சங்கீதம் 142
குகையிலிருந்த போது தாவீதின் பாடல், ஜெபம். 
 1 யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; 
யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன். 
 2 அவருக்கு முன்பாக என்னுடைய சஞ்சலத்தை ஊற்றுகிறேன்; 
அவருக்கு முன்பாக என்னுடைய நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன். 
 3 என்னுடைய ஆவி என்னில் தியங்கும்போது, 
நீர் என்னுடைய பாதையை அறிந்திருக்கிறீர்; 
நான் நடக்கிற வழியில் மறைவாக எனக்குக் கண்ணிவைத்தார்கள். 
 4 வலதுபக்கமாகக் கண்ணோக்கிப் பாரும், 
என்னை அறிவார் ஒருவரும் இல்லை; 
எனக்கு அடைக்கலமில்லாமற் போனது; 
என்னுடைய ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை. 
 5 யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; 
நீரே என் அடைக்கலமும், 
உயிருள்ளோர் தேசத்திலே என்னுடைய பங்குமாக இருக்கிறீர் என்றேன். 
 6 என்னுடைய கூக்குரலுக்குச் செவிகொடும், 
நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்; 
என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும், 
அவர்கள் என்னிலும் பலவான்களாக இருக்கிறார்கள். 
 7 உமது பெயரை நான் துதிக்கும்படி, 
என்னுடைய ஆத்துமாவைக் காவலுக்கு நீங்கலாக்கிவிடும்; 
எனக்கு நீர் தயவு செய்யும்போது 
நீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளுவார்கள்.