சங்கீதம் 23
தாவீதின் பாடல். 
 1 யெகோவா என் மேய்ப்பராக இருக்கிறார்; 
நான் தாழ்ச்சி அடையமாட்டேன். 
 2 அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, 
அமர்ந்த தண்ணீர்கள் அருகில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார். 
 3 அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய பெயரினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். 
 4 நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் 
பொல்லாப்புக்குப் பயப்படமாட்டேன்; 
ஏனெனில் தேவனே நீர் என்னோடு இருக்கிறீர்; 
உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். 
 5 என்னுடைய எதிரிகளுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, 
என்னுடைய தலையை எண்ணெயால் அபிஷேகம்செய்கிறீர்; 
என்னுடைய பாத்திரம் நிரம்பி வழிகிறது * லூக்கா 7:46.  . 
 6 என் உயிருள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; 
நான் யெகோவாவுடைய வீட்டிலே நீடித்த நாட்களாக நிலைத்திருப்பேன்.