்தி பூலோகமெங்கும் உள்ள எல்லா மக்களுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும் அப்போது முடிவு வரும் 15 மேலும் பாழாக்குகிற அருவருப்பைக்குறித்து தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே வாசிக்கிறவன் சிந்திக்கவேண்டும் நீங்கள் அதைப் பரிசுத்த இடத்தில் நிற்பதைப் பார்க்கும்போது 16 யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவேண்டும் 17 வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாவது எடுப்பதற்கு இறங்காமலிருக்கவேண்டும் 18 வயலில் இருக்கிறவன் தன் ஆடைகளை எடுப்பதற்குத் திரும்பாமலிருக்கவேண்டும் 19 அந்த நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ 20 நீங்கள் ஓடிப்போவது மழைக் காலத்திலாவது ஓய்வுநாளிலாவது நடக்காதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள் 21 ஏனென்றால் உலகம் உண்டானதுமுதல் இதுவரைக்கும் நடக்காததும் இனிமேலும் நடைபெறாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும் 22 அந்த நாட்கள் குறைக்கப்படாமலிருந்தால் ஒருவன்கூட தப்பிப்போவதில்லை தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தம் அந்த நாட்கள் குறைக்கப்படும் 23 அப்பொழுது இதோ கிறிஸ்து இங்கே இருக்கிறார் அதோ அங்கே இருக்கிறார் என்று எவனாவது சொன்னால் நம்பாதீர்கள் 24 ஏனென்றால் கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள் 25 இதோ முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன் 26 ஆகவே அதோ வனாந்திரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால் புறப்படாமலிருங்கள் இதோ அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதீர்கள் 27 மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனிதகுமாரனுடைய வருகையும் இருக்கும் 28 பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் 29 அந்தநாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே சூரியன் இருளடையும் சந்திரன் ஒளியைக் கொடுக்காமல் இருக்கும் நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும் வானத்தின் வல்லமைகள் அசைக்கப்படும் 30 அப்பொழுது மனிதகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும் அப்பொழுது மனிதகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள எல்லாக் கோத்திரத்தார்களும் கண்டு புலம்புவார்கள் 31 வலுவாகத் தொனிக்கும் எக்காளசத்தத்தோடு அவர் தமது தூதர்களை அனுப்புவார் அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒருமுனைமுதல் மறுமுனைவரைக்கும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள் 32 அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள் அதிலே இளங்கிளை தோன்றி துளிர்விடும்போது வசந்தகாலம் நெருங்கிவிட்டது என்று அறிவீர்கள் 33 அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் பார்க்கும்போது அவர் நெருக்கமாக வாசலின் அருகே வந்திருக்கிறார் என்று தெரிந்துகொள்ளுங்கள் 34 இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாது என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் 35 வானமும் பூமியும் ஒழிந்துபோகும் என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை 36 அந்த நாளையும் அந்த நேரத்தையும் என் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான் பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள் 37 நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ அப்படியே மனிதகுமாரன் வரும்காலத்திலும் நடக்கும் 38 எப்படியென்றால் பெருவெள்ளத்திற்கு முன்னான காலத்திலே நோவா கப்பலுக்குள் பிரவேசிக்கும் நாள்வரை மக்கள் புசித்தும் குடித்தும் பெண் எடுத்தும் பெண் கொடுத்தும் 39 பெருவெள்ளம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகும்வரை உணராமல் இருந்தார்கள் அப்படியே மனிதகுமாரன் வரும்காலத்திலும் நடக்கும் 40 அப்பொழுது இரண்டுபேர் வயலில் இருப்பார்கள் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான் ஒருவன் கைவிடப்படுவான் 41 இரண்டு பெண்கள் மாவு அரைத்துக்கொண்டிருப்பார்கள் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள் ஒருத்தி கைவிடப்படுவாள் 42 உங்களுடைய ஆண்டவர் எந்த நேரத்திலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள் 43 திருடன் இரவிலே எந்த நேரத்திலே வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால் அவன் விழித்திருந்து தன் வீட்டைக் கொள்ளையடிக்கவிடமாட்டான் என்று அறிவீர்கள் 44 நீங்கள் நினைக்காத நேரத்திலே மனிதகுமாரன் வருவார் ஆதலால் நீங்களும் ஆயத்தமாக இருங்கள் 45 ஏற்ற நேரத்திலே தன் வேலைக்காரர்களுக்கு ஆகாரங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள வேலைக்காரன் யார் 46 எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற வேலைக்காரனே பாக்கியவான் 47 தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் 48 அந்த வேலைக்காரனோ பொல்லாதவனாக இருந்து என் எஜமான் வர நாளாகும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு 49 தன் உடன்வேலைக்காரர்களை அடிக்கவும் குடிகாரர்களோடு புசிக்கவும் குடிக்கவும் தொடங்கினால் 50 அந்த வேலைக்காரன் நினைக்காத நாளிலும் அறியாத நேரத்திலும் அவனுடைய எஜமான் வந்து 51 அவனைக் கடினமாகத் தண்டித்து மாயக்காரர்களோடு அவனுக்குப் பங்கை நியமிப்பான் அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் Chapter 25அத்தியாயம்– 25 1 அப்பொழுது பரலோகராஜ்யம் தங்களுடைய எண்ணெய் விளக்குகளைப் பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாக இருக்கும் 2 அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும் ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாக இருந்தார்கள் 3 புத்தியில்லாதவர்கள் தங்களுடைய விளக்குகளை எடுத்துக்கொண்டுபோனார்கள் எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை 4 புத்தியுள்ளவர்கள் தங்களுடைய விளக்குகளோடுகூடத் தங்களுடைய பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள் 5 மணவாளன் வரத் தாமதமானபோது அவர்கள் எல்லோரும் தூக்கமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள் 6 நடு இரவிலே இதோ மணவாளன் வருகிறார் அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டானது 7 அப்பொழுது அந்தக் கன்னிகைகள் எல்லோரும் எழுந்திருந்து தங்களுடைய விளக்குகளை ஆயத்தப்படுத்தினார்கள் 8 புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களைப் பார்த்து உங்களுடைய எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சம் கொடுங்கள் எங்களுடைய விளக்குகள் அணைந்துபோகிறதே என்றார்கள் 9 புத்தியுள்ளவர்கள் மறுமொழியாக அப்படியல்ல எங்களுக்கும் உங்களுக்கும் போதுமானதாக இல்லாதபடி நீங்கள் விற்கிறவர்களிடத்திற்குப்போய் உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள் 10 அப்படியே அவர்கள் வாங்கப்போனபோது மணவாளன் வந்துவிட்டார் ஆயத்தமாக இருந்தவர்கள் அவரோடுகூடத் திருமணவீட்டிற்குள் பிரவேசித்தார்கள் கதவும் அடைக்கப்பட்டது 11 பின்பு மற்றக் கன்னிகைகளும் வந்து ஆண்டவரே ஆண்டவரே எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள் 12 அதற்கு அவர் உங்களை யாரென்று எனக்குத் தெரியாது என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் 13 மனிதகுமாரன் வரும் நாளையாவது நேரத்தையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள் 14 அன்றியும் பரலோகராஜ்யம் வெளிதேசத்திற்குப் பயணமாகப் போகிற ஒரு மனிதன் தன் வேலைக்காரர்களை அழைத்து தன் சொத்துக்களை அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்ததுபோல இருக்கிறது 15 அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக ஒருவனிடத்தில் ஐந்து வெள்ளிப்பணமும் ஒருவனிடத்தில் இரண்டு வெள்ளிப்பணமும் ஒருவனிடத்தில் ஒரு வெள்ளிப்பணமுமாகக் கொடுத்து உடனே பயணப்பட்டுப்போனான் 16 ஐந்து வெள்ளிப்பணத்தை வாங்கினவன்போய் அவைகளைக்கொண்டு வியாபாரம் செய்து வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தான் 17 அப்படியே இரண்டு வெள்ளிப்பணத்தை வாங்கினவனும் வேறு இரண்டு வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தான் 18 ஒரு வெள்ளிப்பணத்தை வாங்கினவனோ போய் நிலத்தைத் தோண்டி தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்துவைத்தான் 19 அநேக நாட்களானபின்பு அந்த வேலைக்காரர்களுடைய எஜமான் திரும்பிவந்து அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான் 20 அப்பொழுது ஐந்து வெள்ளிப்பணத்தை வாங்கினவன் வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைக் கொண்டுவந்து ஆண்டவனே ஐந்து வெள்ளிப்பணத்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே அவைகளைக்கொண்டு இதோ வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தேன் என்றான் 21 அவனுடைய எஜமான் அவனைப் பார்த்து நல்லது உத்தமமும் உண்மையுமுள்ள வேலைக்காரனே கொஞ்சத்திலே உண்மையாக இருந்தாய் அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன் உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான் 22 இரண்டு வெள்ளிப்பணத்தை வாங்கினவனும் வந்து ஆண்டவனே இரண்டு வெள்ளிப்பணத்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே அவைகளைக்கொண்டு இதோ வேறு இரண்டு வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தேன் என்றான் 23 அவனுடைய எஜமான் அவனைப் பார்த்து நல்லது உத்தமமும் உண்மையுமுள்ள வேலைக்காரனே கொஞ்சத்திலே உண்மையாக இருந்தாய் அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன் உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான் 24 ஒரு வெள்ளிப்பணத்தை வாங்கினவன் வந்து ஆண்டவனே நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும் தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனிதன் என்று அறிவேன் 25 ஆகவே நான் பயந்துபோய் உமது வெள்ளிப்பணத்தை நிலத்தில் புதைத்து வைத்தேன் இதோ உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான் 26 அவனுடைய எஜமான் மறுமொழியாக பொல்லாதவனும் சோம்பலுமான வேலைக்காரனே நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும் தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே 27 அப்படியானால் நீ என் பணத்தை வங்கியிலே போட்டுவைத்திருக்கலாமே அப்பொழுது நான் வந்து என்னுடையதை வட்டியோடு வாங்கிக்கொள்ளுவேனே என்று சொல்லி 28 அவனிடத்திலிருக்கிற வெள்ளிப்பணத்தை எடுத்து பத்து வெள்ளிப்பணத்தை உடையவனுக்குக் கொடுங்கள் 29 உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும் பரிபூரணமும் அடைவான் இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் 30 பிரயோஜனமில்லாத வேலைக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள் அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான் 31 அன்றியும் மனிதகுமாரன் தமது மகிமை பொருந்தினவராக அனைத்து பரிசுத்த தூதர்களோடுகூட வரும்போது தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார் 32 அப்பொழுது எல்லா மக்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள் மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் தனித்தனியாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து 33 செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும் வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார் 34 அப்பொழுது ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் 35 பசியாக இருந்தேன் எனக்கு உணவு கொடுத்தீர்கள் தாகமாக இருந்தேன் என் தாகத்தைத் தனித்தீர்கள் அந்நியனாக இருந்தேன் என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள் 36 ஆடை இல்லாதிருந்தேன் எனக்கு ஆடை கொடுத்தீர்கள் வியாதியாக இருந்தேன் என்னை விசாரிக்க வந்தீர்கள் சிறைப்பட்டிருந்தேன் என்னைப் பார்க்க வந்தீர்கள் என்பார் 37 அப்பொழுது நீதிமான்கள் அவருக்கு மறுமொழியாக ஆண்டவரே நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்கு உணவு கொடுத்தோம் எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக் கண்டு உம்முடைய தாகத்தைத் தணித்தோம் 38 எப்பொழுது உம்மை அந்நியராகக் கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம் எப்பொழுது உம்மை ஆடையில்லாதவராகக் கண்டு உமக்கு ஆடை கொடுத்தோம் 39 எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் சிறையிலிருக்கிறவராகவும் கண்டு உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள் 40 அதற்கு ராஜா மறுமொழியாக மிகவும் எளியவராகிய என் சகோதரர்களான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார் 41 அப்பொழுது இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர் சபிக்கப்பட்டவர்களே என்னைவிட்டு பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள் 42 பசியாக இருந்தேன் நீங்கள் எனக்கு ஆகாரம் கொடுக்கவில்லை தாகமாக இருந்தேன் நீங்கள் என் தாகத்தைத் தணிக்கவில்லை 43 அந்நியனாக இருந்தேன் நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை ஆடையில்லாதிருந்தேன் நீங்கள் எனக்கு ஆடை கொடுக்கவில்லை வியாதியுள்ளவனாகவும் சிறையில் அடைக்கப்பட்டவனாகவும் இருந்தேன் நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லை என்பார் 44 அப்பொழுது அவர்களும் அவருக்கு மறுமொழியாக ஆண்டவரே உம்மைப் பசியுள்ளவராகவும் தாகமுள்ளவராகவும் அந்நியராகவும் ஆடையில்லாதவராகவும் வியாதிப்பட்டவராகவும் சிறையில் அடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள் 45 அப்பொழுது அவர் அவர்களுக்கு மறுமொழியாக மிகவும் எளியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார் 46 அந்தப்படி இவர்கள் நித்திய தண்டனையை அடையவும் நீதிமான்களோ நித்தியஜீவனை அடைவார்கள் என்றார் Chapter 26அத்தியாயம்– 26 1 இயேசு இந்த வசனங்களையெல்லாம் சொல்லிமுடித்தபின்பு அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து 2 இரண்டு நாட்களுக்குப்பின்பு பஸ்காபண்டிகை வருமென்று அறிவீர்கள் அப்பொழுது மனிதகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார் 3 அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மக்களின் மூப்பர்களும் காய்பா என்னப்பட்ட தலைமை ஆசாரியனுடைய அரண்மனையிலே கூடிவந்து 4 இயேசுவைத் தந்திரமாகப் பிடித்துக் கொலைசெய்யும்படி ஆலோசனை செய்தார்கள் 5 ஆனாலும் மக்களுக்குள்ளே கலகமுண்டாகாதபடிக்குப் பண்டிகையிலே அப்படிச் செய்யக்கூடாது என்றார்கள் 6 இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியாக இருந்த சீமோன் வீட்டில் இருக்கும்போது 7 ஒரு பெண் விலையேறப்பெற்ற பரிமள தைலமுள்ள வெள்ளைக்கல் ஜாடியைக் கொண்டுவந்து அவர் உணவு பந்தியிலிருக்கும்போது அந்தத் தைலத்தை அவர் தலையின்மேல் ஊற்றினாள் 8 அவருடைய சீடர்கள் அதைக் கண்டு கோபமடைந்து இந்த வீண் செலவு என்னத்திற்கு 9 இந்தத் தைலத்தை அதிக விலைக்கு விற்று தரித்திரர்களுக்குக் கொடுக்கலாமே என்றார்கள் 10 இயேசு அதை அறிந்து அவர்களைப் பார்த்து நீங்கள் இந்தப் பெண்ணை ஏன் தொந்தரவு படுத்துகிறீர்கள் என்னிடத்தில் நற்செயலைச் செய்திருக்கிறாள் 11 தரித்திரர்கள் எப்போதும் உங்களிடம் இருக்கிறார்கள் நானோ எப்போதும் உங்களிடம் இருக்கமாட்டேன் 12 இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின்மேல் ஊற்றினது என்னை அடக்கம் செய்வதற்கு சமமான செய்கையாக இருக்கிறது 13 இந்த நற்செய்தி உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் 14 அப்பொழுது பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியர்களிடத்திற்குப்போய் 15 நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன் நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான் அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க ஒத்துக்கொண்டார்கள் 16 அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு நேரம் பார்த்துக்கொண்டிருந்தான் 17 புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதல்நாளிலே சீடர்கள் இயேசுவினிடத்தில் வந்து பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம்செய்ய விருப்பமாக இருக்கிறீர் என்று கேட்டார்கள் 18 அதற்கு அவர் நீங்கள் நகரத்திலே இன்னானிடத்திற்குப்போய் என் வேளை சமீபமாக இருக்கிறது உன் வீட்டிலே என் சீடர்களோடுகூட பஸ்காவை ஆசரிப்பேன் என்று போதகர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றார் 19 இயேசு கற்பித்தபடி சீடர்கள்போய் பஸ்காவை ஆயத்தம் செய்தார்கள் 20 மாலைநேரமானபோது பன்னிரண்டுபேரோடும் அவர் பந்தியிருந்தார் 21 அவர்கள் உணவு உண்ணும்போது அவர் உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் 22 அப்பொழுது அவர்கள் மிகவும் துக்கமடைந்து அவரைப் பார்த்து ஆண்டவரே நானோ நானோ என்று ஒவ்வொருவராகக் கேட்கத்தொடங்கினார்கள் 23 அவர் மறுமொழியாக என்னோடுகூடத் தட்டில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான் 24 மனிதகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார் ஆனாலும் எந்த மனிதனால் மனிதகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ அந்த மனிதனுக்கு ஐயோ அந்த மனிதன் பிறக்காதிருந்தானானால் அவனுக்கு நலமாக இருக்கும் என்றார் 25 அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரைப் பார்த்து ரபீ நானோ என்றான் அதற்கு அவர் நீ சொன்னபடிதான் என்றார் 26 அவர்கள் உணவு உண்ணும்போது இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து அதைப் பிட்டு சீடர்களுக்குக் கொடுத்து நீங்கள் வாங்கிச்சாப்பிடுங்கள் இது என்னுடைய சரீரமாக இருக்கிறது என்றார் 27 பின்பு பாத்திரத்தையும் எடுத்து நன்றிசெலுத்தி அவர்களுக்குக் கொடுத்து நீங்கள் எல்லோரும் இதிலே பானம்பண்ணுங்கள் 28 இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புதிய ஒப்பந்தத்திற்குரிய என்னுடைய இரத்தமாக இருக்கிறது 29 இதுமுதல் இந்தத் திராட்சைப்பழரசத்தை புதிதானதாக உங்களோடுகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள்வரை இதைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் 30 அவர்கள் துதிப்பாட்டைப் பாடினபின்பு ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள் 31 அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து மேய்ப்பனை வெட்டுவேன் மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி இந்த இரவிலே நீங்கள் எல்லோரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள் 32 ஆனாலும் நான் உயிர்த்தெழுந்தபின்பு உங்களுக்கு முன்னே கலிலேயாவிற்குப் போவேன் என்றார் 33 பேதுரு அவருக்கு மறுமொழியாக உமதுநிமித்தம் எல்லோரும் இடறலடைந்தாலும் நான் ஒருபோதும் இடறலடையமாட்டேன் என்றான் 34 இயேசு அவனைப் பார்த்து இந்த இரவிலே சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார் 35 அதற்குப் பேதுரு நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்றான் சீடர்கள் எல்லோரும் அப்படியே சொன்னார்கள் 36 அப்பொழுது இயேசு அவர்களோடு கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து சீடர்களைப் பார்த்து நான் அங்கே போய் ஜெபம்செய்யும்வரை நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி 37 பேதுருவையும் செபெதேயுவின் குமாரர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டுபோய் துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார் 38 அப்பொழுது அவர் என் ஆத்துமா மரணத்திற்குரிய துக்கங்கொண்டிருக்கிறது நீங்கள் இங்கே தங்கி என்னோடுகூட விழித்திருங்கள் என்று சொல்லி 39 சிறிது விலகிப்போய் முகங்குப்புறவிழுந்து என் பிதாவே இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிச் செய்யும் ஆனாலும் என் விருப்பத்தின்படியல்ல உம்முடைய விருப்பத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்செய்தார் 40 பின்பு அவர் சீடர்களிடத்தில் வந்து அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக் கண்டு பேதுருவைப் பார்த்து நீங்கள் ஒருமணி நேரமாவது என்னோடுகூட விழித்திருக்கக்கூடாதா 41 நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்செய்யுங்கள் ஆவி உற்சாகமுள்ளதுதான் மாம்சமோ பலவீனமுள்ளது என்றார் 42 அவர் மறுபடியும் இரண்டாம்முறை போய் என் பிதாவே இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில் உம்முடைய விருப்பத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்செய்தார் 43 அவர் திரும்ப வந்தபோது அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார் அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தது 44 அவர் மறுபடியும் அவர்களைவிட்டுப்போய் மூன்றாம்முறையும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்செய்தார் 45 பின்பு அவர் தம்முடைய சீடர்களிடத்தில் வந்து இன்னும் நித்திரைபண்ணி இளைப்பாறுகிறீர்களா இதோ மனிதகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிற நேரம்வந்தது 46 என்னைக் காட்டிக்கொடுக்கிறவன் இதோ வந்துவிட்டான் எழுந்திருங்கள் போவோம் என்றார் 47 அவர் இப்படிப் பேசும்போது பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான் அவனோடுகூட பிரதான ஆசாரியர்களும் மக்களின் மூப்பர்களும் அனுப்பின திரளான மக்கள் பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டுவந்தார்கள் 48 அவரைக் காட்டிக்கொடுக்கிறவன் நான் எவனை முத்தம்செய்வேனோ அவன்தான் அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான் 49 உடனே அவன் இயேசுவினிடத்தில் வந்து ரபீ வாழ்க என்று சொல்லி அவரை முத்தம்செய்தான் 50 இயேசு அவனைப் பார்த்து நண்பனே எதற்காக வந்திருக்கிறாய் என்றார் அப்பொழுது அவர்கள் கிட்டவந்து இயேசுவைப் பிடித்தார்கள் 51 அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கையை நீட்டித் தன் பட்டயத்தை உருவி பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காது அறுந்துபோக வெட்டினான் 52 அப்பொழுது இயேசு அவனைப் பார்த்து உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு பட்டயத்தை எடுக்கிற அனைவரும் பட்டயத்தால் அழிந்துபோவார்கள் 53 நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால் அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதர்களை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா 54 அப்படிச் செய்வேனானால் இவ்விதமாக நடைபெறவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார் 55 அந்த நேரத்திலே இயேசு மக்களைப் பார்த்து திருடனைப்பிடிக்கப் புறப்படுகிறதுபோல நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள் நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்தில் உபதேசம் செய்துகொண்டிருந்தேன் அப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே 56 ஆனாலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் நடைபெறுகிறது என்றார் அப்பொழுது சீடர்களெல்லோரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள் 57 இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள் அங்கே வேதபண்டிதர்களும் மூப்பர்களும் கூடிவந்திருந்தார்கள் 58 பேதுரு தூரத்திலே அவருக்குப் பின்னேசென்று பிரதான ஆசாரியனுடைய அரண்மனை வரைக்கும் வந்து உள்ளே நுழைந்து முடிவைப் பார்க்கும்படி காவலாளிகளோடு உட்கார்ந்தான் 59 பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் சங்கத்தினர்கள் அனைவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி தேடினார்கள் 60 ஒருவரும் கிடைக்கவில்லை அநேகர் வந்து பொய்ச்சாட்சி சொல்லியும் அவர்கள் சாட்சி ஏற்புடையதாயில்லை கடைசியிலே இரண்டு பொய்ச்சாட்சிகள் வந்து 61 தேவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும் மூன்று நாட்களுக்குள்ளே அதைக் கட்டவும் என்னாலே ஆகும் என்று இவன் சொன்னான் என்றார்கள் 62 அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்திருந்து அவரைப் பார்த்து இவர்கள் உனக்கு விரோதமாக சாட்சி சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்றான் 63 இயேசுவோ பேசாமலிருந்தார் அப்பொழுது பிரதான ஆசாரியன் அவரைப் பார்த்து நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான் 64 அதற்கு இயேசு நீர் சொன்னபடிதான் அன்றியும் மனிதகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபக்கத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் 65 அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு இவன் தேவனை நிந்தித்தான் இனி சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன இதோ இவன் நிந்தித்ததை இப்பொழுது கேட்டீர்களே 66 உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது என்று கேட்டான் அதற்கு அவர்கள் மரணத்திற்குப் பாத்திரனாக இருக்கிறான் என்றார்கள் 67 அப்பொழுது அவருடைய முகத்தில் துப்பி அவரைக் குட்டினார்கள் சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து 68 கிறிஸ்துவே உம்மை அடித்தவன் யார் அதை ஞான தரிசனத்தினால் எங்களுக்குச் சொல்லும் என்றார்கள் 69 அந்தநேரத்தில் பேதுரு வெளியே வந்து அரண்மனை முற்றத்தில் உட்கார்ந்திருந்தான் அப்பொழுது வேலைக்காரி ஒருத்தி அவனிடத்தில் வந்து நீயும் கலிலேயனாகிய இயேசுவோடுகூட இருந்தாய் என்றாள் 70 அதற்கு அவன் நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று எல்லோருக்கும் முன்பாக மறுதலித்தான் 71 அவன் வாசல் மண்டபத்திற்குப்போனபொழுது வேறொருத்தி அவனைக் கண்டு இவனும் நசரேயனாகிய இயேசுவோடுகூட இருந்தான் என்று அங்கே இருந்தவர்களுக்குச் சொன்னாள் 72 அவனோ அந்த மனிதனை நான் அறியேன் என்று சத்தியம் செய்து மறுபடியும் மறுதலித்தான் 73 சிறிதுநேரத்திற்குப்பின்பு அங்கே நின்றவர்கள் பேதுருவினிடத்தில் வந்து உண்மையாகவே நீயும் அவர்களில் ஒருவன் உன் பேச்சு உன்னை காட்டிக்கொடுக்கிறது என்றார்கள் 74 அப்பொழுது அவன் அந்த மனிதனைத் தெரியாது என்று சொல்லி சபிக்கவும் சத்தியம் செய்யவும் தொடங்கினான் உடனே சேவல் கூவியது 75 அப்பொழுது பேதுரு சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொண்டு வெளியேபோய் மனங்கசந்து அழுதான் Chapter 27அத்தியாயம்– 27 1 விடியற்காலமானபோது எல்லாப் பிரதான ஆசாரியர்களும் மக்களின் மூப்பர்களும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாக ஆலோசனைசெய்து 2 அவரைக் கட்டி கொண்டுபோய் தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள் 3 அப்பொழுது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் அவர் மரணதண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைப் பார்த்து மனஸ்தாபப்பட்டு அந்த முப்பது வெள்ளிக்காசை பிரதான ஆசாரியர்களிடத்திற்கும் மூப்பர்களிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து 4 குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவம் செய்தேன் என்றான் அதற்கு அவர்கள் எங்களுக்கென்ன அது உன்னுடைய பாடு என்றார்கள் 5 அப்பொழுது அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே தூக்கி எரிந்துவிட்டு புறப்பட்டுப்போய் நான்றுகொண்டு செத்தான் 6 பிரதான ஆசாரியர்கள் அந்த வெள்ளிக்காசை எடுத்து இது இரத்தத்தின் விலையென்பதால் காணிக்கைப்பெட்டியிலே இதைப் போடுவது நியாயமில்லையென்று சொல்லி 7 ஆலோசனை செய்தபின்பு அந்நியர்களை அடக்கம் செய்வதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே வாங்கினார்கள் 8 இதினிமித்தம் அந்த நிலம் இந்தநாள்வரை இரத்தநிலம் எனப்படுகிறது 9 இஸ்ரவேல் பிள்ளைகளால் மதிக்கப்பட்டவருக்குக் விலையாக முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து 10 கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது அப்பொழுது நிறைவேறியது 11 இயேசு தேசாதிபதிக்கு முன்பாக நின்றார் தேசாதிபதி அவரைப் பார்த்து நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான் அதற்கு இயேசு நீர் சொல்லுகிறபடிதான் என்றார் 12 பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் அவர்மேல் குற்றஞ்சாட்டும்போது அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை 13 அப்பொழுது பிலாத்து அவரைப் பார்த்து இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சுமத்துகிறார்களே நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான் 14 அவரோ ஒரு வார்த்தையும் பதில் சொல்லவில்லை அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான் 15 காவல்செய்யப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்க வேண்டுமென்று மக்கள் கேட்டுக்கொள்ளுவார்களோ அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் தேசாதிபதிக்கு வழக்கமாக இருந்தது 16 அப்பொழுது காவல்செய்யப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட பேர்போன ஒருவன் இருந்தான். 17 பொறாமையினாலே அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து, 18 அவர்கள் கூடியிருக்கும்போது, அவர்களைப் பார்த்து: எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்க வேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாசையோ? கிறிஸ்து எனப்படுகிற இயேசுவையோ? என்று கேட்டான். 19 அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கும்போது, அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆள் அனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர்நிமித்தம் இன்றைக்கு கனவில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச் சொன்னாள். 20 பரபாசை விட்டு விடக் கேட்டுக் கொள்ளவும், இயேசுவைக் கொலை செய்யவும் பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் மக்களைத் தூண்டிவிட்டார்கள். 21 தேசாதிபதி மக்களைப் பார்த்து: இவ்விருவரில் எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரபாசை என்றார்கள். 22 பிலாத்து அவர்களைப் பார்த்து: அப்படியானால், கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று எல்லோரும் சொன்னார்கள். 23 தேசாதிபதியோ: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று அதிகமதிகமாக சத்தமிட்டுச் சொன்னார்கள். 24 கலவரம் அதிகமாகிறதேயல்லாமல் தன் முயற்சியினாலே பலன் இல்லையென்று பிலாத்து பார்த்து, தண்ணீரை அள்ளி, மக்களுக்கு முன்பாக கைகளைக் கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான். 25 அதற்கு மக்களெல்லோரும்: இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்களுடைய பிள்ளைகள்மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள். 26 அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ சாட்டையினால் அடித்து, சிலுவையில் அறைவதற்கு ஒப்புக்கொடுத்தான். 27 அப்பொழுது, தேசாதிபதியின் போர்வீரர்கள் இயேசுவைத் தேசாதிபதியின் அரண்மனையிலே கொண்டுபோய், போர்வீரர்களின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடிவரச்செய்து, 28 அவருடைய மேலாடைகளைக் கழற்றி, சிவப்பான மேலாடையை அவருக்கு உடுத்தி, 29 முள்ளுகளால் ஒரு கிரீடத்தைச் செய்து, அவர் தலையின்மேல் வைத்து, அவருடைய வலது கையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று அவரைக் கேலிசெய்தபின்பு, 30 அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைத் தலையில் அடித்தார்கள். 31 அவரைக் கேலிசெய்தபின்பு, அவருக்கு உடுத்தின மேலாடையைக் கழற்றி, அவருடைய ஆடைகளை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள். 32 போகும்போது, சிரேனே ஊரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனிதனை அவர்கள் பார்த்து, அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம் செய்தார்கள். 33 கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்திற்கு அவர்கள் வந்தபோது, 34 கசப்புக்கலந்த காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தார். 35 அவரை சிலுவையில் அறைந்தபின்பு, அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய ஆடைகளைப் பங்கிட்டுக் கொண்டார்கள். என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப்போட்டார்கள் என்று தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. 36 அவர்கள் அங்கே உட்கார்ந்து, அவரைக் காவல்காத்துக்கொண்டிருந்தார்கள். 37 அன்றியும் அவர் அடைந்த தண்டனையின் காரணத்தைக் காண்பிக்கும்படியாக, இவன் யூதர்களுடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவர் தலைக்கு மேலாக வைத்தார்கள். 38 அப்பொழுது, அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும் அவருடைய இடதுபக்கத்தில் ஒருவனுமாக இரண்டு திருடர்கள் அவரோடுகூட சிலுவைகளில் அறையப்பட்டார்கள். 39 அந்தவழியாக நடந்துபோகிறவர்கள் தங்களுடைய தலைகளைத் துலுக்கி: 40 தேவாலயத்தை இடித்து, மூன்று நாட்களுக்குள்ளே கட்டுகிறவனே, உன்னைநீயே இரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரைப் பழித்தார்கள். 41 அப்படியே பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மூப்பர்களும் கேலிசெய்து: 42 மற்றவர்களை இரட்சித்தான்; தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம். 43 தன்னைத் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாக இருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாக இருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள். 44 அவரோடுகூட சிலுவைகளில் அறையப்பட்டத் திருடர்களும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள். 45 நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் மதியம் மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டானது. 46 மூன்று மணியளவில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். 47 அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள். 48 உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்பஞ்சை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி. அவருக்குக் குடிக்கக்கொடுத்தான். 49 மற்றவர்களோ: பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள். 50 இயேசு, மறுபடியும் மகா சத்தமாகக் கூப்பிட்டு, ஆவியை விட்டார். 51 அப்பொழுது, தேவாலயத்தின் திரைத்துணி மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது. 52 கல்லறைகளும் திறந்தது, மரித்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. 53 அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள். 54 நூறு போர்வீரர்களுக்குத் தலைவனும், அவனோடுகூட இயேசுவைக் காவல் காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் நடந்த காரியங்களையும் பார்த்து, மிகவும் பயந்து: உண்மையாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள். 55 மேலும், இயேசுவிற்கு பணிவிடைசெய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடு வந்திருந்த அநேக பெண்கள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். 56 அவர்களுக்குள்ளே மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும், யோசேக்கும் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் குமாரர்களுடைய தாயும் இருந்தார்கள். 57 மாலைநேரமானபோது, இயேசுவிற்குச் சீடனும் செல்வந்தனுமாகவும் இருந்த யோசேப்பு என்னும் பேருடைய அரிமத்தியா ஊரானாகிய ஒரு மனிதன் வந்து, 58 பிலாத்துவினிடத்தில்போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். அப்பொழுது, சரீரத்தைக் கொடுக்கும்படி பிலாத்து கட்டளையிட்டான். 59 யோசேப்பு அந்த சரீரத்தை எடுத்து, தூய்மையான மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, 60 தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டி வைத்துப்போனான். 61 அங்கே மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிராக உட்கார்ந்திருந்தார்கள். 62 ஆயத்தநாளுக்கு அடுத்த மறுநாளிலே பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் பிலாத்துவினிடத்தில் கூடிவந்து: 63 ஆண்டவனே, அந்த ஏமாற்றுக்காரன் உயிரோடிருக்கும்போது, மூன்று நாட்களுக்குப்பின்பு உயிரோடு எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகம் இருக்கிறது. 64 ஆகவே, அவனுடைய சீடர்கள் இரவிலே வந்து, அவனைத் தந்திரமாகக் கொண்டுபோய், மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தானென்று மக்களுக்குச் சொல்லாதபடிக்கும், முந்தின வஞ்சனையைவிட பிந்தின வஞ்சனை கொடிதாகாதபடிக்கும், நீர் மூன்று நாட்கள்வரை கல்லறையைப் பாதுகாக்கும்படி கட்டளையிடவேண்டும் என்றார்கள். 65 அதற்குப் பிலாத்து: உங்களுக்குக் காவல் வீரர்கள் உண்டே; போய், உங்களால் முடிந்தவரைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்றான். 66 அவர்கள்போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு, காவல்வைத்து, கல்லறையைப் பாதுகாத்தார்கள். Chapter 28அத்தியாயம்– 28 1 ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் பொழுதுவிடிந்தபோது, மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள். 2 அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்து இறங்கிவந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான். 3 அவனுடைய தோற்றம் மின்னல்போலவும், அவனுடைய உடை உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது. 4 காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள்போலானார்கள். 5 தூதன் அந்தப் பெண்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாமலிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். 6 அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்துபாருங்கள்; 7 சீக்கிரமாகப்போய், அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தார் என்று அவருடைய சீடர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவிற்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான். 8 அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையைவிட்டுச் சீக்கிரமாகப் புறப்பட்டு, அவருடைய சீடர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள். 9 அவர்கள் அவருடைய சீடர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள். 10 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாமலிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர்கள் கலிலேயாவிற்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார். 11 அவர்கள் போகும்போது, காவல்வீரர்களில் சிலர் நகரத்திற்குள்ளே வந்து. நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியர்களுக்கு அறிவித்தார்கள். 12 இவர்கள் மூப்பர்களோடு கூடிவந்து, ஆலோசனைசெய்து, வீரருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து: 13 நாங்கள் தூங்கும்போது, அவனுடைய சீடர்கள் இரவிலே வந்து, அவனைத் திருடிக்கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லுங்கள். 14 இது தேசாதிபதிக்கு தெரியவந்தால், நாங்கள் அவரை இணங்கவைத்து, உங்களைத் தப்புவிப்போம் என்றார்கள். 15 அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதர்களுக்குள்ளே இந்தநாள்வரை பிரசித்தமாக இருக்கிறது. 16 பதினொரு சீடர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள். 17 அங்கே அவர்கள் அவரைப் பார்த்து, பணிந்துகொண்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள். 18 அப்பொழுது இயேசு அருகில் வந்து, அவர்களைப் பார்த்து: பரலோகத்திலும் பூமியிலும் எல்லா அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 19 ஆகவே, நீங்கள் புறப்பட்டுப்போய், எல்லா தேசத்து மக்களையும் சீடராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, 20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். இதோ, உலகத்தின் இறுதிவரை எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.