அத்தியாயம் 12
துதியின் பாடல்கள் 
 1 அக்காலத்திலே நீ சொல்வது: 
“யெகோவாவே, நான் உம்மைத் துதிப்பேன்; 
நீர் என்மேல் கோபமாயிருந்தீர்; ஆனாலும் உம்முடைய கோபம் நீங்கியது; 
நீர் என்னைத் தேற்றுகிறீர். 
 2 இதோ, தேவனே என் இரட்சிப்பு; 
நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; 
கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; 
அவரே எனக்கு இரட்சிப்புமானவர். 
 3 நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து 
மகிழ்ச்சியுடன் தண்ணீர் மொண்டுகொள்வீர்கள். 
 4 அக்காலத்திலே நீங்கள் சொல்வது: 
யெகோவாவை துதியுங்கள்; 
அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்; 
அவருடைய செய்கைகளை மக்களுக்குள்ளே அறிவியுங்கள்; 
அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம் செய்யுங்கள். 
 5 யெகோவாவைக் கீர்த்தனம்செய்யுங்கள், 
அவர் மகத்துவமான செயல்களைச் செய்தார்; 
இது பூமியெங்கும் அறியப்படக்கடவது என்பீர்கள். 
 6 சீயோனில் குடியிருக்கிறவளே, 
நீ சத்தமிட்டுக் கெம்பீரி; 
இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.”