சங்கீதம் 24
தாவீதின் பாடல். 
 1 பூமியும் அதின் நிறைவும், 
உலகமும் அதிலுள்ள குடிமக்கள் யாவும் யெகோவாவுடையவை. 
 2 ஏனெனில் அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, 
அதை நதிகளுக்கு மேலாக நிறுவினார். 
 3 யார் யெகோவாவுடைய மலையில் * இந்த மலையின் மேல் தான் தேவாலயம் கட்டப்பட்டிருந்தது. சீயோன் மலையில் ஏறி ஆலயத்தில் பிரவேசித்தது ஆண்டவரை ஆராதிப்பதாகும்  ஏறுவான்? 
யார் அவருடைய பரிசுத்த இடத்தில் பிரவேசிப்பான்? † நிலைநிற்பான்  
 4 கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் தூய்மை உள்ளவனுமாக இருந்து, 
தன்னுடைய ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடுக்காமலும், 
பொய்யாக ஆணையிடாமலும் இருக்கிறவனே. 
 5 அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், 
தன்னுடைய இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான். 
 6 இதுவே அவரைத் தேடி விசாரித்து, 
அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி. (சேலா) 
 7 வாசல்களே, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள்; 
நித்திய கதவுகளே, உயருங்கள்; மகிமையின் இராஜா உள்ளே நுழைவார். 
 8 யார் இந்த மகிமையின் இராஜா? 
அவர் வல்லமையும் பராக்கிரமமும் உள்ள யெகோவா; 
அவர் யுத்தத்தில் பராக்கிரமமும் உள்ள கர்த்தராமே. 
 9 வாசல்களே, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள்; 
நித்திய கதவுகளே, உயருங்கள், மகிமையின் இராஜா உள்ளே நுழைவார். 
 10 யார் இந்த மகிமையின் இராஜா? 
அவர் சேனைகளின் யெகோவா; 
அவரே மகிமையின் இராஜா (சேலா). 
*சங்கீதம் 24:3 இந்த மலையின் மேல் தான் தேவாலயம் கட்டப்பட்டிருந்தது. சீயோன் மலையில் ஏறி ஆலயத்தில் பிரவேசித்தது ஆண்டவரை ஆராதிப்பதாகும்
†சங்கீதம் 24:3 நிலைநிற்பான்