சங்கீதம் 149
 1 அல்லேலூயா, யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; 
பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி வெளிப்படட்டும். 
 2 இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், 
மகன்களாகிய சீயோன் தங்களுடைய ராஜாவில் சந்தோஷப்படட்டும். 
 3 அவருடைய பெயரை நடனத்தோடு துதித்து, 
தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரை புகழ்ந்துபாட வேண்டும். 
 4 யெகோவா தம்முடைய மக்களின்மேல் பிரியம் வைக்கிறார்; 
சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார். 
 5 பரிசுத்தவான்கள் மகிமையோடு சந்தோஷப்பட்டு, 
தங்களுடைய படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள். 
 6 தேசங்களிடத்தில் பழிவாங்கவும், மக்களைத் தண்டிக்கவும், 
 7 அவர்களுடைய ராஜாக்களைச் சங்கிலிகளாலும், 
அவர்களுடைய மேன்மக்களை இரும்பு விலங்குகளாலும் கட்டவும், 
எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள்மேல் செலுத்தவும், 
 8 அவர்களுடைய வாயில் யெகோவாவை உயர்த்தும் துதியும், 
அவர்களுடைய கையில் இருபுறமும் கூர்மையுள்ள வாளும் இருக்கும். 
 9 இந்த மரியாதை அவருடைய பரிசுத்தவான்கள் அனைவருக்கும் உண்டாகும். 
அல்லேலூயா.