அத்தியாயம் 12
ஞானியின் செயல்கள் 
1 புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; 
கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன். 
2 நல்லவன் யெகோவாவிடத்தில் தயவு பெறுவான்; 
கெட்டசிந்தனைகளுள்ள மனிதனை அவர் தண்டனைக்கு உட்படுத்துவார். 
3 துன்மார்க்கத்தினால் மனிதன் நிலைவரப்படமாட்டான்; 
நீதிமான்களுடைய வேரோ அசையாது. 
4 குணசாலியான பெண் தன்னுடைய கணவனுக்கு கிரீடமாக இருக்கிறாள்; 
அவமானத்தை உண்டாக்குகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாக இருக்கிறாள். 
5 நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள்; 
துன்மார்க்கர்களுடைய ஆலோசனைகளோ வஞ்சனையுள்ளவைகள். 
6 துன்மார்க்கர்களின் வார்த்தைகள் இரத்தம் சிந்த மறைந்திருப்பதைப்பற்றியது; 
உத்தமர்களுடைய வாயோ அவர்களைத் தப்புவிக்கும். 
7 துன்மார்க்கர்கள் கவிழ்க்கப்பட்டு ஒழிந்துபோவார்கள்; 
நீதிமான்களுடைய வீடோ நிலைநிற்கும். 
8 தன்னுடைய புத்திக்குத் தகுந்தபடி மனிதன் புகழப்படுவான்; 
மாறுபாடான இருதயமுள்ளவனோ இகழப்படுவான். 
9 உணவில்லாதவனாக இருந்தும், 
தன்னைத்தான் மேன்மைப்படுத்துகிறவனைவிட, 
மேன்மை இல்லாதவனாக இருந்தும் பணிவிடைக்காரனுள்ளவன் உத்தமன். 
10 நீதிமான் தன்னுடைய மிருகஜீவன்களைக் காப்பாற்றுகிறான்; 
துன்மார்க்கர்களுடைய இரக்கமும் கொடுமையே. 
11 தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவன் உணவினால் திருப்தியடைவான்; 
வீணர்களைப் பின்பற்றுகிறவனோ மதியற்றவன். 
12 துன்மார்க்கன் கெட்டவர்களுடைய வலையை விரும்புகிறான்; 
நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும். 
13 துன்மார்க்கனுக்கு அவனுடைய உதடுகளின் துரோகமே கண்ணி; 
நீதிமானோ நெருக்கத்திலிருந்து நீங்குவான். 
14 அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; 
அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும். 
15 மதியீனனுடைய வழி அவனுடைய பார்வைக்குச் செம்மையாக இருக்கும்; 
ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன். 
16 மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; 
அவமானத்தை மூடுகிறவனோ விவேகி. 
17 சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; 
பொய்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான். 
18 பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; 
ஞானமுள்ளவர்களுடைய நாவோ மருந்து. 
19 சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; 
பொய்நாவோ ஒரு நிமிடம்மாத்திரம் இருக்கும்; 
20 தீங்கை திட்டமிடுகிறவர்களின் இருதயத்தில் கபடம் இருக்கிறது; 
சமாதானம்செய்கிற ஆலோசனைக்காரர்களுக்கு உள்ளது சந்தோஷம். 
21 நீதிமானுக்கு ஒரு கேடும் வராது; 
துன்மார்க்கர்களோ தீமையினால் நிறையப்படுவார்கள். 
22 பொய் உதடுகள் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; 
உண்மையாக நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம். 
23 விவேகமுள்ள மனிதன் அறிவை அடக்கிவைக்கிறான்; 
மூடர்களுடைய இருதயமோ மதியீனத்தைப் பிரபலப்படுத்தும். 
24 ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும்; 
சோம்பேறியோ கட்டாயமாக வேலை வாங்கப்படுவான். 
25 மனிதனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; 
நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும். 
26 நீதிமான் தன்னுடைய அயலானைவிட மேன்மையுள்ளவன்; 
துன்மார்க்கர்களுடைய வழியோ அவர்களை மோசப்படுத்தும். 
27 சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை; 
ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது. 
28 நீதியின் பாதையில் வாழ்வு உண்டு; 
அந்தப் பாதையில் மரணம் இல்லை.