சங்கீதம் 46
அலமோத் என்னும் கருவியில் வாசிக்கும்படி கொடுக்கப்பட்ட கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு, ஒரு பாடல். 
 1 தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், 
ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர். 
 2 ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுக்கடலில் சாய்ந்துபோனாலும், 
 3 அதின் தண்ணீர்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் மலைகள் அதிர்ந்தாலும், 
நாம் பயப்படமாட்டோம். (சேலா) 
 4 ஒரு நதியுண்டு, அதின் நீரோடைகள் தேவனுடைய நகரத்தையும், 
உன்னதமான தேவன் தங்கும் பரிசுத்தஸ்தலத்தையும் சந்தோஷப்படுத்தும். 
 5 தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; 
அதிகாலையிலே தேவன் அதற்கு உதவி செய்வார். 
 6 தேசங்கள் கொந்தளித்தது, ராஜ்ஜியங்கள் தத்தளித்தது; 
அவர் தமது சத்தத்தை முழங்கச்செய்தார், பூமி உருகிப்போனது. 
 7 சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்; 
யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா) 
 8 பூமியிலே அழிவுகளை நடப்பிக்கிற யெகோவாவுடைய செய்கைகளை வந்துபாருங்கள். 
 9 அவர் பூமியின் கடைசிவரை யுத்தங்களை ஓயச்செய்கிறார்; 
வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; 
இரதங்களை * கேடகங்களை மரத்தினாலும் தோலினாலும் செய்யப்பட்டதாயிருந்தது எரிந்து போக கூடியதாய் இருந்தது.  நெருப்பினால் சுட்டெரிக்கிறார். 
 10 நீங்கள் யுத்தம் செய்யாமலிருந்து, 
நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள் என்று தேவன் சொல்லுகிறார்; 
தேசங்களுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன். 
 11 சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார், 
யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர் (சேலா). 
*சங்கீதம் 46:9 கேடகங்களை மரத்தினாலும் தோலினாலும் செய்யப்பட்டதாயிருந்தது எரிந்து போக கூடியதாய் இருந்தது.