சங்கீதம் 100
நன்றிப்பாடல். 
 1 பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடுங்கள். 
 2 மகிழ்ச்சியோடு யெகோவாவுக்கு ஆராதனைசெய்து, 
ஆனந்தசத்தத்தோடு அவர் முன்பாக வாருங்கள். 
 3 யெகோவாவே தேவனென்று அறியுங்கள்; 
நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; 
நாம் அவர் மக்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாக இருக்கிறோம். 
 4 அவர் வாசல்களில் துதியோடும், அவர் முற்றங்களில் புகழ்ச்சியோடும் நுழைந்து, அவரைத் துதித்து, 
அவருடைய பெயருக்கு நன்றிசெலுத்துங்கள். 
 5 யெகோவா நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், 
அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.