சங்கீதம் 123
ஆரோகண பாடல். 
 1 பரலோகத்தில் இருக்கிறவரே, 
உம்மிடத்திற்கு என்னுடைய கண்களை ஏறெடுக்கிறேன். 
 2 தங்களுடைய எஜமான்களின் கையை நோக்கியிருப்பதுபோலவும், 
வேலைக்காரியின் கண்கள் தன்னுடைய எஜமானியின் கையை நோக்கியிருப்பதுபோலவும், 
எங்கள் தேவனாகிய யெகோவா எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், 
எங்களுடைய கண்கள் அவரை நோக்கியிருக்கிறது. 
 3 எங்களுக்கு இரங்கும் யெகோவாவே, 
எங்களுக்கு இரங்கும்; 
அவமானத்தினால் மிகவும் நிறைந்திருக்கிறோம். 
 4 சுகமாக வாழ்கிறவர்களுடைய அவமானத்தினாலும், 
அகங்காரிகளுடைய இகழ்ச்சியினாலும், 
எங்களுடைய ஆத்துமா மிகவும் நிறைந்திருக்கிறது.