சங்கீதம் 146
 1 அல்லேலூயா, என்னுடைய ஆத்துமாவே, 
யெகோவாவை துதி. 
 2 நான் உயிரோடிருக்கும்வரை யெகோவாவை துதிப்பேன்; 
நான் உள்ளளவும் என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன். 
 3 பிரபுக்களையும், இரட்சிக்கப் பெலனில்லாத மனிதர்களையும் நம்பவேண்டாம். 
 4 அவனுடைய ஆவி பிரியும், அவன் தன்னுடைய மண்ணுக்குத் திரும்புவான்; 
அந்த நாளிலே அவனுடைய யோசனைகள் அழிந்துபோகும். 
 5 யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, 
தன் தேவனாகிய யெகோவாமேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான். 
 6 அவர் வானத்தையும் பூமியையும் கடல்களையும் அவைகளிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினவர்; 
அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர். 
 7 அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; 
பசியாக இருக்கிறவர்களுக்கு உணவுகொடுக்கிறார்; 
கட்டப்பட்டவர்களைக் யெகோவா விடுதலையாக்குகிறார். 
 8 குருடர்களின் கண்களைக் யெகோவா திறக்கிறார்; 
விழுந்தவர்களைக் யெகோவா தூக்கிவிடுகிறார். 
நீதிமான்களைக் யெகோவா நேசிக்கிறார். 
 9 அந்நியர்களைக் யெகோவா காப்பாற்றுகிறார்; 
அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்; 
துன்மார்க்கர்களின் வழியையோ கவிழ்த்துப் போடுகிறார். 
 10 யெகோவா எல்லாக் காலங்களிலும் அரசாளுகிறார்; 
சீயோனே, உன்னுடைய தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம்செய்கிறார். 
அல்லேலூயா.