மாற்கு Chapter 1அத்தியாயம்– 1 1 | x-strong="G23160" x-lemma="θεός" x-morph="Gr,N,,,,,GMS," x-occurrence="1" x-occurrences="1" x-content="Θεοῦ"தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியின் ஆரம்பம் 2 இதோ நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன் அவன் உமக்கு முன்பேபோய் உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும் 3 கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள் அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும் தீர்க்கதரிசன புத்தகங்களில் எழுதியிருக்கிறபடி 4 யோவான் வனாந்திரத்தில் ஞானஸ்நானம் கொடுத்து பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தைப்பற்றி பிரசங்கம்பண்ணிக்கொண்டிருந்தான் 5 அப்பொழுது யூதேயா தேசத்தார் மற்றும் எருசலேம் நகரத்தார் அனைவரும் யோவானிடம்போய் தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள் 6 யோவான் ஒட்டகமயிர் ஆடையை அணிந்து தன் இடுப்பில் தோல் கச்சையைக் கட்டிக்கொண்டு வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் சாப்பிடுகிறவனாகவும் இருந்தான் 7 அவன் என்னைவிட வல்லவர் ஒருவர் எனக்குப்பின்பு வருகிறார் அவருடைய காலணிகளின் வாரைக் குனிந்து அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை 8 நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன் அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கம்பண்ணினான் 9 அந்த நாட்களில் இயேசு கலிலேயாவில் உள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்து வந்து யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார் 10 அவர் தண்ணீரில் இருந்து கரையேறின உடனே வானம் திறக்கப்பட்டதையும் ஆவியானவர் புறாவைப்போல தம்மேல் இறங்குகிறதையும் பார்த்தார் 11 அப்பொழுது நீர் என்னுடைய நேசகுமாரன் உம்மிடம் பிரியமாக இருக்கிறேன் என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது 12 உடனே ஆவியானவர் அவரை வனாந்திரத்திற்குப் போகும்படி ஏவினார் 13 அவர் வனாந்திரத்திலே நாற்பதுநாட்கள் இருந்து சாத்தானால் சோதிக்கப்பட்டு அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே தங்கிக்கொண்டிருந்தார் தேவதூதர்கள் அவருக்குப் பணிவிடைசெய்தார்கள் 14 யோவான் சிறைக்காவலில் வைக்கப்பட்டபின்பு இயேசு கலிலேயாவிற்கு வந்து தேவனுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கம் செய்து 15 காலம் நிறைவேறியது தேவனுடைய ராஜ்யம் அருகில் இருக்கிறது மனந்திரும்பி நற்செய்தியை விசுவாசியுங்கள் என்றார் 16 அவர் கலிலேயா கடலின் ஓரமாக நடந்துபோகும்போது மீனவர்களாக இருந்த சீமோனும் அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலையைப் போட்டுக்கொண்டிருக்கிறதைப் பார்த்தார் 17 இயேசு அவர்களைப் பார்த்து என் பின்னே வாருங்கள் உங்களை மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார் 18 உடனே அவர்கள் தங்களுடைய வலைகளைவிட்டு அவருக்குப் பின்னே சென்றார்கள் 19 அவர் அந்த இடத்தைவிட்டுச் சற்றுதூரம் சென்றபோது செபெதேயுவின் குமாரன் யாக்கோபும் அவனுடைய சகோதரன் யோவானும் படகிலே வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்ததைப் பார்த்து 20 உடனே அவர்களையும் அழைத்தார் அப்பொழுது அவர்கள் தங்களுடைய தகப்பனாகிய செபெதேயுவை படகிலே கூலியாட்களோடு விட்டுவிட்டு அவருக்குப் பின்னே சென்றார்கள் 21 பின்பு அவர்கள் கப்பர்நகூமுக்குப் போனார்கள் உடனே அவர் ஓய்வுநாளிலே ஜெப ஆலயத்திற்குச் சென்று போதனை பண்ணினார் 22 அவர் வேதபண்டிதர்களைப்போல போதிக்காமல் அதிகாரமுடையவராக அவர்களுக்குப் போதித்ததினால் அவருடைய போதனையைக்குறித்து மக்கள் ஆச்சரியப்பட்டார்கள் 23 அவர்களுடைய ஜெப ஆலயத்திலே அசுத்தஆவி பிடித்திருந்த ஒரு மனிதன் இருந்தான் 24 அவன் ஐயோ நசரேயனாகிய இயேசுவே எங்களுக்கும் உமக்கும் என்ன எங்களைக் கெடுக்கவா நீர் வந்தீர் நீர் யார் என்று நான் அறிவேன் நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமாகக் கத்தினான் 25 அதற்கு இயேசு நீ பேசாமல் இவனைவிட்டு வெளியே போ என்று அதை அதட்டினார் 26 உடனே அந்த அசுத்தஆவி அவனை அலைக்கழித்து அதிக சத்தம்போட்டு அவனைவிட்டுப் போய்விட்டது 27 எல்லோரும் ஆச்சரியப்பட்டு இது என்ன இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது இவர் அதிகாரத்தோடு அசுத்தஆவிகளுக்குக் கட்டளைக் கொடுக்கிறார் அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள் 28 எனவே அவரைப்பற்றின புகழ் கலிலேயா நாடு முழுவதும் பரவியது 29 உடனே அவர்கள் ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டு யாக்கோபு மற்றும் யோவானோடு சீமோன் அந்திரேயா என்பவர்களுடைய வீட்டிற்குப் போனார்கள் 30 அங்கே சீமோனுடைய மாமியார் ஜூரத்தோடு படுத்திருந்தாள் உடனே அவர்கள் அவளைப்பற்றி அவருக்குச் சொன்னார்கள் 31 அவர் அருகில் சென்று அவள் கையைப் பிடித்து அவளைத் தூக்கிவிட்டார் உடனே ஜூரம் அவளைவிட்டு நீங்கியது அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள் 32 மாலைநேரத்தில் சூரியன் மறையும்போது எல்லா நோயாளிகளையும் பிசாசு பிடித்தவர்களையும் இயேசுவிடம் கொண்டுவந்தார்கள் 33 பட்டணத்து மக்கள் எல்லோரும் வீட்டுவாசலுக்கு முன்பாகக் கூடிவந்தார்கள் 34 பலவிதமான வியாதிகளினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அநேக மக்களை அவர் சுகமாக்கி அநேக பிசாசுகளையும் துரத்திவிட்டார் அந்தப் பிசாசுகளுக்கு அவர் யார் என்று தெரிந்திருந்ததால் அவைகள் பேசுகிறதற்கு அவர் அனுமதிக்கவில்லை 35 அவர் அதிகாலையில் இருட்டோடு எழுந்து புறப்பட்டு வனாந்திரமான ஒரு இடத்திற்குப்போய் அங்கே ஜெபம்பண்ணினார் 36 சீமோனும் அவனோடுகூட இருந்தவர்களும் அவரைப் பின்தொடர்ந்துபோய் 37 அவரைப் பார்த்தபோது எல்லோரும் உம்மைத் தேடுகிறார்கள் என்று சொன்னார்கள் 38 அவர்களை அவர் பார்த்து அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம் பண்ணவேண்டும் எனவே அந்த இடங்களுக்குப் போகலாம் வாருங்கள் இதற்காகத்தான் புறப்பட்டுவந்தேன் என்று சொல்லி 39 கலிலேயா நாடு முழுவதும் அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர் பிரசங்கம்பண்ணிக்கொண்டும் பிசாசுகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார் 40 அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடம் வந்து அவர் முன்பாக முழங்கால்படியிட்டு உமக்கு விருப்பமானால் என்னைச் சுகப்படுத்த உம்மால் முடியும் என்று அவரை வேண்டிக்கொண்டான் 41 இயேசு மனதுருகி கையை நீட்டி அவனைத் தொட்டு எனக்கு விருப்பம் உண்டு சுத்தமாகு என்றார் 42 இப்படி அவர் சொன்னவுடனே குஷ்டரோகம் அவனைவிட்டு நீங்கியது அவன் சுகம் பெற்றுக்கொண்டான் 43 அப்பொழுது அவர் அவனைப் பார்த்து நீ இதை யாருக்கும் சொல்லாமல் இருக்க எச்சரிக்கையாக இரு 44 ஆனாலும் நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து நீ சுகமானதினால் மோசே கட்டளையிட்டபடி அவர்களுக்கு நீ சுகம் பெற்றதின் சாட்சியாக காணிக்கை செலுத்து என்று உறுதியாகச் சொல்லி உடனே அவனை அனுப்பிவிட்டார் 45 ஆனால் அவனோ புறப்பட்டுப்போய் இந்த விஷயங்களை எல்லோருக்கும் சொல்லிப் பிரசித்தப்படுத்தினான் எனவே அவர் வெளிப்படையாகப் பட்டணத்திற்குள் செல்லமுடியாமல் வெளியே வனாந்திரமான இடங்களில் தங்கியிருந்தார் எல்லாப் பகுதிகளிலும் இருந்து மக்கள் அவரிடம் வந்தார்கள் Chapter 2அத்தியாயம்– 2 1 சில நாட்களுக்குப்பின்பு அவர் மறுபடியும் கப்பர்நகூமுக்குப் போனார் அவர் வீட்டில் இருக்கிறார் என்று மக்கள் கேள்விப்பட்டு 2 உடனே அநேக மக்கள் கூடிவந்தார்கள் வாசலுக்குமுன்பு நிற்க இடம் இல்லாமல்போனது அவர்களுக்கு வசனத்தைப் போதித்தார் 3 அப்பொழுது நான்குபேர் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவனைச் சுமந்துகொண்டு அவரிடம் வந்தார்கள் 4 மக்கள்கூட்டம் அதிகமாக இருந்ததால் இயேசுவின் அருகில் செல்லமுடியாமல் அவர் இருந்த வீட்டின் மேல்கூரையைப் பிரித்து அந்தப் பக்கவாதக்காரனை படுக்கையோடு இறக்கினார்கள் 5 இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு பக்கவாதக்காரனைப் பார்த்து மகனே உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார் 6 அங்கே உட்கார்ந்திருந்த வேதபண்டிதர்களில் சிலர் 7 இவன் இப்படித் தேவநிந்தனை சொல்லுகிறது என்ன தேவன் ஒருவரைத்தவிர பாவங்களை மன்னிப்பவர் யார் என்று தங்களுடைய இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள் 8 அவர்கள் தங்களுடைய மனதில் இப்படிச் சிந்திக்கிறார்கள் என்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து அவர்களைப் பார்த்து நீங்கள் உங்களுடைய இருதயங்களில் இப்படிச் சிந்திக்கிறது என்ன 9 உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ அல்லது எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று சொல்வதோ எது எளிது 10 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி பக்கவாதக்காரனைப் பார்த்து 11 நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு உன் வீட்டிற்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார் 12 உடனே அவன் எழுந்து தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லோருக்கும் முன்பாக தன் வீட்டிற்குப்போனான் அப்பொழுது எல்லோரும் ஆச்சரியப்பட்டு நாம் இதுவரை இப்படிப்பட்ட சம்பவத்தைப் பார்த்தது இல்லை என்று சொல்லி தேவனை மகிமைப்படுத்தினார்கள் 13 அவர் மீண்டும் புறப்பட்டுக் கடல் அருகே போனார் அப்பொழுது மக்கள் எல்லோரும் அவரிடம் வந்தார்கள் அவர்களுக்குப் போதனைப்பண்ணினார் 14 அப்பொழுது அவர் நடந்துபோகும்போது அல்பேயுவின் குமாரனாகிய லேவி வரிவசூலிக்கும் மையத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து என் பின்னே வா என்றார் அவன் எழுந்து அவருக்குப் பின்னேசென்றான் 15 அப்பொழுது அவனுடைய வீட்டிலே அவர் விருந்து சாப்பிடும்போது அநேக வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் அவரோடு வந்திருந்தபடியால் அவர்களும் இயேசுவோடும் அவருடைய சீடர்களோடும் பந்தியில் இருந்தார்கள் 16 இயேசு வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் சாப்பிடுகிறதை வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் பார்த்து அவருடைய சீடர்களை நோக்கி அவர் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து சாப்பிடுவது ஏன் என்று கேட்டார்கள் 17 இயேசு அதைக்கேட்டு நோயாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவை சுகமாக இருப்பவர்களுக்கு தேவை இல்லை நீதிமான்களையல்ல பாவிகளையே மனம்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார் 18 யோவானுடைய சீடர்களும் பரிசேயர்களுடைய சீடர்களும் உபவாசம்பண்ணிவந்தார்கள் அவர்கள் இயேசுவிடம் வந்து யோவானுடைய சீடர்களும் பரிசேயர்களுடைய சீடர்களும் உபவாசம்பண்ணுகிறார்களே ஆனால் உம்முடைய சீடர்கள் உபவாசம்பண்ணாமல் இருப்பது ஏன் என்று கேட்டார்கள் 19 அதற்கு இயேசு மணவாளன் தங்களோடு இருக்கும்போது மணவாளனுடைய தோழர்கள் உபவாசம்பண்ணுவார்களா மணவாளன் தங்களோடு இருக்கும்வரை உபவாசம்பண்ணமாட்டார்களே 20 மணவாளன் அவர்களைவிட்டுப் போகும் நாட்கள் வரும் அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள் 21 ஒருவனும் புதிய ஆடையின் துண்டைப் பழைய ஆடையோடு இணைத்து தைக்கமாட்டான் தைத்தால் அதினோடு இணைத்த புதிய ஆடை பழைய ஆடையை அதிகமாகக் கிழிக்கும் கீறலும் அதிகமாகும் 22 ஒருவனும் புதிய திராட்சைரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைக்கமாட்டான் ஊற்றிவைத்தால் புதிய இரசம் தோல் பைகளைக் கிழித்துப்போடும் இரசமும் சிந்திப்போகும் தோல் பைகளும் கெட்டுப்போகும் புதிய இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றி வைக்கவேண்டும் என்றார் 23 பின்பு அவர் ஓய்வுநாளில் வயல்வழியாக நடந்துபோனார் அவருடைய சீடர்கள் அவரோடு நடந்துபோகும்போது கதிர்களைச் சாப்பிட தொடங்கினார்கள் 24 பரிசேயர்கள் அவரைப் பார்த்து இதோ ஓய்வுநாளில் செய்யக்கூடாததை இவர்கள் ஏன் செய்கிறார்கள் என்றார்கள் 25 அதற்கு அவர் தாவீதுக்கு உண்டான ஆபத்தில் தானும் தன்னோடு இருந்தவர்களும் பசியாக இருந்தபோது 26 அவன் அபியத்தார் என்னும் பிரதான ஆசாரியன் காலத்தில் செய்ததை நீங்கள் படித்தது இல்லையா அவன் தேவனுடைய வீட்டிற்கு சென்று ஆசாரியர்கள்தவிர வேறு ஒருவரும் சாப்பிடக்கூடாத தேவ சமுகத்தின் அப்பங்களைத் தானும் சாப்பிட்டுத் தன்னோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்றார் 27 பின்பு அவர்களை நோக்கி மனிதன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை ஓய்வுநாள் மனிதனுக்காக உண்டாக்கப்பட்டது 28 எனவே மனிதகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார் என்றார் Chapter 3அத்தியாயம்– 3 1 இயேசு மறுபடியும் ஜெப ஆலயத்திற்குச் சென்றார் அங்கே சூம்பின கையையுடைய ஒரு மனிதன் இருந்தான் 2 அவர் ஓய்வுநாளில் அவனைச் சுகமாக்கினால் அவர்மேல் குற்றஞ்சாட்டலாம் என்று அவரைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் 3 அப்பொழுது அவர் சூம்பின கையையுடைய மனிதனைப் பார்த்து எழுந்து நடுவில் நில் என்று சொல்லி 4 அவர்களைப் பார்த்து ஓய்வுநாட்களில் நன்மை செய்வதோ அல்லது தீமை செய்வதோ ஜீவனைக் காப்பாற்றுவதோ அல்லது அழிப்பதோ எது நியாயம் என்றார் அதற்கு அவர்கள் மவுனமாக இருந்தார்கள் 5 அவர்களுடைய இருதயத்தின் கடினத்தினால் அவர் விசனப்பட்டு கோபத்துடன் சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து அந்த மனிதனைப் பார்த்து உன் கையை நீட்டு என்றார் அவன் நீட்டினான் அவன் கை மற்றொரு கையைப்போல சுகமானது 6 உடனே பரிசேயர்கள் புறப்பட்டுப்போய் அவரைக் கொலைசெய்யவேண்டும் என்று அவருக்கு எதிராக ஏரோதியர்களோடு ஆலோசனைபண்ணினார்கள் 7 இயேசு தம்முடைய சீடர்களோடு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு கடலோரத்திற்குப் போனார் 8 கலிலேயாவிலும் யூதேயாவிலும் எருசலேமிலும் இதுமேயாவிலும் யோர்தானுக்கு அக்கரையிலுமிருந்து அநேக மக்கள் வந்து அவருக்குப் பின்னே சென்றார்கள் அதோடு தீரு சீதோன் பட்டணங்களின் பகுதிகளிலும் இருந்து அநேக மக்கள் அவர் செய்த அற்புதங்களைப்பற்றிக் கேள்விப்பட்டு அவரிடம் வந்தார்கள் 9 அவர் அநேகரைச் சுகமாக்கினார் நோயாளிகளெல்லோரும் அதை அறிந்து அவரைத் தொடவேண்டும் என்று அவரை நெருங்கிவந்தார்கள் 10 மக்கள்கூட்டம் அதிகமாக இருந்தபடியால் அவர்கள் தம்மை நெருக்காமல் இருப்பதற்காக தமக்கு ஒரு படகை ஆயத்தம் பண்ணவேண்டும் என்று தம்முடைய சீடர்களுக்குச் சொன்னார் 11 அசுத்தஆவிகளும் இயேசுவைப் பார்த்தபோது அவர் முன்பாக விழுந்து நீர் தேவனுடைய குமாரன் என்று சத்தமிட்டன 12 தம்மைப் பிரசித்தம் பண்ணாமல் இருக்க அவைகளுக்கு உறுதியாகக் கட்டளையிட்டார் 13 பின்பு அவர் ஒரு மலையின்மேல் ஏறி தமக்கு விருப்பமானவர்களைத் தம்மிடம் வரவழைத்தார் அவர்கள் அவரிடம் வந்தார்கள் 14 அப்பொழுது அவர் பன்னிரண்டு நபர்களைத் தெரிந்துகொண்டு அவர்கள் தம்மோடு இருக்கவும் பிரசங்கம்பண்ணுவதற்காகத் தாம் அவர்களை அனுப்பவும் 15 வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்துவதற்கு அவர்கள் அதிகாரம் உள்ளவர்களாக இருக்கவும் அவர்களை ஏற்படுத்தினார் 16 அவர்கள் யாரென்றால் சீமோன் இவனுக்குப் பேதுரு என்று பெயரிட்டார் 17 செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபு யாக்கோபின் சகோதரனாகிய யோவான் இந்த இவருக்கும் இடிமுழக்க மக்கள் என்று அர்த்தம்கொண்ட பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார் 18 அந்திரேயா பிலிப்பு பர்தொலொமேயு மத்தேயு தோமா அல்பேயுவின் குமாரன் யாக்கோபு ததேயு கானானியனாகிய சீமோன் 19 அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே 20 பின்பு வீட்டிற்குப் போனார்கள் அங்கே அநேக மக்கள் மறுபடியும் கூடிவந்ததினால் அவர்கள் சாப்பிடுவதற்கும் நேரம் இல்லாமல்போனது 21 அவருடைய குடும்பத்தார் இதைக்கேட்டபோது அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று சொல்லி அவரைப் பிடித்துக்கொள்ளும்படி வந்தார்கள் 22 எருசலேமிலிருந்து வந்த வேதபண்டிதர்கள் இவன் பெயெல்செபூலை உடையவனாக இருக்கிறான் பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள் 23 அவர்களை அவர் அழைத்து உவமைகளாக அவர்களுக்குச் சொன்னது என்னவென்றால் சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி 24 ஒரு ராஜ்யம் தனக்குத்தானே எதிராகப் பிரிந்து இருந்தால் அந்த ராஜ்யம் நிலைத்துநிற்காதே 25 ஒரு வீடு தனக்குத்தானே எதிராகப் பிரிந்து இருந்தால் அந்த வீடு நிலைத்துநிற்காதே 26 சாத்தான் தனக்குத்தானே எதிராக எழும்பிப் பிரிந்து இருந்தால் அவன் நிலைத்து நிற்கமுடியாமல் அழிந்துபோவானே 27 பலசாலியை முதலில் கட்டிப்போடாமல் யாரும் பலசாலியுடைய வீட்டிற்குள் புகுந்து அவன் பொருட்களைக் கொள்ளையடிக்கமுடியாது கட்டிப்போட்டால்மட்டுமே அவனுடைய வீட்டைக் கொள்ளையடிக்கமுடியும் 28 உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் மனிதர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும் அவர்கள் சொல்லும் எல்லாத் தூஷணமான வார்த்தைகளும் அவர்களுக்கு மன்னிக்கப்படும் 29 ஆனால் ஒருவன் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைச் சொல்வானென்றால் அவன் எப்பொழுதும் மன்னிப்பு பெறாமல் நித்திய தண்டனைக்குரியவனாக இருப்பான் என்றார் 30 இயேசு அசுத்தஆவியை உடையவனாக இருக்கிறான் என்று அவர்கள் சொன்னதினாலே அவர் இப்படிச் சொன்னார் 31 அப்பொழுது அவருடைய சகோதரர்களும் தாயாரும் வந்து வெளியே நின்று அவரை அழைக்கும்படி அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள் 32 அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த மக்கள் அவரைப் பார்த்து இதோ உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரர்களும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள் 33 அவர்களுக்கு அவர் மறுமொழியாக என் தாயார் யார் என் சகோதரர்கள் யார் என்று சொல்லி 34 தம்மைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்து இதோ என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே 35 தேவனுடைய விருப்பத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும் எனக்குச் சகோதரியும் எனக்குத் தாயுமாக இருக்கிறான் என்றார் Chapter 4அத்தியாயம்– 4 1 இயேசு மறுபடியும் கடலோரத்திலே போதகம்பண்ணத் தொடங்கினார் அநேக மக்கள் அவரிடம் கூடிவந்ததினால் அவர் கடலிலே நின்ற ஒரு படகில் ஏறி உட்கார்ந்தார் மக்களெல்லோரும் கடற்கரையில் நின்றார்கள் 2 அவர் அநேக காரியங்களை உவமைகளாக அவர்களுக்குப் போதித்தார் போதிக்கிறபொழுது அவர்களுக்குச் சொன்னது என்னவென்றால் 3 கேளுங்கள் விதைக்கிறவன் ஒருவன் விதை விதைக்கப் புறப்பட்டான் 4 அவன் விதைக்கும்போது சில விதைகள் வழியருகே விழுந்தன வானத்துப் பறவைகள் வந்து அந்த விதைகளைத் தின்றுபோட்டது 5 சில விதைகள் அதிக மண் இல்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தன அதற்கு ஆழமான மண் இல்லாததினாலே சீக்கிரத்தில் முளைத்தது 6 வெயில் ஏறினபோதோ கருகிப்போய் வேர் இல்லாததினால் உலர்ந்துபோனது 7 சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தது முள் வளர்ந்து விதை பலன் கொடுக்காதபடி அதை நெருக்கிப்போட்டது 8 சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்து உயர்ந்து வளருகிற பயிராகி ஒன்று முப்பதுமடங்காகவும் ஒன்று அறுபதுமடங்காகவும் ஒன்று நூறுமடங்காகவும் பலன் தந்தது 9 கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கட்டும் என்று அவர்களுக்குச் சொன்னார் 10 அவர் தனிமையாக இருக்கிறபோது பன்னிரண்டுபேரும் அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களும் இந்த உவமையைக்குறித்து அவரிடம் கேட்டார்கள் 11 அதற்கு அவர் தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தைத் தெரிந்துகொள்ளும்படி உங்களுக்கு அருளப்பட்டது வெளியே இருக்கிறவர்களுக்கோ இவைகள் எல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது 12 அவர்கள் குணமாகாதபடிக்கும் பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும் அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும் கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி இப்படிச் சொல்லப்படுகிறது என்றார் 13 பின்பு அவர் அவர்களைப் பார்த்து இந்த உவமையை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையா புரியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படிப் புரிந்துகொள்வீர்கள் 14 விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான் 15 வசனத்தைக் கேட்டவுடனே சாத்தான் வந்து அவர்கள் இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுகிறான் இவர்களே வழியருகே விதைக்கப்பட்டவர்கள் 16 அப்படியே வசனத்தைக் கேட்டவுடனே அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டும் 17 தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியால் கொஞ்சக்காலம்மட்டும் நிலைத்திருக்கிறார்கள் வசனத்தினால் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைகிறார்கள் இவர்களே கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் 18 வசனத்தைக் கேட்டும் உலகக் கவலைகளும் ஐசுவரியத்தின் மயக்கமும் மற்றவைகளைப்பற்றி உண்டாகிற ஆசைகளும் உள்ளே புகுந்து வசனத்தை நெருக்கிப்போட அதினால் பலன் இல்லாமல் போகிறார்கள் 19 இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் 20 வசனத்தைக்கேட்டு ஏற்றுக்கொண்டு ஒன்று முப்பதுமடங்கும் ஒன்று அறுபதுமடங்கும் ஒன்று நூறுமடங்காகவும் பலன்கொடுக்கிறார்கள் இவர்களே நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் என்றார் 21 பின்னும் அவர் அவர்களைப் பார்த்து விளக்கு விளக்குத்தண்டின்மேல் வைக்கிறதற்குத்தானேதவிர பாத்திரத்தின் கீழோ கட்டிலின் கீழோ வைக்கிறதற்குக் கொண்டுவருவார்களா 22 வெளியரங்கமாகாத அந்தரங்கமும் இல்லை வெளிக்குவராத மறைபொருளும் இல்லை 23 கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாக இருந்தால் அவன் கேட்கட்டும் என்றார் 24 பின்னும் அவர் அவர்களைப் பார்த்து நீங்கள் கேட்கிறதைக் கவனியுங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் கேட்கிற உங்களுக்கு அதிகம் கொடுக்கப்படும் 25 உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும் இல்லாதவன் எவனோ அவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்றார் 26 பின்னும் அவர் அவர்களைப் பார்த்து தேவனுடைய ராஜ்யமானது ஒரு மனிதன் நிலத்தில் விதையை விதைத்து 27 இரவில் தூங்கி பகலில் விழிக்க அவனுக்குத் தெரியாமலேயே விதை முளைத்துப் பயிராவதற்கு ஒப்பாக இருக்கிறது 28 எப்படியென்றால் நிலமானது முதலில் முளையையும் பின்பு கதிரையும் கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகத் தானாகக் கொடுக்கும் 29 பயிர் விளைந்து அறுவடைக்காலம் வந்தவுடனே அறுக்கிறதற்கு ஆட்களை அனுப்புகிறான் என்றார் 30 பின்னும் அவர் அவர்களைப் பார்த்து தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம் அல்லது எந்த உவமையினாலே அதை விளக்கிச் சொல்லமுடியும் 31 அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாக இருக்கிறது அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியில் உள்ள எல்லாவிதைகளையும்விட மிக சிறியதாக இருக்கிறது 32 விதைக்கப்பட்டப் பின்போ அது வளர்ந்து எல்லாப் பூண்டுகளையும்விட மிக பெரிதாக வளர்ந்து ஆகாயத்துப் பறவைகள் அதின் நிழலின்கீழ் வந்து கூடுகளைக்கட்டத்தக்க பெரிய கிளைகளை விடும் என்றார் 33 அவர்கள் கேட்டுப் புரிந்துகொள்வதற்கு ஏற்றபடி அவர் இப்படிப்பட்ட அநேக உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார் 34 உவமைகள் இல்லாமல் அவர்களுக்கு அவர் ஒன்றும் சொல்லவில்லை அவர் தம்முடைய சீடர்களோடு தனிமையாக இருக்கும்போது அவர்களுக்கு எல்லாவற்றையும் விளக்கிச்சொன்னார் 35 அன்று மாலைநேரத்தில் அவர் அவர்களைப் பார்த்து அக்கரைக்குப் போகலாம் வாருங்கள் என்றார் 36 அவர்கள் மக்களை அனுப்பிவிட்டு அவர் படகில் இருந்தபடியே அவரைக்கொண்டுபோனார்கள் வேறு படகுகளும் அவரோடு இருந்தது 37 அப்பொழுது பலத்த சுழல்காற்று உண்டாகி படகு நிரம்பும் அளவிற்கு அலைகள் படகின்மேல் மோதியது 38 இயேசு கப்பலின் பின்பக்கத்தில் தலையணையை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார் அவர்கள் அவரை எழுப்பி போதகரே நாங்கள் மரித்துப்போவதைப்பற்றி உமக்குக் கவலை இல்லையா என்றார்கள் 39 அவர் எழுந்து காற்றை அதட்டி கடலைப்பார்த்து சீராதே அமைதியாக இரு என்றார் அப்பொழுது காற்று நின்றுபோய் மிகுந்த அமைதி உண்டானது 40 அவர் அவர்களைப் பார்த்து ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள் ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போனது என்றார் 41 அவர்கள் மிகவும் பயந்து இவர் யாரோ காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள் Chapter 5அத்தியாயம்– 5 1 பின்பு அவர்கள் கடலுக்கு அக்கரையில் உள்ள கதரேனருடைய நாட்டிற்கு வந்தார்கள் 2 அவர் படகில் இருந்து இறங்கினவுடனே அசுத்தஆவியுள்ள ஒரு மனிதன் கல்லறைகளில் இருந்து அவருக்கு எதிராகவந்தான் 3 அவன் கல்லறைகளிலே குடியிருந்து வந்தான் அவனைச் சங்கிலிகளினால் கட்டவும் ஒருவனுக்கும் முடியவில்லை 4 அவன் பலமுறை விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டும் சங்கிலிகளைத் தகர்த்து விலங்குகளை உடைத்துப்போடுவான் அவனை அடக்க ஒருவனுக்கும் முடியவில்லை 5 அவன் எப்பொழுதும் இரவும் பகலும் மலைகளிலும் கல்லறைகளிலும் இருந்து சத்தம்போட்டு கல்லுகளினால் தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்டிருந்தான் 6 அவன் இயேசுவைத் தூரத்திலே பார்த்தபோது ஓடிவந்து அவரைப் பணிந்துகொண்டு 7 இயேசுவே உன்னதமான தேவனுடைய குமாரனே எனக்கும் உமக்கும் என்ன என்னை வேதனைப்படுத்தவேண்டாம் என்று தேவனுடைய பெயரில் உம்மைக் கேட்டுக்கொள்ளுகிறேன் என்று அதிக சத்தமிட்டுச் சொன்னான் 8 ஏனென்றால் அவர் அவனைப் பார்த்து அசுத்தஆவியே இந்த மனிதனைவிட்டு வெளியே போ என்று சொல்லியிருந்தார் 9 அப்பொழுது அவர் அவனைப் பார்த்து உன் பெயர் என்ன என்று கேட்டார் அதற்கு அவன் நாங்கள் அநேகர் இருப்பதினால் என் பெயர் லேகியோன் என்று சொல்லி 10 தங்களை அந்தத் திசையிலிருந்து துரத்திவிடவேண்டாம் என்று அவரை அதிகமாக வேண்டிக்கொண்டான் 11 அப்பொழுது அந்த இடத்தில் மலையின் அருகில் அநேக பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தது 12 அந்தப் பிசாசுகள் அவரைப் பார்த்து பன்றிகளுக்குள்ளே போக அவைகளுக்குள் எங்களை அனுப்பும் என்று அவரை வேண்டிக்கொண்டன 13 இயேசு அவைகளுக்கு உத்தரவு கொடுத்தவுடனே அசுத்தஆவிகள் புறப்பட்டுப் பன்றிகளுக்குள் போனது உடனே ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகளுள்ள அந்தக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி கடலிலே பாய்ந்து கடலில் அமிழ்ந்துபோனது 14 பன்றிகளை மேய்த்தவர்கள் ஓடி இதைப் பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள் அப்பொழுது நடந்தவைகளைப் பார்ப்பதற்காக மக்கள் புறப்பட்டு 15 இயேசுவிடம் வந்து லேகியோனாகிய பிசாசுகள் பிடித்திருந்தவன் புத்தி தெளிந்து உடை அணிந்து உட்கார்ந்திருப்பதைப் பார்த்து பயந்தார்கள் 16 பிசாசுகள் பிடித்திருந்தவனுக்கும் பன்றிகளுக்கும் நடந்தவைகளைப் பார்த்தவர்களும் அவர்களுக்கு விளக்கமாகச் சொன்னார்கள் 17 அப்பொழுது தங்களுடைய எல்லைகளைவிட்டுப் போகவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள் 18 அப்படியே அவர் படகில் ஏறும்பொழுது பிசாசு பிடித்திருந்தவன் இயேசுவோடு வருவதற்கு தனக்கு அனுமதி கொடுக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டான் 19 இயேசு அவனுக்கு அனுமதி கொடுக்காமல் நீ உன் குடும்பத்தாரிடம் உன் வீட்டிற்குப்போய் கர்த்தர் உனக்கு மனமிறங்கி உனக்குச் செய்தவைகளை எல்லாம் அவர்களுக்குச் சொல் என்று சொன்னார் 20 அப்படியே அவன்போய் இயேசு தனக்குச் செய்தவைகளை எல்லாம் தெக்கப்போலி என்னும் நாட்டில் பிரசித்தப்படுத்தினான் எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள் 21 இயேசு படகில் ஏறி மறுபடியும் இக்கரைக்கு வந்து கடலோரத்தில் இருந்தபோது அநேக மக்கள் அவரிடம் கூடிவந்தார்கள் 22 அப்பொழுது ஜெப ஆலயத்தலைவரில் ஒருவனாகிய யவீரு என்பவன் வந்து அவரைப் பார்த்தவுடனே அவர் பாதத்தில் விழுந்து 23 என் மகள் மரணவேதனைப்படுகிறாள் அவள் சுகமடைய நீர் வந்து அவள்மேல் உமது கரங்களை வையும் அப்பொழுது பிழைப்பாள் என்று அவரை அதிகமாக வேண்டிக்கொண்டான் 24 அவர் அவனோடுகூட போனார் அநேக மக்கள் அவருக்குப் பின்னேசென்று அவரை நெருக்கினார்கள் 25 அப்பொழுது பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினாலே அவதிப்பட்ட ஒரு பெண் 26 அநேக வைத்தியர்களால் அதிகமாக வருத்தப்பட்டு தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் செலவு செய்தும் கொஞ்சம்கூட குணமாகாமல் அதிகமாக வருத்தப்படுகிறபொழுது 27 இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு நான் அவருடைய ஆடையையாவது தொட்டால் சுகம் பெறுவேன் என்று சொல்லி 28 மக்கள் கூட்டத்தின் உள்ளே அவருக்குப் பின்பக்கத்தில் வந்து அவருடைய ஆடையைத் தொட்டாள் 29 உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றுபோனது அந்த வேதனை நீங்கி சுகம் பெற்றதை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள் 30 உடனே இயேசு தம்மிடம் இருந்து வல்லமை புறப்பட்டுப் போனதைத் தமக்குள் அறிந்து மக்கள்கூட்டத்தில் திரும்பி என் ஆடைகளைத் தொட்டது யார் என்று கேட்டார் 31 அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து அநேக மக்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் பார்த்தும் என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள் 32 இதைச் செய்தவளைப் பார்க்க அவர் சுற்றிலும் பார்த்தார் 33 தன்னிடம் நடந்ததை அறிந்த அந்தப் பெண் பயந்து நடுங்கி அவர் முன்பாக வந்து விழுந்து உண்மைகளை எல்லாம் அவருக்குச் சொன்னாள் 34 அவர் அவளைப் பார்த்து மகளே உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது நீ சமாதானத்தோடு போய் உன் வேதனை நீங்கி சுகமாக இரு என்றார் 35 அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து உம்முடைய மகள் மரித்துப்போனாள் இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறாய் என்றார்கள் 36 அவர்கள் சொன்ன வார்த்தையை இயேசு கேட்டவுடனே ஜெப ஆலயத்தலைவனைப் பார்த்து பயப்படாதே விசுவாசம் உள்ளவனாக இரு என்று சொல்லி 37 வேறுயாரையும் தம்மோடு சேர்த்துக்கொள்ளாமல் பேதுருவையும் யாக்கோபையும் யாக்கோபின் சகோதரன் யோவானையும் தம்மோடு கூட்டிக்கொண்டுபோனார் 38 ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிற்கு வந்து அங்கே சத்தமிடுகிற மக்களையும் மிகவும் அழுது புலம்புகிறவர்களையும் கண்டு 39 உள்ளே சென்று நீங்கள் சத்தமிட்டு அழுகிறது ஏன் பிள்ளை மரிக்கவில்லை தூங்கிக்கொண்டிருக்கிறாள் என்றார் 40 அதற்காக அவரைப் பார்த்து சிரித்தார்கள் எல்லோரையும் அவர் வெளியே அனுப்பிவிட்டு பிள்ளையின் தகப்பனையும் தாயையும் தம்மோடு வந்தவர்களையும் அழைத்துக்கொண்டு பிள்ளை இருந்த அறைக்குள் சென்று 41 பிள்ளையின் கையைப் பிடித்து தலீத்தாகூமி என்றார் அதற்கு சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தம் 42 உடனே சிறுபெண் எழுந்து நடந்தாள் அவள் பன்னிரண்டு வயதுள்ளவளாக இருந்தாள் அவர்கள் அனைவரும் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள் 43 அதை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டு அவளுக்குச் சாப்பிடுவதற்கு ஏதாவது கொடுங்கள் என்று சொன்னார் Chapter 6அத்தியாயம்– 6 1 இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு அவர் வளர்ந்த ஊருக்கு வந்தார் அவருடைய சீடர்களும் அவரோடு வந்தார்கள் 2 ஓய்வுநாளானபோது ஜெப ஆலயத்தில் போதகம்பண்ணினார் அதைக் கேட்ட அனைவரும் ஆச்சரியப்பட்டு இவைகள் இவனுக்கு எங்கிருந்து வந்தது இவன் கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகளைச் செய்ய இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது 3 இவன் தச்சன் அல்லவா மரியாளுடைய குமாரன் அல்லவா யாக்கோபு யோசே யூதா சீமோன் என்பவர்களுடைய சகோதரன் அல்லவா இவன் சகோதரிகளும் இங்கே நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா என்று சொல்லி அவரைக்குறித்து இடறல் அடைந்தார்கள் 4 இயேசு அவர்களை நோக்கி தீர்க்கதரிசி ஒருவன் தன் சொந்த ஊரிலும் தன் உறவினர்களிலும் தன் வீட்டிலும்தான் மதிக்கப்படமாட்டான் மற்ற எல்லா இடங்களிலும் மதிக்கப்படுவான் என்றார் 5 அங்கே அவர் சில நோயாளிகள்மேல்மட்டும் கரங்களை வைத்து அவர்களைக் குணமாக்கினார் வேறு அற்புதங்கள் எதுவும் செய்யமுடியாமல் 6 அவர்களுக்கு விசுவாசம் இல்லாததினால் அதைக்குறித்து ஆச்சரியப்பட்டு மற்ற கிராமங்களுக்குச்சென்று போதகம்பண்ணினார் 7 இயேசு பன்னிரண்டு சீடர்களையும் அழைத்து அசுத்தஆவிகளைத் துரத்த அவர்களுக்கு அதிகாரம் கொடுத்து 8 வழிக்குப் பையையோ அப்பத்தையோ இடுப்புக் கச்சையில் பணத்தையோ எடுத்துக்கொண்டுபோகாமல் ஒரு தடியைமட்டும் எடுத்துக்கொண்டுபோகவும் 9 காலணிகளைப் போட்டுக்கொண்டுபோகவும் இரண்டு அங்கிகளை அணிந்துகொள்ளாமலிருக்கவும் கட்டளையிட்டார் 10 பின்பு அவர்களைப் பார்த்து நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டிற்குச் சென்றால் அந்த இடத்தைவிட்டுப் புறப்படும்வரை அங்கேயே தங்கியிருங்கள் 11 யாராவது உங்களை ஏற்றுக்கொள்ளாமலும் உங்களுடைய வசனங்களைக் கேட்காமலும் இருந்தால் நீங்கள் அந்த இடத்தைவிட்டுப் புறப்படும்போது அவர்களுக்கு சாட்சியாக உங்களுடைய கால்களின் கீழே படிந்த தூசியை உதறிப்போடுங்கள் நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு சம்பவிப்பதைவிட சோதோம் கொமோரா பட்டணத்திற்கு சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி அவர்களை இரண்டு இரண்டுபேராக அனுப்பினார் 12 அவர்கள் புறப்பட்டுப்போய் மனந்திரும்புங்கள் என்று பிரசங்கித்து 13 அநேக பிசாசுகளைத் துரத்தி அநேக நோயாளிகளை எண்ணெய் பூசி சுகமாக்கினார்கள் 14 இயேசுவினுடைய பெயர் பிரசித்தமானதினால் ஏரோதுராஜா அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு மரித்துப்போன யோவான்ஸ்நானன் உயிரோடு எழுந்தான் எனவே அவனிடம் இப்படிப்பட்டப் பலத்த செய்கைகள் வெளிப்படுகிறது என்றான் 15 சிலர் அவர் எலியா என்றார்கள் வேறுசிலர் அவர் ஒரு தீர்க்கதரிசி அல்லது பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவனைப்போல இருக்கிறார் என்று சொன்னார்கள் 16 ஏரோது அதைக் கேட்டபொழுது அவன் நான் தலையை வெட்டிக்கொன்ற யோவான்தான் அவன் உயிரோடு எழுந்தான் என்றான் 17 ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைத் தனக்கு மனைவியாக்கி வைத்துக்கொண்டபோது 18 யோவான் ஏரோதைப் பார்த்து நீர் உம்முடைய சகோதரன் மனைவியை வைத்துக்கொள்ளுவது நியாயம் இல்லை என்று சொன்னதினால் ஏரோது போர்வீரர்களை அனுப்பி யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான் 19 ஏரோதியாளும் அவனுக்குச் சதி நினைத்து அவனைக் கொன்றுபோட மனதாயிருந்தாள் ஆனாலும் அவளால் முடியாமல்போனது 20 ஏனென்றால் யோவான் நீதியும் பரிசுத்தமும் உள்ளவன் என்று ஏரோது அறிந்து அவனுக்குப் பயந்து அவனைப் பாதுகாத்து அவன் யோசனையின்படி அநேகக் காரியங்களைச் செய்து விருப்பத்தோடு அவன் சொல்லைக் கேட்டுவந்தான் 21 ஏரோது தன்னுடைய பிறந்தநாளிலே தன்னுடைய பிரபுக்களுக்கும் படைத்தளபதிகளுக்கும் கலிலேயா நாட்டின் பிரதான மனிதர்களுக்கும் ஒரு விருந்துபண்ணினபோது 22 ஏரோதியாளின் மகள் சபை நடுவே வந்து நடனம்பண்ணி ஏரோதுவையும் அவனோடுகூட பந்தியில் இருந்தவர்களையும் சந்தோஷப்படுத்தினாள் அப்பொழுது ராஜா சிறுபெண்ணை நோக்கி உனக்கு வேண்டியதை என்னிடம் கேள் அதை உனக்குத் தருவேன் என்று சொல்லி 23 நீ என்னிடத்தில் எதைக்கேட்டாலும் அது என் ராஜ்யத்தில் பாதியானாலும் அதை உனக்குத் தருவேன் என்று அவளுக்கு வாக்குக்கொடுத்தான் 24 அப்பொழுது அவள் வெளியேபோய் நான் என்ன கேட்கவேண்டும் என்று தன் தாயிடம் கேட்டாள் அதற்கு அவள் யோவான்ஸ்நானனுடைய தலையைக் கேள் என்றாள் 25 உடனே அவள் ராஜாவிடம் சீக்கிரமாக வந்து நீர் இப்பொழுதே ஒரு தட்டில் யோவான்ஸ்நானனுடைய தலையை வைத்து எனக்குத் தரவேண்டும் என்று கேட்டாள் 26 அப்பொழுது ராஜா அதிக துக்கமடைந்தான் ஆனாலும் வாக்குக் கொடுத்ததினாலும் அவனோடுகூட பந்தியில் இருந்தவர்களுக்காகவும் அவள் கேட்டுக்கொண்டதை மறுக்க அவனுக்கு மனம் இல்லாமல் 27 உடனே யோவான்ஸ்நானனுடைய தலையைக் கொண்டுவரும்படி போர்வீரனுக்குக் கட்டளைக் கொடுத்து அனுப்பினான் 28 அப்படியே அவன்போய் காவல்கூடத்திலே அவனுடைய தலையை வெட்டி அவன் தலையை ஒரு தட்டிலே கொண்டுவந்து அதை அந்தச் சிறு பெண்ணுக்குக் கொடுத்தான் அந்தச் சிறுபெண் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள் 29 அவனுடைய சீடர்கள் அதைக் கேள்விப்பட்டு வந்து அவன் சரீரத்தை எடுத்து ஒரு கல்லறையில் வைத்தார்கள் 30 அப்பொழுது அப்போஸ்தலர்கள் இயேசுவிடம் கூடிவந்து தாங்கள் செய்தவைகள் போதித்தவைகள் எல்லாவற்றையும் அவருக்கு அறிவித்தார்கள் 31 அவர் அவர்களைப் பார்த்து வனாந்திரமான ஒரு இடத்திற்குச் சென்று தனிமையில் கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் வாருங்கள் என்றார் ஏனென்றால் அநேக மக்கள் அவரிடம் வருகிறதும் போகிறதுமாக இருந்ததினால் அவர்களுக்கு சாப்பிட நேரமில்லாமல் இருந்தது 32 அப்படியே அவர்கள் தனிமையாக ஒரு படகில் ஏறி வனாந்திரமான ஒரு இடத்திற்குப் போனார்கள் 33 அவர்கள் புறப்பட்டுப் போகிறதை மக்கள் பார்த்தார்கள் அவரை அறிந்த மக்கள் எல்லாப் பட்டணங்களிலுமிருந்து கால்நடையாகவே அந்த இடத்திற்கு ஓடி அவர்களுக்கு முன்பே அங்கு சென்றுசேர்ந்து அவரிடம் கூடிவந்தார்கள் 34 இயேசு கரையில் வந்து அங்கே கூடிவந்த மக்களைப் பார்த்து அவர்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல இருந்ததினால் அவர்கள்மேல் மனதுருகி அநேகக் காரியங்களை அவர்களுக்குப் போதிக்கத்தொடங்கினார் 35 அதிகநேரம் ஆனபின்பு அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து இது வனாந்திரமான இடம் அதிகநேரமும் ஆனது 36 சாப்பிடுகிறதற்கும் இவர்களிடம் ஒன்றும் இல்லை எனவே இவர்கள் சுற்றிலும் இருக்கிற கிராமங்களுக்கும் ஊர்களுக்கும்போய் அப்பங்களை வாங்கிக்கொள்ள இவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள் 37 அவர் அவர்களைப் பார்த்து நீங்களே அவர்களுக்கு உணவுகொடுங்கள் என்றார் அதற்கு அவர்கள் நாங்கள்போய் இருநூறு வெள்ளிக்காசுகளுக்கு அப்பங்களை வாங்கி இவர்களுக்குச் சாப்பிடக் கொடுக்கலாமா என்றார்கள் 38 அதற்கு அவர் உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கிறது என்று போய்ப் பாருங்கள் என்றார் அவர்கள் பார்த்துவந்து ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் இருக்கிறது என்றார்கள் 39 அப்பொழுது எல்லோரையும் பசும்புல்லின்மேல் பந்தி உட்காரவைக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார் 40 அப்படியே வரிசை வரிசையாக நூறுநூறுபேராகவும் ஐம்பதுஐம்பதுபேராகவும் உட்கார்ந்தார்கள் 41 அவர் அந்த ஐந்து அப்பங்களையும் அந்த இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்துபார்த்து ஆசீர்வதித்து அப்பங்களைப் பிட்டு அவர்களுக்குப் பரிமாறத் தம்முடைய சீடர்களிடம் கொடுத்தார் அப்படியே இரண்டு மீன்களையும் எல்லோருக்கும் பங்கிட்டார் 42 எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தி அடைந்தார்கள் 43 மேலும் அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துண்டுகளைப் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள் 44 அப்பங்கள் சாப்பிட்ட ஆண்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராக இருந்தார்கள் 45 அவர் மக்களை அனுப்பிவிடும்போது தம்முடைய சீடர்கள் படகில் ஏறி அக்கரையில் பெத்சாயிதாவிற்கு தமக்கு முன்பே போகச்சொல்லி அவர்களை துரிதப்படுத்தினார் 46 அவர் மக்களை அனுப்பிவிட்டப்பின்பு ஜெபம்பண்ணுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார் 47 மாலைநேரமானபோது படகு நடுக்கடலில் இருந்தது அவரோ கரையிலே தனிமையாக இருந்தார் 48 அப்பொழுது எதிர்க்காற்று வீசிக்கொண்டிருந்ததால் அவர்கள் கஷ்டப்பட்டு துடுப்பு போடுகிறதை அவர் பார்த்து அதிகாலையில் கடலின்மேல் நடந்து அவர்களிடம் வந்து அவர்களைக் கடந்துபோகிறவர்போல காணப்பட்டார் 49 அவர் கடலின்மேல் நடக்கிறதை அவர்கள் பார்த்து அவரை பிசாசு என்று நினைத்து சத்தமிட்டு அலறினார்கள் 50 அவர்கள் எல்லோரும் அவரைப் பார்த்து கலக்கம் அடைந்தார்கள் உடனே அவர் அவர்களோடு பேசி திடன்கொள்ளுங்கள் நான்தான் பயப்படாமல் இருங்கள் என்று சொல்லி 51 அவர்கள் இருந்த படகில் ஏறினார் அப்பொழுது காற்று அமைதியானது எனவே அவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள் 52 அவர்களுடைய இருதயம் கடினமுள்ளதாக இருந்ததினால் அப்பங்களைக்குறித்து அவர்கள் உணராமல் போனார்கள் 53 அவர்கள் கடலைக்கடந்து கெனேசரேத்து என்னும் நாட்டிற்கு வந்து கரை ஏறினார்கள் 54 அவர்கள் படகில் இருந்து இறங்கினவுடனே மக்கள் அவரை அறிந்து 55 அந்தச் சுற்றுபுறமெல்லாம் ஓடிச்சென்று நோயாளிகளைப் படுக்கைகளில் படுக்கவைத்து அவர் வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்ட இடங்களிலெல்லாம் சுமந்துகொண்டுவந்தார்கள் 56 இவைகள் இல்லாமல் அவர் சென்ற கிராமங்கள் பட்டணங்கள் நாடுகள் எல்லாவற்றிலும் சந்தைவெளிகளிலே நோயாளிகளைக் கொண்டுவந்து அவருடைய ஆடையின் ஓரத்தையாவது அவர்கள் தொடுவதற்கு அனுமதிக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள் அவரைத் தொட்ட எல்லோரும் சுகம் பெற்றுக்கொண்டார்கள் Chapter 7அத்தியாயம்– 7 1 எருசலேமில் இருந்து வந்த பரிசேயர்களும் வேதபண்டிதர்களில் சிலரும் அவரிடம் கூடிவந்தார்கள் 2 அப்பொழுது அவருடைய சீடர்களில் சிலர் கைகளைக் கழுவாமல் சாப்பிடுகிறதை அவர்கள் பார்த்து குற்றஞ்சாட்டினார்கள் 3 ஏனென்றால் யூதர்கள் அனைவரும் முக்கியமாக பரிசேயர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தைக் கடைபிடித்து அடிக்கடி கைகளைக் கழுவினாலொழிய சாப்பிடமாட்டார்கள் 4 கடைவீதிகளுக்குச் சென்று திரும்பி வரும்போதும் குளிக்காமல் சாப்பிடமாட்டார்கள் அப்படியே செம்புகளையும் கிண்ணங்களையும் செப்புக்குடங்களையும் இருக்கைகளையும் கழுவுகிறதோடு மட்டுமல்லாமல் வேறு அநேக சடங்குகளையும் கடைபிடித்துவருவார்கள் 5 அப்பொழுது அந்தப் பரிசேயர்களும் வேதபண்டிதர்களும் அவரைப் பார்த்து உம்முடைய சீடர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை மீறி ஏன் கைகளைக் கழுவாமல் சாப்பிடுகிறார்கள் என்று கேட்டார்கள் 6 அவர்களுக்கு அவர் மறுமொழியாக இந்த மக்கள் தங்களுடைய உதடுகளினால் என்னை கனம்பண்ணுகிறார்கள் அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாக விலகியிருக்கிறது என்றும் 7 மனிதர்களுடைய கட்டளைகளைப் போதனைகளாகப் போதித்து வீணாக எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று எழுதியிருக்கிறபடி மாயக்காரர்களாகிய உங்களைக்குறித்து ஏசாயா நன்றாகத் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான் 8 நீங்கள் தேவனுடைய கட்டளைகளை ஒதுக்கிவிட்டு மனிதர்களுடைய பாரம்பரியத்தைக் கடைபிடித்துவருகிறவர்களாக கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள் மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் கடைபிடித்துவருகிறீர்கள் என்றார் 9 பின்னும் அவர் அவர்களைப் பார்த்து நீங்கள் உங்களுடைய பாரம்பரியத்தைக் கடைபிடிப்பதற்காக தேவனுடைய கட்டளைகளை நிராகரித்தது நன்றாக இருக்கிறது 10 எப்படியென்றால் உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும் தகப்பனையாவது தாயையாவது அவமதிக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும் மோசே சொல்லியிருக்கிறாரே 11 நீங்களோ ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது பார்த்து உனக்கு நான் செய்யவேண்டிய உதவி எதுவோ அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாக தேவனுக்குக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டால் அவனுடைய கடமை முடிந்தது என்று சொல்லி 12 அவனை இனி தன் தகப்பனுக்கோ தன் தாய்க்கோ எந்தவொரு உதவியும் செய்யவிடாமல் 13 நீங்கள் போதித்த உங்களுடைய பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமதிக்கிறீர்கள் இதுபோலவே நீங்கள் மற்ற அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார் 14 பின்பு அவர் மக்கள் எல்லோரையும் வரவழைத்து அவர்களைப் பார்த்து நீங்கள் எல்லோரும் நான் சொல்வதைக்கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள் 15 மனிதனுக்கு வெளியிலிருந்து அவனுக்குள்ளே போகிறது அவனைத் தீட்டுப்படுத்தாது அவன் மனதிலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும் 16 கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாக இருந்தால் அவன் கேட்கட்டும் என்றார். 17 அவர் மக்களைவிட்டு வீட்டிற்குள் சென்றபோது அவருடைய சீடர்கள் அவர் சொன்ன உவமையைக்குறித்து அவரிடத்தில் விசாரித்தார்கள் 18 அதற்கு அவர் நீங்களும் இவ்வளவு புரிந்துகொள்ளாதவர்களா வெளியிலிருந்து மனிதனுக்குள்ளே போகிற எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தாது என்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா 19 அது அவன் இருதயத்திற்குள் போகாமல் வயிற்றுக்குள்ளே போகிறது அதிலிருந்து எல்லா அசுத்தங்களும் ஆசனவழியாக வெளியேபோகும் 20 மனிதனுக்குள்ளேயிருந்து புறப்படுகிறதே மனிதனைத் தீட்டுப்படுத்தும் 21 எப்படியென்றால் மனிதனுடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும் விபசாரங்களும் வேசித்தனங்களும் கொலைபாதகங்களும் 22 திருட்டும் பொருளாசைகளும் துஷ்டகுணங்களும் கபடும் காமமும் வன்கண்ணும் அவதூறும் பெருமையும் மதிகேடும் புறப்பட்டுவரும் 23 பொல்லாதவைகளாகிய இவைகள் எல்லாம் மனதிலிருந்து புறப்பட்டு மனிதனைத் தீட்டுப்படுத்தும் என்றார் 24 பின்பு அவர் எழுந்து அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளில்போய் ஒரு வீட்டிற்குள் சென்று அவர் அங்கே இருப்பது ஒருவருக்கும் தெரியக்கூடாது என்று விரும்பியும் அவர் மறைவாக இருக்கமுடியாமல்போனது 25 அசுத்தஆவி பிடித்திருந்த ஒரு சிறுபெண்ணின் தாய் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு வந்து அவர் பாதத்தில் விழுந்தாள் 26 அந்தப் பெண் சீரோபேனிக்கியா தேசத்தைச் சேர்ந்த கிரேக்கப் பெண்ணாக இருந்தாள் அவள் தன் மகளைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்திவிடவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டாள் 27 இயேசு அவளைப் பார்த்து முதலில் பிள்ளைகள் திருப்தியாகட்டும் பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லது இல்லை என்றார் 28 அதற்கு அவள் உண்மைதான் ஆண்டவரே ஆனாலும் மேஜையின்கீழே இருக்கும் நாய்க்குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள் 29 அப்பொழுது அவர் நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம் பிசாசு உன் மகளைவிட்டுப் போனது என்றார் 30 அவள் தன் வீட்டிற்கு வந்தபொழுது பிசாசு போய்விட்டதையும் தன் மகள் கட்டிலில் படுத்திருக்கிறதையும் கண்டாள் 31 மறுபடியும் அவர் தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளைவிட்டுப் புறப்பட்டு தெக்கப்போலியின் எல்லைகளின்வழியாகக் கலிலேயாக்கடலின் அருகே வந்தார் 32 அங்கே திக்குவாயுடைய ஒரு காதுகேளாதவனை அவரிடம் கொண்டுவந்து அவர் தமது கையை அவன்மேல் வைக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள் 33 அப்பொழுது அவர் அவனை மக்கள் கூட்டத்தைவிட்டுத் தனியே அழைத்துக்கொண்டுபோய் தம்முடைய விரல்களை அவன் காதுகளில் வைத்து உமிழ்ந்து அவனுடைய நாக்கைத் தொட்டு 34 வானத்தை அண்ணாந்துபார்த்து பெருமூச்சுவிட்டு எப்பத்தா என்றார் அதற்குத் திறக்கப்படுவாயாக என்று அர்த்தம் 35 உடனே அவனுடைய காதுகள் திறக்கப்பட்டு அவனுடைய நாக்கின் கட்டும் அவிழ்ந்து அவன் தெளிவாகப் பேசினான் 36 அதை யாருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார் ஆனாலும் எவ்வளவு அதிகமாக அவர்களுக்குக் கட்டளையிட்டாரோ அவ்வளவு அதிகமாக அவர்கள் அதைப் பிரசித்தப்படுத்தி 37 எல்லாவற்றையும் நன்றாகச் செய்தார் காதுகேட்காதவர்களைக் கேட்கவும் ஊமையர்களைப் பேசவும்பண்ணுகிறார் என்று சொல்லி மேலும் ஆச்சரியப்பட்டார்கள் Chapter 8அத்தியாயம்– 8 1 அந்த நாட்களிலே அநேக மக்கள் கூடிவந்திருக்கும்போது அவர்கள் சாப்பிடுகிறதற்கு ஒன்றுமில்லாததினால் இயேசு தம்முடைய சீடர்களை அழைத்து 2 மக்களுக்காகப் பரிதாபப்படுகிறேன் இவர்கள் இப்பொழுது என்னிடம் தங்கியிருந்த மூன்றுநாட்களாகச் சாப்பிட ஒன்றுமில்லாமல் இருக்கிறார்கள் 3 இவர்களில் சிலர் தூரத்திலிருந்து வந்திருப்பதினால் நான் இவர்களைப் பட்டினியாக வீட்டிற்கு அனுப்பிவிட்டால் போகும் வழியில் சோர்ந்துபோவார்களே என்றார் 4 அதற்கு அவருடைய சீடர்கள் இந்த வனாந்திரத்திலே ஒருவன் எங்கே இருந்து அப்பங்களைக் கொண்டுவந்து இத்தனை மக்களுக்குக் கொடுத்து திருப்தியாக்கமுடியும் என்றார்கள் 5 அதற்கு அவர் உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கிறது என்று கேட்டார் அவர்கள் ஏழு அப்பங்கள் இருக்கிறது என்றார்கள் 6 அப்பொழுது அவர் மக்களைத் தரையிலே பந்தி உட்காரக் கட்டளையிட்டு அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து நன்றி செலுத்தி அதைப் பிட்டு அவர்களுக்குப் பரிமாற சீடர்களிடம் கொடுத்தார் அவர்கள் மக்களுக்குப் பரிமாறினார்கள் 7 சில சிறிய மீன்களும் அவர்களிடம் இருந்தது அவர் அவைகளையும் ஆசீர்வதித்து அவர்களுக்குப் பரிமாறச் சொன்னார் 8 அவர்கள் சாப்பிட்டுத் திருப்தியானார்கள் மீதியான அப்பங்களை ஏழுகூடை நிறைய எடுத்தார்கள் 9 சாப்பிட்டவர்கள் ஏறக்குறைய நான்காயிரம்பேராக இருந்தார்கள் பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டார் 10 உடனே அவர் தம்முடைய சீடர்களோடு படகில் ஏறி தல்மனூத்தாவின் எல்லைகளுக்கு வந்தார் 11 அப்பொழுது பரிசேயர்கள் வந்து அவரோடு வாக்குவாதம் பண்ணத்தொடங்கி அவரைச் சோதிப்பதற்காக வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள் 12 அவர் தம்முடைய ஆவியில் பெருமூச்சுவிட்டு இந்தச் சந்ததியார்கள் அடையாளம் தேடுகிறது ஏன் இந்தச் சந்ததியார்களுக்கு ஒரு அடையாளமும் கொடுக்கப்படுவது இல்லை என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி 13 அவர்களைவிட்டு மறுபடியும் படகில் ஏறி அக்கரைக்குப் போனார் 14 சீடர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள் படகிலே அவர்களிடம் ஒரு அப்பம்மட்டுமே இருந்தது 15 அவர் அவர்களைப் பார்த்து நீங்கள் பரிசேயர்களுடைய புளித்த மாவைக்குறித்தும் ஏரோதின் புளித்த மாவைக்குறித்தும் எச்சரிக்கையாக இருங்கள் என்று கற்பித்தார் 16 அதற்கு அவர்கள் நம்மிடம் அப்பங்கள் இல்லாததினால் இப்படிச் சொல்லுகிறார் என்று தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள் 17 இயேசு அதை அறிந்து அவர்களைப் பார்த்து உங்களிடம் அப்பங்கள் இல்லாததினால் நீங்கள் யோசனைபண்ணுகிறது ஏன் இன்னும் சிந்திக்காமலும் உணராமலும் இருக்கிறீர்களா இன்னும் உங்களுடைய இருதயம் கடினமாக இருக்கிறதா 18 உங்களுக்குக் கண்கள் இருந்தும் பார்க்காமல் இருக்கிறீர்களா காதுகள் இருந்தும் கேட்காமல் இருக்கிறீர்களா நினைத்துப்பார்க்காமல் இருக்கிறீர்களா 19 நான் ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பங்கிட்டுக்கொடுத்தபோது மீதியான அப்பங்களை எத்தனை கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார் பன்னிரண்டு என்றார்கள் 20 நான் ஏழு அப்பங்களை நான்காயிரம்பேருக்குப் பங்கிட்டுக்கொடுத்தபோது மீதியான அப்பங்களை எத்தனை கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார் ஏழு என்றார்கள் 21 அப்படியானால் நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருப்பது எப்படி என்றார் 22 பின்பு அவர் பெத்சாயிதா ஊருக்கு வந்தார் அப்பொழுது ஒரு குருடனை அவரிடம் கொண்டுவந்து அவனைத் தொடவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள் 23 அவர் குருடனுடைய கையைப் பிடித்து அவனைக் கிராமத்திற்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய் அவன் கண்களில் உமிழ்ந்து அவன்மேல் கரங்களை வைத்து எதையாவது பார்க்கிறாயா என்று கேட்டார் 24 அவன் பார்த்து மனிதர்களை நடக்கிற மரங்களைப்போலப் பார்க்கிறேன் என்றான் 25 பின்பு அவர் மறுபடியும் அவன் கண்களின்மேல் கரங்களை வைத்து அவனைப் பார்க்கும்படி செய்தார் அப்பொழுது அவன் பார்வைப்பெற்று எல்லோரையும் தெளிவாகப் பார்த்தான் 26 பின்பு அவர் அவனைப் பார்த்து நீ கிராமத்திற்குள் செல்லாமலும் கிராமத்தில் இதை ஒருவருக்கும் சொல்லாமலும் இரு என்று சொல்லி அவனை வீட்டிற்கு அனுப்பிவிட்டார் 27 பின்பு இயேசுவும் அவருடைய சீடர்களும் புறப்பட்டு பிலிப்பு செசரியா நாட்டைச்சேர்ந்த கிராமங்களுக்குப் போனார்கள் வழியிலே அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து மக்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார் 28 அதற்கு அவர்கள் சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும் சிலர் எலியா என்றும் வேறுசிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள் 29 அப்பொழுது அவர் நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார் பேதுரு மறுமொழியாக நீர் கிறிஸ்து என்றான் 30 அப்பொழுது தம்மைக்குறித்து ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டார் 31 அவைகள் அல்லாமல் மனிதகுமாரன் பல பாடுகள்பட்டு மூப்பர்களாலும் பிரதான ஆசாரியர்களாலும் வேதபண்டிதர்களாலும் ஆகாதவன் என்று தள்ளப்பட்டு கொல்லப்பட்டு மூன்று நாட்களுக்குப்பின்பு உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்று அவர்களுக்குப் போதிக்கத்தொடங்கினார் 32 இந்த வார்த்தையை அவர் தெளிவாகச் சொன்னார் அப்பொழுது பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய் அவரைக் கடிந்துபேசத் தொடங்கினான் 33 அவர் திரும்பித் தம்முடைய சீடர்களைப் பார்த்து பின்பு பேதுருவைப் பார்த்து எனக்குப் பின்னாகப்போ சாத்தானே நீ தேவனுக்குரிவைகளைச் சிந்திக்காமல் மனிதனுக்குரியவைகளைச் சிந்திக்கிறாய் என்று சொல்லி அவனைக் கடிந்துபேசினார் 34 பின்பு அவர் மக்களையும் தம்முடைய சீடர்களையும் தம்மிடம் அழைத்து ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால் அவன் தன்னைத்தானே வெறுத்து தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றி வரவேண்டும் 35 தன் வாழ்வைக் காப்பாற்றிக்கொள்ள விரும்புகிறவன் அதை இழந்துபோவான் எனக்காகவும் நற்செய்திக்காகவும் தன் வாழ்வை இழந்துபோகிறவன் அதைக் காப்பாற்றிக்கொள்ளுவான் 36 மனிதன் உலகம் முழுவதையும் சம்பாதித்துக்கொண்டாலும் தன் ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன 37 மனிதன் தன் ஆத்துமாவிற்கு பதிலாக எதைக் கொடுப்பான் 38 எனவே விபசாரமும் பாவமும் உள்ள இந்தச் சந்ததியில் என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ அவனைக்குறித்து மனிதகுமாரனும் தமது பிதாவின் மகிமையில் பரிசுத்த தூதர்களோடு வரும்போது வெட்கப்படுவார் என்றார் Chapter 9அத்தியாயம்– 9 1 இயேசு அவர்களைப் பார்த்து இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் பலத்தோடு வருவதைப் பார்ப்பதற்குமுன்பு மரிப்பதில்லை என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் 2 ஆறு நாட்களுக்குப்பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து உயர்ந்த மலையின்மேல் அவர்களைத் தனியே கூட்டிக்கொண்டுபோய் அவர்களுக்கு முன்பாக மறுரூபமடைந்தார் 3 அவருடைய உடை உறைந்த மழையைப்போல பூமியிலே எந்தவொரு நபராலும் வெளுக்கக்கூடாத வெண்மையாகப் பிரகாசித்தது 4 அப்பொழுது மோசேயும் எலியாவும் இயேசுவோடு பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள் 5 அப்பொழுது பேதுரு இயேசுவைப் பார்த்து ரபீ நாம் இங்கே இருக்கிறது நல்லது உமக்கு ஒரு கூடாரமும் மோசேக்கு ஒரு கூடாரமும் எலியாவிற்கு ஒரு கூடாரமுமாக மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான் 6 அவர்கள் மிகவும் பயந்திருந்தபடியால் தான் பேசுகிறது என்ன என்று தெரியாமல் இப்படிச் சொன்னான் 7 அப்பொழுது ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது இவர் என்னுடைய நேசகுமாரன் இவர் சொல்வதைக் கேளுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது 8 உடனே அவர்கள் சுற்றிலும் பார்த்தபோது இயேசுவைத்தவிர வேறுயாரையும் பார்க்கவில்லை 9 அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது இயேசு அவர்களைப் பார்த்து மனிதகுமாரன் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கும்வரைக்கும் நீங்கள் பார்த்தவைகளை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார் 10 மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருப்பது என்னவென்று அவர்கள் ஒருவரோடொருவர் விசாரித்து அந்த வார்த்தையைத் தங்களுக்குள்ளே அடக்கிக்கொண்டு 11 எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்களே அது எப்படி என்று அவரிடம் கேட்டார்கள் 12 அவர் மறுமொழியாக எலியா முதலில் வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது உண்மைதான் அல்லாமலும் மனிதகுமாரன் பல பாடுகள்பட்டு அவமதிக்கப்படுவார் என்று அவரைக்குறித்து எழுதியிருக்கிறதே அது எப்படி என்றார் 13 ஆனாலும் எலியா வந்துவிட்டான் அவனைக்குறித்து எழுதியிருக்கிறபடி தங்களுக்கு விருப்பமானபடி அவனுக்குச் செய்தார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் 14 பின்பு அவர் சீடர்களிடம் வந்தபோது அவர்களைச் சுற்றி மக்கள்கூட்டம் நிற்கிறதையும் அவர்களோடு வேதபண்டிதர்கள் வாக்குவாதம்பண்ணுகிறதையும் பார்த்தார் 15 மக்கள்கூட்டத்தினர் அவரைப் பார்த்தவுடன் அதிக ஆச்சரியப்பட்டு ஓடிவந்து அவரை வாழ்த்தினார்கள் 16 அவர் வேதபண்டிதர்களைப் பார்த்து நீங்கள் இவர்களோடு எதைக்குறித்து வாக்குவாதம்பண்ணுகிறீர்கள் என்று கேட்டார் 17 அப்பொழுது மக்கள்கூட்டத்தில் ஒருவன் அவரைப் பார்த்து போதகரே ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன் 18 அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது அப்பொழுது அவன் நுரைதள்ளி பல்லைக்கடித்து சோர்ந்துபோகிறான் அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீடர்களிடம் கேட்டேன் அவர்களால் முடியவில்லை என்றான் 19 அவர் மறுமொழியாக விசுவாசமில்லாத சந்ததியே எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன் எதுவரைக்கும் உங்களிடம் பொறுமையாக இருப்பேன் அவனை என்னிடம் கொண்டுவாருங்கள் என்றார் 20 அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள் அவரைப் பார்த்தவுடனே அந்த ஆவி அவனை அலைக்கழித்தது அவன் தரையிலே விழுந்து நுரைதள்ளிப் புரண்டான் 21 இயேசு அவனுடைய தகப்பனைப் பார்த்து எவ்வளவு காலங்களாக இப்படி இருக்கிறது என்று கேட்டார் அதற்கு அவன் சிறுவயதிலிருந்தே இப்படி இருக்கிறது 22 இவனைக் கொல்லுவதற்காக அந்த ஆவி அடிக்கடி தீயிலும் தண்ணீரிலும் தள்ளியது நீர் ஏதாவது செய்யமுடியுமானால் எங்கள்மேல் மனமிறங்கி எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்றான் 23 இயேசு அவனைப் பார்த்து நீ விசுவாசித்தால் நடக்கும் விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் சாத்தியமாகும் என்றார் 24 உடனே பிள்ளையின் தகப்பன் விசுவாசிக்கிறேன் ஆண்டவரே என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடு சத்தமிட்டுச் சொன்னான் 25 அப்பொழுது மக்கள் கூட்டமாக ஓடிவருகிறதை இயேசு பார்த்து அந்த அசுத்தஆவியை நோக்கி ஊமையும் செவிடுமான ஆவியே இவனைவிட்டு வெளியே போ இனி இவனுக்குள் மீண்டும் போகக்கூடாது என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார் 26 அப்பொழுது அந்த ஆவி சத்தமிட்டு அவனை அதிகமாக அலைக்கழித்து வெளியேபோனது அவன் மரித்துப்போனான் என்று மக்கள் சொல்லத்தக்கதாக மரித்தவன்போல கிடந்தான் 27 இயேசு அவன் கையைப் பிடித்து அவனைத் தூக்கினார் உடனே அவன் எழுந்திருந்தான் 28 அவர் வீட்டிற்கு வந்தபொழுது அவருடைய சீடர்கள் அந்த ஆவியைத் துரத்திவிட எங்களால் ஏன் முடியவில்லை என்று அவரிடம் கேட்டார்கள் 29 அதற்கு அவர் இந்தவகைப் பிசாசை ஜெபத்தினாலும் உபவாசத்தினாலும்தவிர மற்ற எந்தவிதத்திலும் துரத்தமுடியாது என்றார் 30 பின்பு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு கலிலேயாவைக் கடந்துபோனார்கள் அது யாருக்கும் தெரியக்கூடாது என்று விரும்பினார் 31 ஏனென்றால் மனிதகுமாரன் மனிதர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றும் அவர்கள் அவரைக் கொன்றுபோடுவார்கள் என்றும் கொல்லப்பட்டு மூன்றாம்நாளிலே உயிரோடு எழுந்திருப்பார் என்றும் அவர் தம்முடைய சீடர்களுக்குப் போதகம்பண்ணிச் சொல்லியிருந்தார் 32 அவர்களோ அந்த வார்த்தையைப் புரிந்துகொள்ளவில்லை அதைக்குறித்து அவரிடத்தில் கேட்கவும் பயந்தார்கள் 33 அவர் கப்பர்நகூமுக்கு வந்து வீட்டிலே இருக்கும்போது அவர்களைப் பார்த்து நீங்கள் வழியிலே எதைக்குறித்து உங்களுக்குள் வாக்குவாதம்பண்ணினீர்கள் என்று கேட்டார் 34 அதற்கு அவர்கள் மவுனமாக இருந்தார்கள் ஏனென்றால் அவர்கள் தங்களுக்குள் எவன் பெரியவன் என்று வழியில் வாக்குவாதம்பண்ணினார்கள் 35 அப்பொழுது அவர் உட்கார்ந்து பன்னிரண்டுபேரையும் அழைத்து யாராவது முதல்வனாக இருக்கவிரும்பினால் அவன் எல்லோருக்கும் கீழானவனும் எல்லோருக்கும் ஊழியக்காரனுமாக இருக்கவேண்டும் என்று சொல்லி 36 ஒரு சிறுபிள்ளையை எடுத்து அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி அதை அணைத்துக்கொண்டு 37 இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான் என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அல்ல என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார் 38 அப்பொழுது யோவான் அவரைப் பார்த்து போதகரே நம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதைப் பார்த்தோம் அவன் நம்மைப் பின்பற்றாதவன் எனவே நாங்கள் அவனைத் தடுத்தோம் என்றான் 39 அதற்கு இயேசு அவனைத் தடுக்கவேண்டாம் என் நாமத்தினாலே அற்புதம் செய்கிறவன் எளிதாக என்னைக்குறித்துத் தீங்கு சொல்லமாட்டான் 40 நமக்கு விரோதமாக இல்லாதவன் நம்மோடு இருக்கிறான் 41 நீங்கள் கிறிஸ்துவை உடையவர்களாக இருக்கிறதினாலே என் நாமத்தினாலே உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை பெறாமல் போவதில்லை என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் 42 என்னிடம் விசுவாசமாக இருக்கிற இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ அவனுடைய கழுத்தில் மாவரைக்கும் கல்லைக் கட்டி கடலில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாக இருக்கும் 43 உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால் அதை வெட்டிப்போடு நீ இரண்டு கைகள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திற்குப் போவதைவிட ஊனமுள்ளவனாக ஜீவனுக்குள் போவது உனக்கு நலமாக இருக்கும் 44 அங்கே அவர்கள் புழு சாகாமலும், அக்கினி அணையாமலும் இருக்கும். 45 உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதை வெட்டிப்போடு நீ இரண்டு கால்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட கால்கள் நடக்கமுடியாதவனாக ஜீவனுக்குள் செல்வது உனக்கு நலமாக இருக்கும் 46 அங்கே அவர்கள் புழு சாகாமலும், அக்கினி அணையாமலும் இருக்கும். 47 உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதைப் பிடுங்கிப்போடு நீ இரண்டு கண்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணனாக தேவனுடைய ராஜ்யத்திற்குச் செல்வது உனக்கு நலமாக இருக்கும் 48 அங்கே அவர்கள் புழு சாகாமலும் அக்கினி அணையாமலும் இருக்கும் 49 எந்தப் பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல எந்த மனிதனும் அக்கினியினால் உப்பிடப்படுவான் 50 உப்பு நல்லதுதான் உப்பு சாரமில்லாமல் போனால் அதை எதினாலே சாரமுண்டாக்குவீர்கள் உங்களுக்குள்ளே உப்புடையவர்களாக இருங்கள் ஒருவரோடொருவர் சமாதானம் உள்ளவர்களாக இருங்கள் என்றார் Chapter 10அத்தியாயம்– 10 1 இயேசு அந்த இடத்திலிருந்து யோர்தான் நதிக்கு அக்கரையில் உள்ள தேசத்தின்வழியாக யூதேயாவின் எல்லைகளில் வந்தார் மக்கள் மீண்டும் அவரிடம் கூடிவந்தார்கள் அவர் தம்முடைய வழக்கத்தின்படியே மீண்டும் அவர்களுக்குப் போதகம்பண்ணினார் 2 அப்பொழுது பரிசேயர்கள் அவரைச் சோதிக்கவேண்டும் என்று அவரிடம் வந்து கணவன் தன் மனைவியை விவாகரத்து செய்வது நியாயமா என்று கேட்டார்கள் 3 அவர் மறுமொழியாக மோசே உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறது என்ன என்று கேட்டார் 4 அதற்கு அவர்கள் விவாகரத்திற்குரிய விடுதலைப்பத்திரத்தை எழுதிக்கொடுத்து அவளை விவாகரத்து செய்யலாம் என்று மோசே அனுமதி கொடுத்திருக்கிறார் என்றார்கள் 5 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக உங்களுடைய இருதயக் கடினத்தினாலே இந்தக் கட்டளையை உங்களுக்கு எழுதிக்கொடுத்தான் 6 ஆனாலும் ஆரம்பத்திலே மனிதர்களைப் படைத்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் 7 இதனால் கணவன் தன் தகப்பனையும் தாயையும்விட்டுத் தன் மனைவியோடு இணைந்திருப்பான் 8 அவர்கள் இருவர்களும் ஒரே மாம்சமாக இருப்பார்கள் இவ்விதமாக அவர்கள் இருவர்களாக இல்லாமல் ஒரே மாம்சமாக இருக்கிறார்கள் 9 எனவே தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கவேண்டும் என்றார் 10 பின்பு வீட்டில் இருக்கும்போது அவருடைய சீடர்கள் அந்தக் காரியத்தைக்குறித்து மீண்டும் அவரிடம் விசாரித்தார்கள் 11 அப்பொழுது அவர் யாராவது தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம்செய்தால் அவன் அவளுக்கு விரோதமாக விபசாரம் செய்கிறவனாக இருப்பான் 12 மனைவியும் தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டு வேறொருவனை திருமணம்செய்தால் விபசாரம் செய்கிறவளாக இருப்பாள் என்றார் 13 அப்பொழுது சிறு பிள்ளைகளை அவர் தொடுவதற்காக அவர்களை அவரிடம் கொண்டுவந்தார்கள் கொண்டுவந்தவர்களைச் சீடர்கள் அதட்டினார்கள் 14 இயேசு அதைப் பார்த்து கோபப்பட்டு சிறு பிள்ளைகள் என்னிடம் வருகிறதற்கு இடம்கொடுங்கள் அவர்களைத் தடைப்பண்ணவேண்டாம் தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது 15 யாராவது சிறு பிள்ளையைப்போல தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அவன் அதில் பிரவேசிப்பதில்லை என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி 16 அவர்களை அணைத்துக்கொண்டு அவர்கள்மேல் கரங்களை வைத்து அவர்களை ஆசீர்வதித்தார் 17 பின்பு அவர் புறப்பட்டுப் போய்க்கொண்டிருக்கும்போது ஒருவன் ஓடிவந்து அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு நல்ல போதகரே நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ள நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான் 18 அதற்கு இயேசு நீ என்னை நல்லவன் என்று சொல்வது எதினால் தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவனும் இல்லை 19 விபசாரம் செய்யாதே கொலை செய்யாதே திருடாதே பொய்ச்சாட்சி சொல்லாதே ஏமாற்றாதே உன் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணு என்கிற கட்டளைகளைப்பற்றி தெரிந்திருக்கிறாயே என்றார் 20 அதற்கு அவன் போதகரே இவைகளையெல்லாம் என் சிறிய வயதிலிருந்து கடைபிடித்து வருகிறேன் என்றான் 21 இயேசு அவனைப் பார்த்து அவனிடம் அன்புகூர்ந்து உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு நீ போய் உனக்கு உண்டானவைகளை எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடு அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும் பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்றார் 22 அவனுக்கு அதிக சொத்துக்கள் இருந்ததால் இந்த வார்த்தையைக் கேட்டு சோர்ந்து துக்கத்தோடு போய்விட்டான் 23 அப்பொழுது இயேசு சுற்றிலும்பார்த்து தம்முடைய சீடர்களைப் பார்த்து செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது என்றார் 24 சீடர்கள் அவருடைய வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள் இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து பிள்ளைகளே செல்வத்தின்மேல் நம்பிக்கையாக இருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது 25 செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்றார் 26 அவர்கள் அதிகமாக ஆச்சரியப்பட்டு அப்படியானால் யார் இரட்சிக்கப்படமுடியும் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள் 27 இயேசு அவர்களைப் பார்த்து மனிதர்களால் இது முடியாது தேவனால் இது முடியும் தேவனாலே எல்லாம் முடியும் என்றார் 28 அப்பொழுது பேதுரு அவரைப் பார்த்து இதோ நாங்கள் எல்லாவற்றையும்விட்டு உம்மைப் பின்பற்றிவந்தோமே என்று சொல்லத்தொடங்கினான் 29 அதற்கு இயேசு மறுமொழியாக எனக்காகவும் நற்செய்திப் பணிக்காகவும் வீட்டையாவது சகோதரர்களையாவது சகோதரிகளையாவது தகப்பனையாவது தாயையாவது மனைவியையாவது குழந்தைகளையாவது நிலங்களையாவது விட்டு வந்தவன் எவனும் 30 இப்பொழுது இம்மையிலே துன்பங்களோடு நூறுமடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாய்களையும் பிள்ளைகளையும் நிலங்களையும் மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் 31 ஆனாலும் முந்தினவர்கள் அநேகர் பிந்தினவர்களாகவும் பிந்தினவர்கள் அநேகர் முந்தினவர்களாகவும் இருப்பார்கள் என்றார் 32 பின்பு அவர்கள் எருசலேமுக்குப் பயணமாகப் போகும்பொழுது இயேசு அவர்களுக்கு முன்பே நடந்துபோனார் அவர்கள் ஆச்சரியப்பட்டு அவருக்குப் பின்னால் பயத்தோடு போனார்கள் அப்பொழுது அவர் பன்னிரண்டு சீடர்களையும் அழைத்து தமக்கு நடக்கப்போகிறவைகளை அவர்களுக்கு மீண்டும் சொல்லத்தொடங்கினார் 33 இதோ எருசலேமுக்குப் போகிறோம் அங்கே மனிதகுமாரன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் வேதபண்டிதரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார் அவர்கள் அவரை மரணதண்டனைக்குள்ளாகத் தீர்த்து யூதரல்லாதோர்களிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள் 34 அவர்கள் அவரைப் பரிகாசம்பண்ணி அவரை சாட்டையினால் அடித்து அவர்மேல் துப்பி அவரைக் கொலைசெய்வார்கள் ஆனாலும் மூன்றாம்நாளிலே அவர் உயிரோடு எழுந்திருப்பார் என்றார் 35 அப்பொழுது செபெதேயுவின் குமாரர்களாகிய யாக்கோபும் யோவானும் அவரிடம் வந்து போதகரே நாங்கள் எதைக்கேட்டாலும் அதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டும் என்று விரும்புகிறோம் என்றார்கள் 36 அவர் அவர்களைப் பார்த்து நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார் 37 அதற்கு அவர்கள் உமது மகிமையிலே எங்களில் ஒருவன் உமது வலதுபக்கத்திலும் ஒருவன் உமது இடதுபக்கத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள்செய்யவேண்டும் என்றார்கள் 38 இயேசு அவர்களைப் பார்த்து நீங்கள் கேட்பது என்ன என்று உங்களுக்கே தெரியவில்லை நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும் நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் முடியுமா என்றார் 39 அதற்கு அவர்கள் முடியும் என்றார்கள் இயேசு அவர்களைப் பார்த்து நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள் நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள் 40 ஆனாலும் என் வலதுபக்கத்திலும் என் இடதுபக்கத்திலும் உட்கார்ந்திருக்கும்படி யாருக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களைத்தவிர மற்றவர்களுக்கு அதை அருளுவது என் காரியமல்ல என்றார் 41 மற்ற பத்துப்பேரும் அதைக்கேட்டு யாக்கோபின்மேலும் யோவானின் மேலும் எரிச்சலானார்கள் 42 அப்பொழுது இயேசு அவர்களை அருகில் வரச்சொல்லி யூதரல்லாதவர்களுக்கு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்கள் அவர்களை ஆணவத்தோடு ஆளுகிறார்கள் என்றும் அவர்களில் பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாக அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் 43 உங்களுக்குள்ளே அப்படி இருக்கக்கூடாது உங்களில் யாராவது பெரியவனாக இருக்கவிரும்பினால் அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாக இருக்கவேண்டும் 44 உங்களில் யாராவது முதன்மையானவனாக இருக்கவிரும்பினால் அவன் எல்லோருக்கும் ஊழியக்காரனாக இருக்கவேண்டும் 45 அப்படியே மனிதகுமாரனும் மற்றவர்களிடம் ஊழியம் பெற வராமல் ஊழியம் செய்யவும் அநேகரை மீட்கத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார் 46 பின்பு அவர்கள் எரிகோவிற்கு வந்தார்கள் அவரும் அவருடைய சீடர்களும் மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டுப் புறப்படுகிறபோது திமேயுவின் பார்வையற்ற மகனாகிய பர்திமேயு வழியருகில் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான் 47 அவன் நசரேயனாகிய இயேசு வருகிறார் என்று கேள்விப்பட்டு இயேசுவே தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் என்று சத்தமிட்டு கூப்பிடத் தொடங்கினான் 48 அவனை அமைதியாக இருக்கச்சொல்லி மக்கள் அவனை அதட்டினார்கள் அவனோ தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் என்று முன்பைவிட அதிகமாக சத்தமிட்டு கூப்பிட்டான் 49 இயேசு நின்று அவனை அழைத்துவரச் சொன்னார் அவர்கள் அந்தப் பார்வையற்றவனை அழைத்து திடன்கொள் எழுந்திரு உன்னை அழைக்கிறார் என்றார்கள் 50 உடனே அவன் தன் மேலாடையை கழற்றிவிட்டு எழுந்து இயேசுவிடம் வந்தான் 51 இயேசு அவனைப் பார்த்து நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்று விரும்புகிறாய் என்றார் அதற்கு அந்தப் பார்வையற்றவன் ஆண்டவரே நான் பார்வைபெறவேண்டும் என்றான் 52 இயேசு அவனைப் பார்த்து நீ போகலாம் உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார் உடனே அவன் பார்வைபெற்று வழியிலே இயேசுவைப் பின்பற்றி அவர்பின்னே சென்றான் Chapter 11அத்தியாயம்– 11 1 இயேசுவும் அவருடைய சீடர்களும் எருசலேமுக்கு அருகில் வந்து ஒலிவமலைக்கு அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்குச் சென்றபோது அவர் தம்முடைய சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து 2 உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்திற்குப் போங்கள் அங்கு சென்றவுடன் மனிதர்கள் ஒருவனும் ஒருநாளும் ஏறாத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருப்பதைப் பார்ப்பீர்கள் அதை அவிழ்த்துக்கொண்டுவாருங்கள் 3 ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று யாராவது உங்களிடம் கேட்டால் இது ஆண்டவருக்கு வேண்டும் என்று சொல்லுங்கள் உடனே அதை இந்த இடத்திற்கு அனுப்பிவிடுவான் என்று சொல்லி அவர்களை அனுப்பினார் 4 அவர்கள்போய் வெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைப் பார்த்து அதை அவிழ்த்தார்கள் 5 அப்பொழுது அங்கே நின்றவர்களில் சிலர் நீங்கள் இந்தக் குட்டியை எதற்கு அவிழ்க்கிறீர்கள் என்றுக் கேட்டார்கள் 6 இயேசு சொன்னபடியே அவர்களுக்குப் பதில் சொன்னார்கள் அப்பொழுது அவர்களைப் போகவிட்டார்கள் 7 அவர்கள் அந்தக் குட்டியை இயேசுவிடம் கொண்டுவந்து அதன்மேல் தங்களுடைய ஆடைகளைப் போட்டார்கள் அவர் அதின்மேல் ஏறிப்போனார் 8 அநேகர் தங்களுடைய ஆடைகளை வழியிலே விரித்தார்கள் வேறுசிலர் மரக்கிளைகளை வெட்டி சாலைகளில் போட்டார்கள் 9 முன்னே நடப்பவர்களும் பின்னே நடப்பவர்களும் ஓசன்னா கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் போற்றப்படத்தக்கவர் 10 கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள் 11 அப்பொழுது இயேசு எருசலேமுக்கு வந்து தேவாலயத்திற்குச் சென்று எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்து மாலைநேரத்தில் பன்னிரண்டு சீடர்களுடன் பெத்தானியாவிற்குப் போனார் 12 அடுத்தநாளில் அவர்கள் பெத்தானியாவிலிருந்து திரும்பிவரும்போது அவருக்குப் பசியுண்டானது 13 அப்பொழுது இலைகள் உள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலேப் பார்த்து அதில் அத்திப்பழம் கிடைக்குமா என்று பார்க்க வந்தார் அது அத்திப்பழக் காலமாக இல்லாததினால் அவர் மரத்தின் அருகில் வந்தபோது அதில் இலைகளைத்தவிர வேறொன்றையும் பார்க்கவில்லை 14 அப்பொழுது இயேசு அதைப் பார்த்து இனி எப்போதும் ஒருவனும் உன்னிடமிருந்து கனியைப் புசிக்கமாட்டான் என்றார் அதை அவருடைய சீடர்கள் கேட்டார்கள் 15 அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள் இயேசு தேவாலயத்திற்குச் சென்று ஆலயத்தில் விற்கிறவர்களையும் வாங்குகிறவர்களையும் துரத்திவிட்டு காசுக்காரர்களுடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களுடைய இருக்கைகளையும் கவிழ்த்து 16 ஒருவனும் தேவாலயத்தின்வழியாக எந்தவொரு பொருளையும் கொண்டுபோகவிடாமல் 17 என்னுடைய வீடு எல்லா மக்களுக்கும் ஜெபவீடு எனப்படும் என்று எழுதியிருக்கவில்லையா நீங்களோ அதைக் கள்ளர்களின் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார் 18 அதை வேதபண்டிதர்களும் பிரதான ஆசாரியர்களும் கேட்டு அவரைக் கொலைசெய்ய வழிதேடினார்கள் ஆனாலும் மக்களெல்லோரும் அவருடைய உபதேசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டதினாலே அவருக்கு பயந்திருந்தார்கள் 19 மாலைநேரத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் நகரத்திலிருந்து புறப்பட்டு வெளியே போனார்கள் 20 அடுத்தநாள் காலையிலே அவர்கள் அந்தவழியாக போகும்போது அந்த அத்திமரம் வேரோடு பட்டுப்போயிருந்ததைப் பார்த்தார்கள் 21 பேதுரு நினைத்துப்பார்த்து இயேசுவிடம் ரபீ இதோ நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போனது என்றான் 22 இயேசு அவர்களைப் பார்த்து தேவனிடம் விசுவாசம் உள்ளவர்களாக இருங்கள் 23 யாராவது இந்த மலையைப் பார்த்து நீ பெயர்ந்து கடலில் தள்ளுண்டுபோ என்று சொல்லி தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால் அவன் சொன்னபடியே நடக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் 24 எனவே நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்ளுவீர்களோ அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள் அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன் 25 நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது ஒருவன்மேல் உங்களுக்கு ஏதாவது குறை உண்டாயிருக்கும் என்றால் பரலோகத்தில் இருக்கிற உங்களுடைய பிதா உங்களுடைய தவறுகளை உங்களுக்கு மன்னிப்பதற்காக அந்தக் குறையை நீங்கள் அவனுக்கு மன்னியுங்கள் 26 நீங்கள் மன்னிக்காமலிருந்தால், பரலோகத்தில் இருக்கிற உங்களுடைய பிதாவும் உங்களுடைய தவறுகளை மன்னிக்கமாட்டார் என்றார். 27 அவர்கள் மீண்டும் எருசலேமுக்கு வந்தார்கள் அவர் தேவாலயத்திலே உலாவிக்கொண்டிருக்கும்போது பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மூப்பர்களும் அவரிடம் வந்து 28 நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர் இவைகளைச் செய்கிறதற்கு அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார் என்று கேட்டார்கள் 29 இயேசு மறுமொழியாக நானும் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறேன் நீங்கள் எனக்கு பதில் சொல்லுங்கள் அப்பொழுது நானும் எந்த அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லுவேன் 30 யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டானதா அல்லது மனிதர்களால் உண்டானாதா என்று எனக்கு பதில் சொல்லுங்கள் என்றார் 31 அதற்கு அவர்கள் தேவனால் உண்டானது என்று சொன்னால் பின்பு ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று கேட்பார் 32 எல்லோரும் யோவானை உண்மையான தீர்க்கதரிசி என்று நினைக்கிறார்கள் எனவே மக்களுக்குப் பயப்பட்டதினால் மனிதர்களால் உண்டானது என்று சொல்லமுடியாமல் தங்களுக்குள் ஆலோசனைபண்ணி 33 இயேசுவிற்கு மறுமொழியாக எங்களுக்குத் தெரியாது என்றார்கள் அப்பொழுது இயேசு நானும் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லமாட்டேன் என்றார் Chapter 12அத்தியாயம்– 12 1 பின்பு இயேசு உவமைகளாக அவர்களுக்குச் சொன்னது ஒரு மனிதன் ஒரு திராட்சைத்தோட்டத்தை உண்டாக்கி அதைச் சுற்றிலும் வேலி அடைத்து திராட்சை ஆலையை உண்டுபண்ணி கோபுரத்தையும் கட்டி தோட்டக்காரர்களுக்கு அதைக் குத்தகைக்கு விட்டு வேறு தேசத்திற்குச் சென்றிருந்தான் 2 தோட்டக்காரர்களிடம் திராட்சைத்தோட்டத்துக் கனிகளில் தன் பங்கை வாங்கிக்கொண்டுவரும்படி பருவகாலத்திலே அவர்களிடம் ஒரு வேலைக்காரனை அனுப்பினான் 3 அவர்கள் அவனைப் பிடித்து அடித்து வெறுமையாக அனுப்பிவிட்டார்கள் 4 பின்பு வேறொரு வேலைக்காரனை அவர்களிடம் அனுப்பினான் அவர்கள் அவனைக் கல்லால் அடித்து தலையைக் காயப்படுத்தி அவமானப்படுத்தி அனுப்பிவிட்டார்கள் 5 மீண்டும் வேறொருவனை அனுப்பினான் அவனை அவர்கள் கொலைசெய்தார்கள் வேறு அநேகரையும் அனுப்பினான் அவர்களில் சிலரை அடித்து சிலரைக் கொன்றுபோட்டார்கள் 6 அவனுக்குப் பிரியமான ஒரே குமாரன் இருந்தான் என் குமாரனை மதிப்பார்கள் என்று சொல்லி அவனையும் கடைசியிலே அவர்களிடம் அனுப்பினான் 7 தோட்டக்காரர்களோ இவனே சொத்திற்கு வாரிசு இவனைக் கொலைசெய்வோம் வாருங்கள் அப்பொழுது சொத்து நம்முடையதாகும் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு 8 அவனைப் பிடித்துக் கொலைசெய்து திராட்சைத்தோட்டத்திற்குப் வெளியே எறிந்துவிட்டார்கள் 9 அப்படியிருக்க திராட்சைத்தோட்டத்திற்கு எஜமான் என்ன செய்வான் அவன் வந்து அந்தத் தோட்டக்காரர்களைக் கொன்று திராட்சைத்தோட்டத்தை மற்றவர்களுக்கு ஒப்புக்கொடுப்பான் அல்லவா 10 வீடுகட்டுகிறவர்கள் வேண்டாம் என்று ஒதுக்கிய கல்லே மூலைக்குத் தலைக்கல்லானது 11 அது கர்த்தராலே நடந்தது அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று எழுதியிருக்கிற வாக்கியத்தை நீங்கள் வாசிக்கவில்லையா என்றார் 12 இந்த உவமையைத் தங்களைக்குறித்துச் சொன்னார் என்று அவர்கள் அறிந்து அவரைக் கைது செய்ய முயற்சிசெய்தார்கள் ஆனாலும் மக்களுக்குப் பயந்து அவரைவிட்டுப் போய்விட்டார்கள் 13 அவர்கள் இயேசுவை அவரது பேச்சிலே சிக்கவைக்கும்படி பரிசேயர்களிலும் ஏரோதியர்களிலும் சிலரை அவரிடம் அனுப்பினார்கள் 14 அவர்கள் வந்து போதகரே நீர் சத்தியமுள்ளவர் என்றும் எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லை என்றும் அறிந்திருக்கிறோம் நீர் முகதாட்சிணியம் இல்லாதவராக தேவனுடைய வழிகளைச் சத்தியமாகப் போதிக்கிறீர் இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ இல்லையோ நாம் வரி கொடுக்கலாமா வேண்டாமா என்று கேட்டார்கள் 15 அவர்களுடைய தந்திரத்தை அவர் அறிந்து நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள் நான் பார்ப்பதற்கு ஒரு பணத்தை என்னிடம் கொண்டுவாருங்கள் என்றார் 16 அவர்கள் அதைக் கொண்டுவந்தார்கள் அப்பொழுது அவர் இந்தப் படமும் மேலே உள்ள எழுத்தும் யாருடையது என்று கேட்டார் ரோம அரசாங்கத்திற்கு உரியது என்றார்கள் 17 அதற்கு இயேசு அரசாங்கத்திற்குரியதை அரசாங்கத்திற்கும் தேவனுக்குரியதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார் அவர்கள் அவரைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள் 18 உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர்கள் அவரிடம் வந்து 19 போதகரே ஒருவனுடைய சகோதரன் வாரிசு இல்லாமல் தன் மனைவியைவிட்டு மரித்துப்போனால் அவனுடைய சகோதரன் அவன் மனைவியை திருமணம்செய்து தன் சகோதரனுக்காக வாரிசை உண்டாக்கவேண்டும் என்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே 20 இப்படியிருக்க ஏழு சகோதரர்கள் இருந்தார்கள் மூத்தவன் ஒரு பெண்ணைத் திருமணம்செய்து குழந்தை இல்லாமல் மரித்துப்போனான் 21 இரண்டாம் சகோதரன் அவளை திருமணம்செய்து அவனும் குழந்தை இல்லாமல் மரித்துப்போனான் மூன்றாம் சகோதரனுக்கும் அப்படியே நடந்தது 22 ஏழுபேரும் அவளைத் திருமணம்செய்து குழந்தை இல்லாமல் மரித்துப்போனார்கள் எல்லோருக்கும்பின்பு அந்தப் பெண்ணும் மரித்துப்போனாள் 23 எனவே உயிர்த்தெழுதலில் அவர்கள் எழுந்திருக்கும்போது அவர்களில் யாருக்கு அவள் மனைவியாக இருப்பாள் ஏழுபேரும் அவளைத் திருமணம் செய்திருந்தார்களே என்று கேட்டார்கள் 24 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக நீங்கள் வேதவாக்கியங்களையும் தேவனுடைய வல்லமையையும் அறியாததினாலே தவறான எண்ணங்கொள்ளுகிறீர்கள் 25 மரித்தவர்கள் உயிரோடு எழுந்திருக்கும்போது திருமணம் செய்வதும் திருமணம்செய்து கொடுப்பதும் இல்லை அவர்கள் பரலோகத்தில் தேவதூதர்களைப்போல இருப்பார்கள் 26 மரித்தவர்கள் உயிரோடு எழுந்திருப்பதைப்பற்றி நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாக இருக்கிறேன் என்று தேவன் முள்செடியைக்குறித்துச் சொல்லிய இடத்தில் மோசேயின் புத்தகத்தில் அவனுக்குச் சொன்னதை நீங்கள் வாசிக்கவில்லையா 27 அவர் மரித்தவர்களுக்கு தேவனாக இல்லாமல் ஜீவனுள்ளவர்களுக்கு தேவனாக இருக்கிறார் அதை நீங்கள் தவறாக புரிந்துகொள்ளுகிறீர்கள் என்றார் 28 வேதபண்டிதர்களில் ஒருவன் அவர்கள் வாக்குவாதம்பண்ணுகிறதைக்கேட்டு அவர்களுக்கு நன்றாக பதில் சொன்னார் என்று அறிந்து அவரிடம் வந்து கட்டளைகளிலெல்லாம் பிரதான கட்டளை எது என்று கேட்டான் 29 இயேசு அவனுக்கு மறுமொழியாக கட்டளைகளிலெல்லாம் பிரதான கட்டளை எதுவென்றால் இஸ்ரவேலே கேள் நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் 30 உன் தேவனாகிய கர்த்தரிடம் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் உன் முழு பலத்தோடும் அன்புசெலுத்துவாயாக என்பதே பிரதான கட்டளை 31 இதற்கு ஒப்பாக இருக்கிற இரண்டாம் கட்டளை என்னவென்றால் உன்னிடத்தில் நீ அன்புசெலுத்துவதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்பதே இவைகளைவிட பெரிய கட்டளை வேறொன்றும் இல்லை என்றார் 32 அதற்கு வேதபண்டிதன் சரிதான் போதகரே நீர் சொன்னது சத்தியம் ஒரே தேவன் உண்டு அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை 33 முழு இருதயத்தோடும் முழு மனதோடும் முழு ஆத்துமாவோடும் முழுப் பலத்தோடும் அவரிடத்தில் அன்பு செலுத்துகிறதும் தன்னிடத்தில் அன்பு செலுத்துகிறதுபோல மற்றவனிடத்தில் அன்பு செலுத்துகிறதுதான் தகனபலிகளையும் மற்ற எல்லா பலிகளையும்விட முக்கியமாக இருக்கிறது என்றான் 34 அவன் ஞானமாக பதில் சொன்னதை இயேசு பார்த்து நீ தேவனுடைய ராஜ்யத்திற்குத் தூரமானவன் இல்லை என்றார் அதன்பின்பு ஒருவரும் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கத் துணியவில்லை 35 இயேசு தேவாலயத்தில் உபதேசம்பண்ணும்போது அவர் கிறிஸ்து தாவீதின் குமாரன் என்று வேதபண்டிதர்கள் எப்படிச் சொல்லுகிறார்கள் 36 நான் உம்முடைய எதிரிகளை உம்முடைய கால்களுக்குக் கீழே போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடு சொன்னார் என்று தாவீது பரிசுத்த ஆவியானவராலே சொல்லியிருக்கிறானே 37 தாவீதே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கும்போது அவனுக்கு அவர் குமாரனாக இருப்பது எப்படி என்றார் அநேக மக்கள் அவருடைய உபதேசத்தை விருப்பத்தோடு கேட்டார்கள் 38 இயேசு உபதேசம்பண்ணும்போது அவர்களைப் பார்த்து வேதபண்டிதர்கள் நீண்ட அங்கிகளை அணிந்துகொண்டு திரியவும் சந்தைவெளிகளில் வாழ்த்துக்களை விரும்பியும் 39 ஜெப ஆலயங்களில் முதன்மையான இருக்கைகளில் உட்காரவும் விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி 40 விதவைகளின் வீடுகளையும் சொத்துக்களையும் ஏமாற்றி பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபண்டிதர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள் அவர்கள் அதிகத் தண்டனை அடைவார்கள் என்றார் 41 இயேசு காணிக்கைப்பெட்டிக்கு எதிராக உட்கார்ந்து மக்கள் காணிக்கைப் பெட்டியில் பணம் போடுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார் செல்வந்தர்கள் அநேகர் அதிகமாகப் போட்டார்கள் 42 ஏழையான ஒரு விதவையும் வந்து ஒரு நாணய மதிப்பிற்கு சரியான இரண்டு காசுகளைப் போட்டாள் 43 அப்பொழுது அவர் தம்முடைய சீடர்களை அழைத்து காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்ற எல்லோரையும்விட இந்த ஏழை விதவை அதிகமாகப் போட்டாள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் 44 அவர்களெல்லோரும் தங்களுடைய பரிபூரணத்திலிருந்து எடுத்துப்போட்டார்கள் இவளோ தன் வறுமையிலிருந்து தான் வாழ்வதற்காக வைத்திருந்த எல்லாவற்றையும் போட்டுவிட்டாள் என்றார் Chapter 13அத்தியாயம்– 13 1 இயேசு தேவாலயத்தைவிட்டுப் புறப்படும்போது அவருடைய சீடர்களில் ஒருவன் அவரைப் பார்த்து போதகரே இதோ இந்தக் கற்கள் எப்படிப்பட்டது இந்தக் கட்டிடங்கள் எப்படிப்பட்டது பாரும் என்றான் 2 இயேசு அவனுக்கு மறுமொழியாக இந்தப் பெரிய கட்டிடங்களைக் பார்க்கிறாயே ஒரு கல்லின்மேல் ஒரு கல் இல்லாதபடி எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்றார் 3 பின்பு அவர் தேவாலயத்திற்கு எதிராக ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது பேதுருவும் யாக்கோபும் யோவானும் அந்திரேயாவும் அவரிடம் தனிமையில் வந்து 4 இவைகள் எப்பொழுது நடக்கும் இவைகளெல்லாம் நிறைவேறும் காலங்களுக்கு அடையாளம் என்ன எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள் 5 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக ஒருவனும் உங்களை ஏமாற்றாதபடி எச்சரிக்கையாக இருங்கள் 6 ஏனென்றால் அநேகர் வந்து என் நாமத்தைச் சொல்லி நானே கிறிஸ்து என்று அநேகரை ஏமாற்றுவார்கள் 7 யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படும்போது கலங்காமல் இருங்கள் இவைகள் நடக்கவேண்டியவைகள் ஆனாலும் முடிவு உடனே வராது 8 மக்களுக்கு எதிராக மக்களும் ராஜ்யத்திற்கு எதிராக ராஜ்யமும் எழும்பும் பூமி அதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும் பஞ்சங்களும் கலகங்களும் உண்டாகும் இவைகள் வேதனைகளுக்கு ஆரம்பம் 9 நீங்களோ எச்சரிக்கையாக இருங்கள் ஏனென்றால் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்கள் நீங்கள் ஜெப ஆலயங்களில் அடிக்கப்படுவீர்கள் என்னிமித்தம் தேசாதிபதிகளுக்கும் ராஜாக்களுக்கும் சாட்சியாக அவர்களுக்கு முன்பாக நிறுத்தப்படுவீர்கள் 10 எல்லா தேசத்தின் மக்களுக்கும் நற்செய்தி முதலில் பிரசங்கிக்கப்படவேண்டும் 11 அவர்கள் உங்களைக் கொண்டுபோய் ஒப்புக்கொடுக்கும்போது நீங்கள் என்ன பேசவேண்டும் என்று கவலைப்படாமலும் சிந்திக்காமலும் இருங்கள் அந்த நேரத்திலே உங்களுக்குக் கொடுக்கப்படுகிற வார்த்தைகளையே பேசுங்கள் ஏனென்றால் பேசுகிறவர்கள் நீங்கள் இல்லை பரிசுத்த ஆவியானவரே பேசுகிறவர் 12 அன்றியும் சகோதரன் சகோதரனையும் தகப்பன் பிள்ளையையும் மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள் பெற்றோருக்கு எதிராகப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்ய ஒப்புக்கொடுப்பார்கள் 13 என் நாமத்தினால் எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள் கடைசிவரைக்கும் நிலைத்து நிற்பவனே இரட்சிக்கப்படுவான் 14 மேலும் பாழாக்குகிற அருவருப்பைக்குறித்து தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே வாசிக்கிறவன் சிந்திக்கவேண்டும் அது நிற்கக்கூடாத இடத்திலே நிற்கிறதை நீங்கள் பார்க்கும்போது யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகட்டும் 15 வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிற்குள் இறங்காமலும் தன் வீட்டில் எதையாவது எடுத்துக்கொள்ள உள்ளே போகாமலும் இருக்கவேண்டும் 16 வயலில் வேலைசெய்கிறவன் மாற்று உடையை எடுப்பதற்கு வீட்டிற்கு திரும்பிப் போகாமல் இருக்கவேண்டும் 17 அந்த நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ 18 இவைகள் மழைகாலத்திலே நடக்காதபடி வேண்டிக்கொள்ளுங்கள் 19 ஏனென்றால் தேவன் உலகத்தை படைத்தது முதல் இதுவரைக்கும் நடக்காததும் இனிமேலும் நடக்காததுமான உபத்திரவம் அந்த நாட்களில் உண்டாயிருக்கும் 20 கர்த்தர் அந்த நாட்களைக் குறைத்திராவிட்டால் ஒருவன்கூட தப்பிப்போவதில்லை தாம் தெரிந்துகொண்டவர்களினிமித்தம் அவர் அந்த நாட்களைக் குறைத்திருக்கிறார் 21 அப்பொழுது இதோ கிறிஸ்து இங்கே இருக்கிறார் அதோ அங்கே இருக்கிறார் என்று யாராவது சொன்னால் நம்பவேண்டாம் 22 ஏனென்றால் கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி முடிந்தவரை தெரிந்துகொள்ளப்பட்டவர்களை ஏமாற்ற அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள் 23 நீங்களோ எச்சரிக்கையாக இருங்கள் இதோ எல்லாவற்றையும் முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன் 24 அந்த நாட்களிலே அந்த உபத்திரவத்திற்குப்பின்பு சூரியன் இருள் அடையும் சந்திரன் ஒளியைக் கொடுக்காது 25 வானத்தின் நட்சத்திரங்கள் விழும் வானங்களில் உள்ள அதிகார வல்லமைகள் அசைக்கப்படும் 26 அப்பொழுது மனிதகுமாரன் அதிக வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைப் பார்ப்பார்கள் 27 அப்பொழுது அவர் தம்முடைய தூதரை அனுப்பி தாம் தெரிந்துகொண்டவர்களை பூமியின் கடைசிமுனையிலிருந்து வானத்தின் கடைசிமுனை வரைக்கும் உள்ள நான்கு திசைகளிலும் இருந்து கூட்டிச் சேர்ப்பார் 28 அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள் அதிலே இளங்கிளைத்தோன்றி துளிர்விடும்போது வசந்தகாலம் நெருங்கிவிட்டது என்று அறிவீர்கள் 29 அப்படியே இவைகள் நடக்கிறதை நீங்கள் பார்க்கும்போது அவர் அருகில் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள் 30 இவைகளெல்லாம் நடக்கும்முன்பு இந்த சந்ததி ஒழிந்துபோகாது என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் 31 வானமும் பூமியும் ஒழிந்துபோகும் ஆனால் என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை 32 அந்த நாளும் அந்த நேரமும் பிதா ஒருவர்தவிர வேறு ஒருவனுக்கும் தெரியாது பரலோகத்தில் உள்ள தூதர்களுக்கும் தெரியாது குமாரனுக்கும் தெரியாது 33 அந்தகாலத்தைப்பற்றி உங்களுக்குத் தெரியாததினால் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள் விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள் 34 ஒரு மனிதன் தன் வீட்டைவிட்டு தூரதேசத்திற்கு பயணம் செய்யத் தீர்மானிக்கும்போது தன் வேலைக்காரர்களுக்கு பொறுப்பைக் கொடுத்து அவனவனுக்குத் தன்தன் வேலைகளையும் நியமித்து விழித்திருக்கும்படி காவல்காக்கிறவனுக்குச் சொல்லுவான் 35 அப்படியே நீங்களும் விழித்திருங்கள் ஏனென்றால் வீட்டின் முதலாளி மாலைநேரத்திலோ நடுராத்திரியிலோ சேவல் கூவும் நேரத்திலோ காலையிலோ எப்பொழுது வருவான் என்று உங்களுக்குத் தெரியாது 36 நீங்கள் நினைக்காத நேரத்தில் அவன் வந்து நீங்கள் தூங்குகிறதைக் கண்டுபிடிக்காதபடி விழித்திருங்கள் 37 நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லோருக்கும் சொல்லுகிறேன் விழித்திருங்கள் என்றார் Chapter 14அத்தியாயம்– 14 1 இரண்டு நாட்களுக்குப்பின்பு புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுகிற பஸ்காபண்டிகை வந்தது அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் அவரைத் தந்திரமாகப் பிடித்துக் கொலைசெய்யும்படி வழிதேடினார்கள் 2 ஆனாலும் மக்களுக்குள்ளே கலவரம் உண்டாகாதபடி பண்டிகையிலே அப்படிச் செய்யக்கூடாது என்றார்கள் 3 அவர் பெத்தானியாவில் குஷ்டரோகியாக இருந்த சீமோன் வீட்டிலே சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது ஒரு பெண் விலையுயர்ந்த நளதம் என்னும் சுத்தமான தைலத்தை ஒரு வெள்ளைக்கல் ஜாடியில் கொண்டுவந்து அதை உடைத்து அந்தத் தைலத்தை அவர் தலையின்மேல் ஊற்றினாள் 4 அப்பொழுது சிலர் தங்களுக்குள்ளே கோபப்பட்டு இந்தத் தைலத்தை இப்படி வீணாகச் செலவழிப்பது ஏன் 5 இதை முந்நூறு வெள்ளிக்காசுகளுக்கு அதிகமான விலைக்கு விற்று ஏழைகளுக்குக் கொடுக்கலாமே என்று சொல்லி அவளைப்பற்றி முறுமுறுத்தார்கள் 6 இயேசு அவர்களைப் பார்த்து அவளை விட்டுவிடுங்கள் ஏன் அவளைத் தொந்தரவு பண்ணுகிறீர்கள் என்னிடம் நற்கிரியையைச் செய்திருக்கிறாள் 7 ஏழைகள் எப்பொழுதும் உங்களிடம் இருக்கிறார்கள் உங்களுக்கு விருப்பம் உண்டாகும்போதெல்லாம் அவர்களுக்கு நன்மை செய்யலாம் நானோ எப்பொழுதும் உங்களிடம் இருக்கமாட்டேன் 8 இவள் தன்னால் முடிந்ததைச் செய்தாள் நான் அடக்கம்பண்ணப்படுவதற்கு அடையாளமாக என் சரீரத்தில் தைலம் பூச முந்திக்கொண்டாள் 9 இந்த நற்செய்தி உலகத்தில் எங்கெல்லாம் பிரசங்கிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் 10 அப்பொழுது பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் அவரைப் பிரதான ஆசாரியர்களுக்குக் காட்டிக்கொடுப்பதற்காக அவர்களிடம் போனான் 11 அவர்கள் அதைக்கேட்டு சந்தோஷப்பட்டு அவனுக்குப் பணம் கொடுக்கிறோம் என்று வாக்குக்கொடுத்தார்கள் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு ஏற்ற நேரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான் 12 பஸ்காவைப் பலியிடும் நாளாகிய புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுகிற முதலாம் நாளில் அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து நீர் பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்குபோய் ஆயத்தம்பண்ண விருப்பமாக இருக்கிறீர் என்று கேட்டார்கள் 13 அவர் தம்முடைய சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து நீங்கள் நகரத்திற்குள்ளே போங்கள் அங்கே தண்ணீர் குடம் சுமந்துகொண்டு வருகிற ஒரு மனிதன் உங்களுக்கு எதிராக வருவான் அவன் பின்னே போங்கள் 14 அவன் எந்த வீட்டிற்குள் செல்கிறானோ அந்த வீட்டு முதலாளியை நீங்கள் பார்த்து நான் என் சீடர்களுடன் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் கேட்கிறார் என்று சொல்லுங்கள் 15 அவன் கம்பளம் விரித்து ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற வசதியான மேல்வீட்டறையை உங்களுக்குக் காட்டுவான் அங்கே நமக்காக பஸ்காவை ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார் 16 அப்படியே அவருடைய சீடர்கள் புறப்பட்டு நகரத்தில்போய் தங்களுக்கு அவர் சொன்னபடியே பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள் 17 மாலைநேரத்தில் அவர் பன்னிரண்டுபேரோடு சேர்ந்து அந்த இடத்திற்கு வந்தார் 18 அவர்கள் பந்தி உட்கார்ந்து சாப்பிடும்போது இயேசு அவர்களைப் பார்த்து என்னோடு சாப்பிடுகிற உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் 19 அப்பொழுது அவர்கள் துக்கப்பட்டு நானோ நானோ என்று ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கத்தொடங்கினார்கள் 20 அவர் மறுமொழியாக என்னோடு பாத்திரத்தில் கையைவிடுகிற பன்னிரண்டுபேர்களில் ஒருவனே என்று சொல்லி 21 மனிதகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார் ஆனாலும் எந்த மனிதனால் மனிதகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ அந்த மனிதனுக்கு ஐயோ அந்த மனிதன் பிறக்காமல் இருந்திருந்தால் அவனுக்கு நல்லதாக இருக்கும் என்றார் 22 அவர்கள் சாப்பிடும்போது இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து அதைப் பிட்டு அவர்களுக்குக் கொடுத்து நீங்கள் வாங்கிப் புசியுங்கள் இது என்னுடைய சரீரமாக இருக்கிறது என்றார் 23 பின்பு பாத்திரத்தையும் எடுத்து ஸ்தோத்திரம்பண்ணி அதை அவர்களுக்குக் கொடுத்தார் அவர்களெல்லோரும் அதிலே பானம்பண்ணினார்கள் 24 அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து இது அநேகருக்காகச் சிந்தப்படுகிற புதிய உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாக இருக்கிறது 25 நான் தேவனுடைய ராஜ்யத்தில் புதிய இரசத்தைப் பானம்பண்ணும் நாள்வரை திராட்சைப்பழரசத்தை இனி நான் பானம்பண்ணுவதில்லை என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் 26 அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடினபின்பு ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள் 27 அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து மேய்ப்பனை வெட்டுவேன் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி இந்த இராத்திரியிலே நீங்களெல்லோரும் என்னால் இடறல் அடைவீர்கள் 28 ஆனாலும் நான் உயிரோடு எழுந்தபின்பு உங்களுக்கு முன்பாக கலிலேயாவிற்குப் போவேன் என்றார் 29 அதற்கு பேதுரு உமதுநிமித்தம் எல்லோரும் இடறல் அடைந்தாலும் நான் இடறல் அடையமாட்டேன் என்றான் 30 இயேசு அவனைப் பார்த்து இன்றைக்கு இந்த இராத்திரியிலே சேவல் இரண்டுமுறை கூவுகிறதற்கு முன்பு நீ மூன்றுமுறை என்னை மறுதலிப்பாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார் 31 அதற்கு அவன் நான் உம்மோடு மரித்துப்போவதாக இருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்று உறுதியாகச் சொன்னான் எல்லோரும் அப்படியே சொன்னார்கள் 32 பின்பு கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்தார்கள் அப்பொழுது அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து நான் ஜெபம்பண்ணும்வரை இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி 33 பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தம்மோடு கூட்டிக்கொண்டுபோய் கலக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார் 34 அப்பொழுது அவர் என் ஆத்துமா மரணத்திற்கான துக்கத்தில் உள்ளது நீங்கள் இங்கே தங்கி விழித்திருங்கள் என்று சொல்லி 35 சற்று தள்ளிப்போய் தரையிலே விழுந்து அந்த நேரம் தம்மைவிட்டுக் கடந்துபோகக்கூடுமானால் அது கடந்துபோகவேண்டும் என்று வேண்டிக்கொண்டு 36 அப்பா பிதாவே எல்லாம் உம்மாலே முடியும் இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடும் ஆனாலும் என்னுடைய விருப்பத்தின்படி அல்ல உம்முடைய விருப்பத்தின்படியே நடக்கட்டும் என்றார் 37 பின்பு அவர் வந்து அவர்கள் தூங்குகிறதைப் பார்த்து பேதுருவைப் பார்த்து சீமோனே தூங்குகிறாயா ஒருமணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா 38 நீங்கள் சோதனையில் விழாமலிருக்க விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள் ஆவி உற்சாகமுள்ளதுதான் சரீரமோ பலவீனமுள்ளது என்றார் 39 அவர் மீண்டும்போய் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார் 40 அவர் திரும்ப வந்தபோது அவர்கள் மீண்டும் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தார் அவர்களுடைய கண்கள் தூக்கமயக்கத்தில் இருந்ததால் தாங்கள் மறுமொழியாக அவருக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் இருந்தார்கள் 41 அவர் மூன்றாம்முறை வந்து இன்னும் நித்திரைசெய்து இளைப்பாறுகிறீர்களா போதும் நேரம்வந்தது இதோ மனிதகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறார் 42 என்னைக் காட்டிக்கொடுக்கிறவன் இதோ வந்துவிட்டான் எழுந்திருங்கள் போகலாம் என்றார் 43 உடனே அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான் அவனுடன் பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மூப்பர்களும் அனுப்பின மக்கள்கூட்டத்தினர் பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டுவந்தார்கள் 44 அவரைக் காட்டிக்கொடுக்கிறவன் நான் யாரை முத்தம் செய்கிறேனோ அவன்தான் அவனைப் பிடித்துக் கொண்டுபோங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான் 45 அவன் வந்தவுடனே இயேசுவின் அருகில் சென்று ரபீ ரபீ என்று சொல்லி அவரை முத்தம்செய்தான் 46 அப்பொழுது மக்கள்கூட்டத்தினர் அவர்மேல் கைபோட்டு அவரைப் பிடித்தார்கள் 47 அப்பொழுது அருகில் நின்ற சீடன் ஒருவன் கத்தியை உருவி பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காதை வெட்டினான் 48 இயேசு அவர்களைப் பார்த்து திருடனைப்பிடிக்கப் போகிறதைப்போல நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள் 49 நான் தினமும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன் அப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேற வேண்டியதாக இருக்கிறது என்றார் 50 அப்பொழுது எல்லோரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள் 51 ஒரு வாலிபன் ஒரு போர்வையைமட்டும் தன்மேல் போர்த்துக்கொண்டு அவர் பின்னால் போனான் அவனைப் பிடித்தார்கள் 52 அவன் தன் போர்வையைப் போட்டுவிட்டு நிர்வாணமாக அவர்களைவிட்டு ஓடிப்போனான் 53 இயேசுவை அவர்கள் பிரதான ஆசாரியனிடத்தில் கொண்டுபோனார்கள் அங்கே பிரதான ஆசாரியர்கள் மூப்பர்கள் வேதபண்டிதர்கள் எல்லோரும் கூடிவந்திருந்தார்கள் 54 பேதுரு தூரத்திலே அவருக்குப் பின்னேசென்று பிரதான ஆசாரியனுடைய அரண்மனைக்குள் வந்து காவலர்களுடன் உட்கார்ந்து நெருப்பின் அருகில் குளிர்க்காய்ந்துகொண்டிருந்தான் 55 அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் ஆலோசனை சங்கத்தினர்கள் அனைவரும் இயேசுவைக் கொலைசெய்கிறதற்கு அவருக்கு எதிராகச் சாட்சிகளைத் தேடினார்கள் சாட்சிசொல்ல ஒருவரும் வரவில்லை 56 அநேகர் அவருக்கு எதிராகப் பொய்சாட்சி சொல்லியும் அந்தச் சாட்சிகள் ஒத்துபோகவில்லை 57 அப்பொழுது சிலர் எழுந்து கைகளால் கட்டப்பட்ட இந்த தேவாலயத்தை நான் இடித்துப்போட்டு கைகளால் கட்டப்படாத வேறொன்றை மூன்று நாட்களுக்குள் கட்டுவேன் என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம் என்று 58 அவருக்கு எதிராகப் பொய்சாட்சி சொன்னார்கள் 59 அப்படிச் சொல்லியும் அவர்களுடைய சாட்சிகள் ஒத்துபோகவில்லை 60 அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நடுவே நின்று இயேசுவைப் பார்த்து இவர்கள் உனக்கு எதிராகச் சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான் 61 அவரோ ஒரு பதிலும் சொல்லாமல் மவுனமாக இருந்தார் மீண்டும் பிரதான ஆசாரியன் அவரைப் பார்த்து நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா என்று கேட்டான் 62 அதற்கு இயேசு நான் அவர்தான் மனிதகுமாரன் சர்வவல்லவரின் வலதுபக்கத்தில் உட்கார்ந்து இருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் பார்ப்பீர்கள் என்றார் 63 பிரதான ஆசாரியன் இதைக் கேட்டவுடனே தன் உடைகளைக் கிழித்துக்கொண்டு இதைவிட வேறுசாட்சிகள் நமக்கு வேண்டுமா 64 தேவனை அவமதிப்பதைக் கேட்டீர்களே இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றுக் கேட்டான் அதற்கு அவர்கள் எல்லோரும் இவன் மரணத்திற்குத் தகுதியானவன் என்று தீர்மானம்பண்ணினார்கள் 65 அப்பொழுது சிலர் அவர்மேல் துப்பவும் அவருடைய முகத்தை மூடவும் அவரை அடிக்கவும் தீர்க்கதரிசனம் சொல் என்று சொல்லவும் தொடங்கினார்கள் வேலைக்காரர்களும் அவரைக் கன்னத்தில் அறைந்தார்கள் 66 அந்தநேரத்தில் பேதுரு கீழே உள்ள அரண்மனை முற்றத்தில் இருக்கும்போது பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரிகளில் ஒரு பெண் வந்து 67 குளிர்க்காய்ந்துகொண்டிருந்த பேதுருவை உற்றுப்பார்த்து நீயும் நசரேயனாகிய இயேசுவோடு இருந்தவன் என்றாள் 68 அதற்கு அவன் எனக்கு ஒன்றும் புரியவில்லை நீ சொல்வது எனக்குத் தெரியாது என்று மறுதலித்து வாசல் மண்டபத்திற்கு வெளியேப் போனான் அப்பொழுது சேவல் கூவியது 69 வேலைக்காரி அவனை மீண்டும் பார்த்து இவன் அவர்களில் ஒருவன் என்று அருகே நின்றவர்களுக்குச் சொன்னாள் 70 அவன் மீண்டும் மறுதலித்தான் சிறிதுநேரத்திற்குப்பின்பு மீண்டும் அருகே நிற்கிறவர்கள் பேதுருவைப் பார்த்து உண்மையாகவே நீ அவர்களில் ஒருவன் நீ கலிலேயன் உன் பேச்சு அதற்கு ஒத்திருக்கிறது என்றார்கள் 71 அதற்கு அவன் நீங்கள் சொல்லுகிற மனிதனை எனக்குத் தெரியாது என்று சொல்லி சபிக்கவும் சத்தியம் செய்யவும் தொடங்கினான் 72 உடனே சேவல் இரண்டாம்முறை கூவியது சேவல் இரண்டுமுறை கூவுகிறதற்கு முன்பே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று இயேசு தனக்குச் சொன்ன வார்த்தையை பேதுரு நினைத்துப்பார்த்து மிகவும் அழுதான் Chapter 15அத்தியாயம்– 15 1 அதிகாலையிலே பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் வேதபண்டிதர்களும் ஆலோசனைச் சங்கத்தினர்கள் அனைவரும் கூடி ஆலோசனைபண்ணி காவலர்கள் இயேசுவின் கரங்களைக் கட்டிக் கொண்டுபோய் பிலாத்துவிடம் ஒப்புக்கொடுத்தார்கள் 2 பிலாத்து அவரைப் பார்த்து நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான் அதற்கு அவர் நீர் சொல்லுகிறபடிதான் என்றார் 3 பிரதான ஆசாரியர்கள் இயேசுவின்மேல் அதிகமாகக் குற்றங்களைச் சுமத்தினார்கள் அவரோ அதற்கு பதில் ஒன்றும் சொல்லவில்லை 4 அப்பொழுது பிலாத்து மீண்டும் அவரைப் பார்த்து இதோ இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சுமத்துகிறார்களே அதற்கு நீ பதில் ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான் 5 இயேசுவோ அப்பொழுதும் பதில் ஒன்றும் சொல்லவில்லை அதினால் பிலாத்து ஆச்சரியப்பட்டான் 6 பண்டிகைநாட்களில் காவலில் உள்ள யாரை விடுதலையாக்கவேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொள்கிறார்களோ அவனை அவர்களுக்காக விடுதலைபண்ணுவது பிலாத்துவிற்கு வழக்கமாக இருந்தது 7 கலவரம்பண்ணி அந்தக் கலவரத்திலே கொலைசெய்து அதற்காகக் காவலில் அடைக்கப்பட்டவர்களின் கூட்டத்தில் பரபாஸ் என்னப்பட்ட ஒருவன் இருந்தான் 8 மக்கள் வழக்கத்தின்படியே தங்களுக்கு ஒருவனை விடுதலையாக்கவேண்டும் என்று சத்தமிட்டுக் கேட்கத்தொடங்கினார்கள் 9 பொறாமையினாலே பிரதான ஆசாரியர்கள் அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து 10 அவர்களைப் பார்த்து நான் யூதர்களுடைய ராஜாவை உங்களுக்கு விடுதலை செய்யவேண்டுமா என்று கேட்டான் 11 பரபாசைத் தங்களுக்காக விடுதலை செய்யவேண்டும் என்று கேட்கச்சொல்லி பிரதான ஆசாரியர்கள் மக்களைத் தூண்டிவிட்டார்கள் 12 பிலாத்து மீண்டும் அவர்களைப் பார்த்து அப்படியானால் யூதர்களுடைய ராஜாவென்று நீங்கள் சொல்லுகிறவனை நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான் 13 அவனைச் சிலுவையில் அறையும் என்று மீண்டும் சத்தமிட்டுச் சொன்னார்கள் 14 அதற்கு பிலாத்து ஏன் இவன் என்னக் குற்றம் செய்தான் என்றான் அவர்களோ அவனைச் சிலுவையில் அறையும் என்று அதிகமாகக் கூக்குரலிட்டுச் சொன்னார்கள் 15 அப்பொழுது பிலாத்து மக்களைப் பிரியப்படுத்த மனதுள்ளவனாக பரபாசை அவர்களுக்காக விடுதலைசெய்து இயேசுவை சாட்டையினால் அடித்து சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான் 16 அப்பொழுது போர்வீரர்கள் அவரைத் தேசாதிபதியின் அரண்மனையாகிய மாளிகையில் கொண்டுபோய் அந்த இடத்தில் போர்வீரர்களைக் கூடிவரச்செய்து 17 சிவப்பான மேல் அங்கியை அவருக்கு உடுத்தி முள்முடியைப் பின்னி அவருக்கு அணிவித்து 18 யூதர்களுடைய ராஜாவே வாழ்க என்று அவரை வாழ்த்தி 19 அவர் தலையில் கோலால் அடித்து அவர்மேல் துப்பி முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள் 20 அவரைப் பரிகாசம்பண்ணினபின்பு சிவப்பான அங்கியைக் கழற்றி அவருடைய ஆடைகளை அவருக்கு உடுத்தி அவரை சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள் 21 சிரேனே ஊரானும் அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அந்த வழியே வரும்போது இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவனைக் கட்டாயப்படுத்தினார்கள் 22 கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்திற்கு அவரைக் கொண்டுபோய் 23 வெள்ளைப்போளம் கலந்த திராட்சைரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை 24 அப்பொழுது அவரை சிலுவையில் அறைந்தார்கள் அதற்குப்பின்பு அவருடைய ஆடைகளைப் பங்கு போட்டு ஒவ்வொருவனும் ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொள்ளச் சீட்டுப்போட்டார்கள் 25 அவரைக் காலை ஒன்பது மணிக்குச் சிலுவையில் அறைந்தார்கள் 26 அவரை சிலுவையில் அறைந்ததின் காரணத்தைக் காண்பிப்பதற்காக யூதர்களுடைய ராஜா என்று எழுதி சிலுவையில் இயேசுவின் தலைக்குமேலே கட்டினார்கள் 27 இயேசுவோடு அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும் இடதுபக்கத்தில் ஒருவனுமாக இரண்டு திருடர்களைச் சிலுவைகளில் அறைந்தார்கள் 28 அக்கிரமம் செய்கிறவர்களில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் அதினால் நிறைவேறியது. 29 அந்தவழியாக நடந்துபோகிறவர்கள் தங்களுடைய தலைகளைத் துலுக்கி ஆ ஆ தேவாலயத்தை இடித்து மூன்று நாட்களுக்குள்ளே கட்டுகிறவனே 30 உன்னை நீயே இரட்சித்துக்கொள் சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரை அவமதித்தார்கள் 31 அப்படியே பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் தங்களுக்குள்ளே பரிகாசம்பண்ணி இவன் மற்றவர்களை இரட்சித்தான் தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ள முடியவில்லை 32 நாம் பார்த்து விசுவாசிக்க இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையில் இருந்து இறங்கிவரட்டும் என்று சொல்லிக்கொண்டார்கள் அவருடன் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை அவமதித்தார்கள் 33 நண்பகல் தொடங்கி மாலை மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் இருள் உண்டாயிருந்தது 34 மாலை மூன்று மணியளவில் இயேசு எலோயீ எலோயீ லாமா சபக்தானி என்று அதிகச் சத்தமிட்டுக் கூப்பிட்டார் அதற்கு என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தம் 35 அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது இதோ எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள் 36 ஒருவன் ஓடி கடல் காளானைக் காடியிலே தோய்த்து அதை ஒரு கோலில் மாட்டி அவருக்குக் குடிக்கக்கொடுத்து பொறுங்கள் எலியா இவனைக் கீழே இறக்க வருவானோ பார்க்கலாம் என்றான் 37 இயேசு அதிக சத்தமாகக் கூப்பிட்டு ஜீவனை விட்டார் 38 அப்பொழுது தேவாலயத்தின் திரைச்சீலை மேலே இருந்து கீழே வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது 39 அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைப் பார்த்தபோது உண்மையாகவே இந்த மனிதன் தேவனுடைய குமாரன் என்றான் 40 சில பெண்களும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள் அவர் கலிலேயாவில் இருந்தபோது அவரோடு சென்று அவருக்கு ஊழியம் செய்த மகதலேனா மரியாளும் சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும் சலோமே என்பவளும் 41 அவரோடு எருசலேமுக்கு வந்திருந்த மற்ற பெண்களும் அவர்களோடு இருந்தார்கள் 42 ஓய்வுநாளுக்கு முந்தினநாள் ஆயத்தநாளாக இருந்தபடியால் மாலைநேரத்தில் 43 மதிப்புமிக்கஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரைச்சேர்ந்தவனும் தேவனுடைய ராஜ்யத்தின் வருகைக்காக காத்திருந்த யோசேப்பு என்பவன் வந்து பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய் இயேசுவின் சரீரத்தைக் கேட்டான் 44 அவர் இவ்வளவு சீக்கிரமாக மரித்துவிட்டார் என்று பிலாத்து ஆச்சரியப்பட்டு நூற்றுக்கு அதிபதியை அழைத்து அவர் இவ்வளவு சீக்கிரத்தில் மரித்தது உண்மையா என்று கேட்டான் 45 நூற்றுக்கு அதிபதியின் மூலம் அதைத் தெரிந்துகொண்டபின்பு சரீரத்தை யோசேப்பிடம் கொடுத்தான் 46 அவன்போய் மெல்லிய போர்வையை வாங்கிக்கொண்டுவந்து அவரை இறக்கி அந்தத் போர்வையிலே சுற்றி கன்மலையில் வெட்டியிருந்த கல்லறையிலே அவரை வைத்து கல்லறையின் வாசலில் ஒரு கல்லைப் புரட்டி வைத்தான் 47 அவரை வைத்த இடத்தை மகதலேனா மரியாளும் யோசேயின் தாயாகிய மரியாளும் பார்த்தார்கள் Chapter 16அத்தியாயம்– 16 1 ஓய்வுநாளுக்குப்பின்பு மகதலேனா மரியாளும் யாக்கோபின் தாயாகிய மரியாளும் சலோமே என்பவளும் அவருக்கு வாசனைத் திரவியங்களை வாங்கிக்கொண்டு 2 வாரத்தின் முதலாம்நாளின் அதிகாலையிலே சூரியன் உதிக்கிறபோது கல்லறைக்கு வந்து 3 கல்லறையின் வாசலில் இருக்கிற கல்லை நமக்காக யார் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள் 4 அந்தக் கல் மிகவும் பெரிதாக இருந்தது அவர்கள் பார்த்தபோது அந்தக் கல் தள்ளப்பட்டிருப்பத்தைப் பார்த்தார்கள் 5 அவர்கள் கல்லறைக்குள் சென்று வெள்ளை அங்கி அணிந்த ஒரு வாலிபன் வலதுபக்கத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து பயந்தார்கள் 6 அவன் அவர்களைப் பார்த்து பயப்படாமல் இருங்கள் சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள் அவர் உயிரோடு எழுந்தார் அவர் இங்கே இல்லை இதோ அவரை வைத்த இடம் 7 நீங்கள் அவருடைய சீடர்களிடமும் பேதுருவிடமும்போய் உங்களுக்கு முன்னே அவர் கலிலேயாவிற்குப் போகிறார் அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைப் பார்ப்பீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான் 8 அவர்கள் பயந்து நடுங்கி சீக்கிரமாக வெளியே வந்து கல்லறையைவிட்டு ஓடினார்கள் அவர்கள் பயந்திருந்தபடியால் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லாமல் போனார்கள் 9 வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு உயிரோடு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதலாக தரிசனமானார். 10 அவளிடமிருந்து அவர் ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார். அவள் புறப்பட்டுப்போய், இயேசுவுடன் இருந்தவர்கள் துக்கப்பட்டு அழுதுகொண்டிருக்கும்போது, அவர்களுக்கு அந்தச் செய்தியைச் சொன்னாள். 11 அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் அவள் இயேசுவைப் பார்த்தாள் என்றும் அவள் சொன்னபோது, இவர்கள் நம்பவில்லை. 12 அதற்குப்பின்பு அவர்களில் இரண்டுபேர் ஒரு கிராமத்திற்கு நடந்து போகிறபொழுது அவர்களுக்கு வேறு உருவத்தில் தரிசனமானார். 13 அவர்களும்போய், அதை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்களையும் அவர்கள் நம்பவில்லை. 14 அதற்குப்பின்பு பதினொருபேரும் சாப்பிடும்போது அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிரோடு எழுந்திருந்த அவரைப் பார்த்தவர்களை அவர்கள் நம்பாமல் போனதினால் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும் அவர்களைக் கடிந்துகொண்டார். 15 பின்பு, அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் உலகமெங்கும்போய், எல்லோருக்கும் நற்செய்தியைப் பிரசங்கம்பண்ணுங்கள். 16 விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசிக்காதவனோ தண்டனைக்குள்ளாவான். 17 விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்கள் என்னவென்றால்: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; புதிய மொழிகளைப் பேசுவார்கள்; 18 சர்ப்பங்களை எடுப்பார்கள்; மரணத்திற்குரிய எதைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; நோயாளிகளின்மேல் கரங்களை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சுகமடைவார்கள் என்றார். 19 இவ்விதமாக கர்த்தர் அவர்களோடு பேசினபின்பு, பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்தார். 20 சீடர்கள் புறப்பட்டுப்போய், எல்லா இடங்களிலும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்கள் மூலம் கிரியைசெய்து, அவர்களால் நடந்த அற்புத அடையாளங்களினால் வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்.